Sunday, April 16, 2006

தமிழ் புத்தாண்டு

வட மொழி தாங்கி வரும் 60 வருட சுழற்சி தமிழ் பஞ்சாங்க முறை மற்றும் இன்றைய கால கட்டத்தில் கொண்டாடப்படும் தமிழ் புத்தாண்டு தினம் , உண்மையிலேயே தமிழரின் புத்தாண்டு இல்லை என்று எப்பொழுதோ படித்த திராவிட கழக பத்திரிக்கை கட்டுரை ஒவ்வொரு முறையும் ஞாபகம் வந்து விடும். ஆனால் இந்தியா முழுவதும் பல வடிவங்களில் இந்த பண்டிகை கொண்டாடப்படுவது பற்றிய மின்னஞ்சலை படித்த பொழுது , தமிழ் புத்தாண்டாய் பண்டைய காலத்தில் கொண்டாடப் படாவிட்டாலும், வேறு ஏதோ ஒரு வகையில் திருநாளாய் இருந்திருக்கும் என்றே தோன்றுகிறது. அதனால் இந்த வருடம் விடுப்பு எடுத்து சிறப்பாக தூக்கம் போட்டு தமிழ் புத்தாண்டை கொண்டாடினேன்.

அஸ்ஸாமில் ரங்கோலி உத்சவ்
பிகாரில் வைஷாஹா
கேரளாவில் விஷு
பஞ்சாபில் பைசாஹி
மேற்கு வங்காளத்தில் நப பர்ஷோ
ஆந்திரா, கர்நாடகாவில் யுகாதி
மஹாரஷ்டிரத்தில் குடிபட்வா
ஒரிஸ்ஸாவில் மஹாவிசுப்ஹ சங்கராந்தி

Monday, April 03, 2006

தானிய கிடங்கு தந்த பாடம்

டக் பர்கம்(Doug Burgum)மின் கன்வர்ஜென்ஸ் நிகழ்ச்சியின் பேச்சு என்னை மிகவும் நெகிழ்வடையச் செய்தது. அவர் தனது தந்தை மற்றும் மூதாதையரின் தானிய கிடங்கு (Grain elevator) வணிகத்திலிருந்து கற்றுக் கொண்ட தொழில் ரகசியத்தை இந்த பேச்சில் குறிப்பிட்ட விதம் மற்றும் இடம் ( listen to the talk starting from 38 minutes till 50 minutes at least , if you can't listen to the whole talk) , மிக அருமை. பரஸ்பர நம்பிக்கை மற்றும் நேர்மை தான் தொழிலின் வெற்றியின் அடித்தளம் என்று தனது சொந்த வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளை மேற்கோளிட்டு உணர்ச்சிபூர்வமாகா பேசி , பின் உணர்ச்சி பிரவாகத்தை கட்டுப் படுத்தி கருத்தை வலியுருத்தி பேச்சை முடித்தது அருமையாக இருந்தது.

Some excerpts here.For full Speech Transcript http://www.microsoft.com/presspass/exec/burgum/03-28convergence2006.mspx


So, my great-grandfather got involved in starting the grain elevator. The grain elevator business that buys the crops from farmers, that aggregates those crops, and then works on arranging transportation, and sending them off to some other market. You know, pretty basic little add value, being in the middle type things, very, very super low margins in the grain elevator business. At the grain elevator, this is where your neighbors come to bring their crops. This is where people's income depends on the price you pay for their crops.It was a relationship where I'm sure there could have been someone might have said, hey, they really don't have a choice, because it's too difficult for them, and too costly for them to haul their grain 15 or 20 miles away to another town. Certainly in the early days, when people were hauling grain by horse, and before there was even road infrastructure or trucks, this was the case.

