Sunday, February 24, 2008

கர்வம்

முதுகெலும்பை நிமிர்த்தி
நேர்கொண்ட பார்வை
தரும் எனில்
தவறில்லை சற்றே
கர்வம் கொள்வாய் நீ!
அது முதுகெலும்பை முறிக்கும்
சுமையாகும் முன்..

திறமையின் சிகரமாய்
அழகூட்டும் அணியாய்
இருக்கும் எனில்
தவறில்லை சற்றே
கர்வம் கொள்வாய் நீ!
அது கண் மறைக்கும்
கடிவாளமாகும் முன்...

இயலுமென எதையும்
தொடங்கும் தைரியம்
தரும் எனில்
தவறில்லை சற்றே
கர்வம் கொள்வாய் நீ!
அது தெரியும் என்ற
அறியாமையை அடையும் முன்..

பொருந்தாத சட்டையில்
பொதிந்திருக்கும் குழந்தை அல்ல
என உன் உருவம் நீ அறிய
கர்வத்தையும் கற்று மற
அது நம்பிக்கையின் திரிபு எனில்

புலித்தோல் போர்த்த விரும்பிய
பசுவாய்...