Thursday, April 21, 2005

சந்தரமுகி 'பஞ்ச் டயலாக்'

சந்தரமுகி விமர்சனம் எழுதியோ, திரைப்படம் பார்க்க சென்று வந்த அனுபவத்தையோ எழுதியோ பிறவி பயனை அடைய எனக்கும் ஆசை தான். இருந்தாலும் , நான் எழுதுவதை எப்பொழுதாவது படிக்கும் ஒன்றிரண்டு வாசக நெஞ்சங்கள் பல விமர்சங்களை படித்து குழம்பியிருக்கும் நிலையில் , மேலும் படுத்தாமல்நம்மால் ஆன உதவியாக அதை செய்யாமல் விட்டு விடிடுகிறேன்.

சியாட்டல் ( ரெட்மண்D) திரையரங்கில் , முதலில் சென்ற ஒரு சிலர் ,ஊரில் தெரிந்த அனைவருக்கும் சீட் பிடிக்கிறேன் பேர்வழி என்று , புறம்போக்கு நிலம் போல பல வரிசை இருக்கைகளை துண்டு போட்டு பிடித்து வைக்க , அடுத்த வந்த சிலர் , முன்னுரிமை கேட்டு போராட , கடைசியாகா டிக்கெட் வாங்கியும் , இருக்கை கிடைக்காமல் பலர் திரும்பி விட்டனர்.

அதனால் , அடுத்த நாள் அலுவலகத்தில் அதைப் பற்றி சூடான விவாதம் மின்னஞ்சல் குழுவில் இடம் பெற்றது. சந்தடி சாக்கில் , படம் பார்க்காத ஒருவர் படத்தில் 'பஞ்ச் டயலாக்'இல்லையாமே , படம் எப்படி இருந்தது என்று வினவ , அடுத்தவரின் பதில் இது

eppudu choodu.......I will give you one ....(Stepping in For RAJINI)
Munnadiye vanthu seetu pudicha 'family'um.......Avangaloda seetukku sandapodara 'family'um ozhunga padam pathatha saritharame illa.......


மின்அஞ்சல்கள் குவிவதை பார்த்த அடுத்தவர் , எப்பொழுதும் மின் அஞ்சலே வராத இந்த (தமிழ்) குழுவில் , இத்தனை ஈ-மெயில்களா என்று கடுப்படிக்கதிரையரங்கும் நிறைந்து வழிவதானாலும் , மெயில் பாக்ஸ் நிறைந்து வழிவதானாலும் , அதற்கு காரணம் தலைவர் தான் என்றார் மற்றொருவர்.

மொத்தத்தில் , எனக்கு ஒரே டிக்கெட்டில் 3 படம் பார்த்த திருப்தி.நீண்ட நாட்களுக்குப் பின் , அபரிமிதான வெற்றி பெற்ற ரஜினி படம் , அருமையான கதைப் பின்னணி கொண்ட ஒரு நல்ல சஸ்பென்ஸ் திரில்லர் படம் தமிழில் பார்த்த திருப்தி(ஒரிஜினல் கதை/படம் பண்ணியவர்களுக்கு ஒரு ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ..........), பக்கா மசாலா வாசு படம் ( அட்டகாசமான திரைக்கதை , இயக்கம் , இசை , நீண்ட நாட்கள் கழித்து SPBயின் குரலிசை)

படம் பார்த்து என் பெண்ணிற்கு காய்ச்சல். எனக்கும் ஜோவின் முட்டை கண் இரவில் வந்து பயமுறுத்தியது. லக்கலக்கலக்கல்க்கல்க...


பி.கு.: நான் விமர்சனம் எழுதும் பலரைப் போல நல்ல திரைப் பட ரசிகன் இல்லை. ரஜினி biased ரசிகன்.

4 comments:

rajkumar said...

kalakkal meyyappan. unnoda pakkamudiyathathuthaan kurai.

Anonymous said...

மெயில் பாக்ஸ் நிறைந்து வழிவதானாலும் , அதற்கு காரணம் தலைவர் தான் என்றார் மற்றொருவர்

-That is Thalaivar

Mey said...

punch dialog enru naan kuRippittathu , email paRRi.
Rajini & Jo iraNduperumee lakalakalaka - attakasamana expression.

Unknown said...

andha lakkalakka romba "out of place"-aa illa? jyothika raathrila ennaiyum bayamurutharudhu unmai dhan. yabba andha first scene-ai nenaichaley dhikkunu irukku.