And when people harvest their grain, it's not pristine. If there's weeds in the field, and this is back, again, if I'm that age, this is probably in the early '60s. The ability to have a super clean field isn't the way it is there today with all the advances in seed technology, and technology in farming, etcetera. You've got a truck that's got grain, and it's got stuff that's not grain, call it chaff. Separate the wheat from the chaff. And within that mix, when the grain is coming out into the pit, someone from the elevator comes out, because you're weighing the truck full of grain, and you're going to weigh the truck empty. The farmer, the customer, is going to get paid for what's in that truck. When the grain comes out, you have an opportunity to stand in the back with a little silver, almost like a gold panning type pan, and you get a chance to pull some grain out of this truck. And then you take that grain, and from that sample you go into a little small separating machine, and that becomes analogous, or a metaphor, or a measurement that says, this is what percent of that truck is grain, and this is what percent of that truck is chaff. And the chaff you don't get paid for, it's dockage. So, if you take a sample that's 5 percent chaff, the farmer gets paid 5 percent less. If you take a sample that's 1 percent, they get paid 1 percent less. Everybody understands there's going to be some dockage.

I'm standing there with my dad as a little kid, he's got the pan. You know what he's teaching me? He's teaching me how to take the cleanest possible sample.I didn't get that out very well. He taught me how to take the cleanest possible sample.That was about how to make sure, even if that truck had 5 percent chaff, you'd only come up with 2, and why was that? Part of that was, I think, this deep understanding about the trust relationship. The other part is, my dad, my uncle, my aunt, were smart business people. The understood that if they and part of being smart is thinking about the long-term, not the short-term. There was a phrase that I later, and it wasn't very articulate, but it sort of came to me after my dad passed way that what he was teaching me, because these farm, all your customers, get passed from one generation to the next generation, the next generation, and this relationship between us and the grain elevator, and the farmers that we support.


And so, if I was going to shorten this story up by about 15 minutes, I could just say something like, you screw grandpa, and his grandson will never bring you his grain 50 years later, because families (applause) because families remember that. Families pass on that kind of learning. Here is who you buy from,here is who you don't buy from, here is who you can trust. And so I think about that trust example, and how important trust is in terms of that relationship between those two between the customer and the partner, and it's such an important thing.

Wednesday, January 11, 2006

கலவை மனிதன்

ரே கர்டஸ்வெய்ல் (Ray Kurzweil) இயற்கைக்கு அப்பாற்பட்ட மனித வாழ்க்கை பற்றி எழுதியிருக்கிறார்.

மனித மூளை சிந்திப்பதை படமெடுக்க தொடங்கி விட்டார்களாம். ஒரு கன அங்குல நானோ ட்யூப் மின்சாதனம் 100 மில்லியன் மனித மூளைகளை விட சிறப்பாக செயல்பட தொடங்கி விடுமாம்.நானோபோடிக் வெள்ளை அணுக்கள் உயிரியல் வெள்ளை அணுக்களை விட வேகமாக செயல் பட தொடங்கி , அவற்றை மனித உடம்பிற்கும் கலந்து விடும் சாத்தியக் கூறு வரும் போது , மனிதன் பாதி கணினி பாதி கலந்து செய்த கலவை நான் என்று எல்லாரும் ஆளவந்தான் மாதிரி திரிய வேண்டியது தான்.

மனிதனுக்கு தான் சிரிக்க தெரியும் , பகுத்தறிவு உண்டு என்று கப்ஸா விட்டுக் கொண்டு காலம் தள்ள முடியாது. மனிதனின் பகுத்தறிவு பழுது பட்டது. பாங்குகளை அடையாளம் காணும் (pattern recognition) கலை மட்டும் தான் நம்மை இன்னும் வேறுபடுத்தி வைத்திருக்கிறது போலும்.

கலவை மனிதனால் கவிதை எழுத முடியுமா , நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று வீண் வாதிட முடியுமா என்று தெரியவில்லை.

மேலும் படிக்க http://www.computerworld.com/hardwaretopics/hardware/story/0,10801,107494,00.html

Saturday, January 07, 2006

ஈரம் புரிந்த நேரம்

அறைந்து சென்ற காற்றின்
கரைந்து கிடந்த ஈரம்
பட்டுக் கன்னத்தில்
ஒட்டி நின்றது தெரியும் போது
புரிந்தது
கோபத்தின் அன்பு!

Thursday, January 05, 2006

கொ(கு)ட்டிக் கதை

ஒரு குளத்தைக் கடக்க வேண்டிய தேவை ஒரு தவளைக்கும் , ஒரு தேளிற்கும் வந்ததாம். தவளைக்கு , குளத்தில் இருக்கும் கொக்கு/நாரையைக் கண்டு பயம். தேளிற்கு நீந்த தெரியாது. அதனால் , தேள் தவளையிடம் நான் உன் முதுகில் ஏறிக் கொள்கிறேன். நீ என்னை மறு கரை சேர்த்து விடு. பதிலாக , கொக்குவிடம் இருந்து உன்னை நான் காப்பாற்றுகிறேன் என்றாதாம். தவளை தேளைப் பார்த்து , நீ என் முதுகில் இருக்கும் போது என்னை கொட்டி விட்டால் என்ன செய்வது , தரையில் இருந்தாலாவது நான் தப்பித்து செல்வேன் முதுகில் இருக்கும் போது என்ன செய்வது என்று தேளைப் பார்த்து அவநம்பிக்கையோடு கேட்டதாம். அதற்கு தேளானது , உன் முதுகில் இருக்கும் போது நான் உன்னைக் கொட்டினால் நீயும் நானும் நீரில் மூழ்கி சேர்ந்தே இறந்து போவோம். அப்படி இருக்கையில் நான் ஏன் உன்னை கொல்லப் போகிறேன் என்றாதாம்.அதன் கூற்றில் அர்த்தம் இருப்பதை உணர்ந்த தவளை , தேளை முதுகில் ஏற்றிக் கொண்டு குளத்தை கடக்க தொடங்கியதாம்.

இந்த கதையை கேட்டறிந்திராதவர்கள், இதன் முடிவு என்னவாகும் என்று ஊகிக்க முடிகிறாதா (கூகிளை நாடாமல்)?
முடிவு நாளை என்றோ அல்லது முழுப்பக்கத்தையும் வெற்றிடமாக தந்து அடியில் பதில் தந்து உங்களை சோதிக்க விரும்பவில்லை.

இதோ கதையின் தொடர்ச்சி.

பாதி குளத்தை கடந்த பொழுது , தேள் தவளையை கொட்டி விட்டதாம். தவளை விஷம் ஏறி தண்ணீரில் மூழ்க தொடங்கியதாம். அதனோடு சேர்ந்து , தேளும் தண்ணீரில் மூழ்கி இறக்க தொடங்கியதாம்.அப்பொழுது , தவளை முட்டாள் தேளே! உன்னால் நாம் இருவரும் மடிய போகிறோம். கரையில் இருந்த போது அறிவுப்பூர்வமாக பேசிய நீ ஏன் இப்படி முட்டாள் தனமாக நடந்து கொண்டாய் என்றதாம். அதற்கு தேள் , கொட்டுவது என் குணம் , அதை எதனாலும் மாற்ற முடியாது என்று கூறி மடிந்ததாம்.

Monday, January 02, 2006

தொலைந்(த்)த நட்பு

எல்லா திசைகளிலும் நுணுக்கி எழுதி
எச்சில் தொட்டு ஒட்டிய
கடிதம் தந்த
ஆத்ம ஸ்பரிசம்

இல்லாத காரணத்தாலா
இரு வரிகளுக்கு மேல்
எழுத தோன்றவில்லை
இ-மெயிலில்!


ஓசையில்லாமல்
ஒப்பாரி வைக்காமல்
இழந்து விட்ட
அற்புத மனித உறவுகளை
இனம் காண்பது எப்பொழுது?

மௌனித்த வார்த்தைகள்
உயிர்ப்பிக்குமா மறுபடியும்?

Thursday, December 29, 2005

சரியா ! தவறா ? - 2

சரியா தவறா - 2

முடிவு என்பது ஒரு தெரிவு. ஒரு வழியில் செல்ல முடிவெடுத்தவுடன், மற்ற வழிகளில் செல்வது இல்லை என்றாகிவிடும் போது, எல்லா வழிகளுக்கும் அதற்கென்ற தர்க்கம், உத்வேகம், நியாயங்கள் இருக்கையில்முடிவெடுக்கும் போது கருத்து மோதல்கள் வருவது இயல்பு.

ஆனால் முடிவு செய்வதை கருத்து மோதல்களை சமாளிப்பதாக மட்டும் எடுத்துக் கொண்டால் சரியான முடிவு அமையாது. ஒரு பிரச்சனையை ,தீர்வின் ஆரம்பமாக பார்க்கும் அளவிற்கு ,எண்ணங்களை விரிவடையச் செய்வதன் மூலமே , சரியான முடிவை அடைய முடியும்.

முடிவெடுப்பதிற்கு மிகப் பெரிய முட்டுக்கட்டையாக இருப்பது மாற்றத்தைப் பற்றிய பயம் தான். எல்லா தெரிவுகளும் செயலுக்கு வழிகோலும். செயல் மாற்றத்தை உண்டு பண்ணும். விருப்பமில்லாத விஷயத்தில் முடிவெடுப்பதில் தடுமாறுவதை விட,திருமணம், வேலை மாறுதல் போன்ற நல்ல மாற்றங்களுக்கான முடிவெடுப்பது இன்னும் கடினமான ,அழுத்தமான செயல்.

தர்க்க அறிவும் (காரண காரணிகளும்) , மன உணர்வுகளும் , முடிவெடுப்பதில் சம ஈடுபாடு கொண்டவை. உணர்வுகளுக்கும் இடம் கொடாமல் ,வெறும் காரணங்களை மட்டும் ஆராய்ந்தால் எதிலும் நிலையான முடிவெடுக்க முடியாது. ஏனெனில் , உலகுன் பல விஷயங்கள் ஒன்றுக்கொன்று முரணானவை. உணர்வோடு ஒட்டிய பகுத்தறிவு தான் , நம்க்கு ஒத்த நல்ல பாதையை தேர்ந்தெடுக்க உதவம்.

செயல்படுத்தப் படாத எண்ணமும் , எண்ணாமல் எடுத்த செயலும் இல்லாமைதான்.கண நேரத்தில் எடுத்த பல முடிவுகள் சரியாக அமையும் போது , யோசித்து முடிவெடுப்பது தேவைதானா என்ற கேள்வியை எழுப்பும்.அதும் யோசிப்பது கடினமாகவும் , மன அழுத்தை தரும் போதும் , அது கொண்டு வரப் போகும் மாற்றத்தைப் பற்றிய பயத்தை பெரிதாக்கும் போதும் , எதற்காக யோசித்து முடிவெடுக்க வேண்டும் என்று தோன்றும்.
யோசித்து முடிவெடுப்பது , நம்மை முடிவின் மாற்றத்திற்கு தயார் செய்யும். வெற்றியுன் வாய்ப்புகளை இது அதிகரிக்கச் செய்யும். எனினும் , சில சமயங்களிம் மன உண்ர்வுகள் உந்தி தள்ளும் கண வேர முடிவுளும் சரியாக இருக்கும் என்பதையும் அறிந்திருக்க வேண்டும்.

மகிழ்ச்சியைத் தேடி

ஒரு பூனை தன் வாலை கவ்வி பிடிக்க தொடர்ந்து முயற்சி செய்து சுற்றி சுற்றி வந்ததாம்.அதைப் பார்த்த நகைத்த மற்றொரு பூனையிடம் , பூனைகளின் மகிழ்ச்சி அதன் வாலில் தான் இருக்கிறது என்பது தெரிந்ததால் தான் , என் வாலை பிடிக்க சுற்றி வருகிறேன் என்றதாம். அதைக் கேட்ட இரண்டாவது பூனை, அது எனக்கும் தெரியும். நம் வாலைப் பிடிக்க நாமே முயன்று சுற்றி வந்தால் , வால் நம்மை விட்டு விலகியே செல்லும் என்பதும் எனக்கும் தெரியும். அதை விட்டு , நம் வேலையை பார்க்க போனால் , சந்தோஷம் இருக்கின்ற வால் விலகிச் செல்லாது , நம் பின்னே வரும் என்றதாம்.

மேலே குறிப்பிட்ட தகவல்கள் சேகரிக்க உதவிய தளம் http://www.gita-society.com/section2/dharmic-management.htm

Monday, December 19, 2005

இந்த ஆண்டின் சிறந்த நபர்(கள்)

டைம் - இந்த ஆண்டின் சிறந்த நபர்(கள்) விருது

போனோ,மெலிண்டா,பில் இவர்களுக்கு இந்த விருது கிடைத்திருப்பது மிக்க மகிழ்ச்சியை தருகிறது.பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர்கள், பொது சேவைக்கு பெருமளவிற்கு பணம் செலவளிப்பதில் ஆச்சரியமில்லை என்றாலும், அவர்களின் ஈடுபாடும் , தன்னார்வமும், திட்டமிடலும்,தெளிந்த கூர்மையான நோக்குடன் தேர்ந்தெடுத்து செய்யும் காரணங்களும் , அதனால் ஏற்படும் விழிப்புணர்வும் , தாக்கமும் அளவிட முடியாதவை. தனி மனிதர்கள் , தொண்டு நிறுவங்கள் முதல் அரசாங்கங்கள் , உலக அமைப்புகள் வரை இதனால் கற்றுக் கொள்ள கூடியது நிறையது.

பில் கேட்ஸ்-ன் நிறுவனத்தைப் பற்றி மாற்று கருத்து கொண்டவர்கள் கூட மறுக்க இயலாத கருத்து. நேபெல் பரிசு கிடைத்திட வாழ்த்துக்கள்.பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை அடைய லட்சியம் கொண்டவர்கள் இதையும் இனி கவனித்திட வேண்டும்.


http://www.time.com/time/magazine/article/0,9171,1142278,00.html

Wednesday, December 14, 2005

சரியா ! தவறா ?

ஆய கலைகள் அறுபத்து நான்கில், முடிவெடுக்கும் ( முடி எடுக்கும் அல்ல) கலை தான் என்னை கவர்ந்தது போல. அது பற்றி என்ன கட்டுரை வந்தாலும் என்னை ஈர்த்து விடுகிறது.
"சரியான முடிவெடுப்பது கடினமல்ல. எடுத்த முடிவை சரியானதாக்குவது தான் கடினம்" (The problem is not to make the right decision; it's to make the decision right) என்ற மேற்கோளை சுட்டிக் காட்டிய பெரடரிக் ப்ரூக்ஸ் (Frederick Brooks)-ன் Fortune பேட்டியை படித்தவுடன் பிடித்து விட்டது.

http://www.fortune.com/fortune/print/0,15935,1135298,00.html

ஒரு முடிவின் இருபக்கம் 80/20 என்று கீழ்மட்டத்தில் மிகச்சரியான முடிவாக ஆரம்பிப்பது , ஒவ்வொரு நிர்வாக அடுக்கை தாண்டும் போது 70/30 , 60/40 என்று தேய்ந்து , கடைசியாக

உயர் அதிகாரிகளின் வசம் செல்லும் போது 49/51 என்ற அளவில் எந்த முடிவு எடுத்தாலும் அது சரியாகத்தான் இருக்கும் என்ற நிலையை அடைகிறது. எடுத்த முடிவில் உறுதியாக இருந்து செயல்படுத்துவதில் தான் வெற்றியே தவிர , இருபக்கமும் ஊசலாடுவதில் இல்லை என்று செல்கிறது.

பல விவாதங்களில் இரு பக்கங்களிலும் நியாயம் இருக்கிறது. சிக்கல்கள் ,நல்லதற்கும் கெட்டதற்கும் இடையில் வருவதல்ல. ஒரு நல்லதிற்கும் , மற்றொரு நல்லதிற்கும் இடையில் வருவது தான் என்று படித்தது , இந்த கட்டுரையை படித்த போது நினைவில் வந்தது.

Wednesday, November 30, 2005

மூணாம் கிளாஸ் கவிதை

நாம எழுதறது எப்பவுமே மூன்றாம் தர கவிதைதானே , இதில தலைப்பு என்னத்துக்கு மூணாம் கிளாஸ் கவிதை என்ற கேள்வி நியாயம் தான்.
இது நான் தத்துபித்துன்னு எழுதினது கிடையாது. மூன்றாம் வகுப்பு படிக்கும் என் மகள் , பள்ளியில் நடந்த "Reflections" என்ற தலைப்பில் நடந்த கலைப் போட்டியில் பங்கு பெற்று

எழுதியது. போட்டியில் பங்கு பெற்றவர்களில் முக்காலே மூணு விசம் பேர் ஓவியம் வரைந்திருந்த போது , கவிதை எழுதின ஒரே ஒரு ஆளு , நம்ம வாரிசு தான்.

Earth , dear Earth
Hope you like
you're Birth !

I Wonder
what it feels like
Covered in Dirt !!

You look so beautiful
And different too!

I wonder
Almost everything about you !!

I bet everyone
loves you And
wonders about you too!!!

Reflections judge comments:
The use of rhyme in this work was quite successful. Earth/Birth and then the use of "dirt" on the following line of the

couplet show and ability to be flexible with rhyme and was excellent.

பரிசு - அப்பா மாதிரி தான் :) !!!

Tuesday, November 29, 2005

சிறந்த மதம்

வலைப்பதிவுகளில் அவ்வப் பொழுது சிலர் தங்கள் மதத்தின் சிறுமைகளையும் , அவற்றின் பாதிப்புகளையும் புரட்சியாளர்களாக பதிப்பதை படித்ததுண்டு.வேறு சிலரோ மற்ற மதத்தின் குறைகளை விலா வாரியாக தொடர்ந்து எழுதுவதை முழு நேர தொழிலாக கொண்டுள்ளதை கண்டு வி(ப)யந்ததுண்டு. ஒருவர் முப்பது ஆண்டுகள் வாழ்ந்த மதத்தை விட , மூன்று மணி நேரம் சென்ற ஒரு நாட்டின் கோவிலின் கதையை கேட்டறிந்து , அதுதான் சிறந்த மதம் என்று எழுதியதை பார்க்க நேர்ந்தது. அவர்கள் யாரையும் தனிப்பட்ட முறையில் தெரியாத காரணத்தால் , அவர்கள் அவ்வாறு எழுதுவது எதனால , எந்த பாதிப்புகளினால் என்று ஊகிக்க முயற்சி செய்ததுண்டு.

நான் சில வருடங்களுக்கு முன் வேலை பார்த்த பிரிவின் இயக்குநராக பணி புரிந்தவர் , சென்ற வருடம் அந்த வேலையை விட்டு விட்டு சால்ட் லேக் சிட்டி பக்கம் பல்கலையில் ஆராய்ச்சி மாணவராக/பயிற்சியாளராக சென்றார். அவரின் பதிவில் , ஊடகங்களில் மிகவும் விமர்ச்சிக்கப் படும் மோர்மொன் பற்றியும் , அதன் குறைகளை கூறி விலகுபவர்களிடம் அணுக வேண்டிய முறைகளைப் பற்றியும் ஆழமாக சிந்தித்து பதிந்துள்ளார். அதில் Slide 36 - "Things for them to consider" என்பது எந்த ஒரு மதத்திற்கும் , அமைப்பிற்கும் பொருந்தும். அதன் சாரம்சம் பிழையற்ற (அல்லது பெரும் குறைகள் இல்லாத) அமைப்பு என்று எதுவுமே இல்லை எனும் பொழுது , எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு தனி மரமாக இருப்பதை விட , தான் சார்ந்துள்ள அமைப்பை அதன் நிறைகளை , தனக்கு ஒத்த கருத்துக்களை மட்டுமே பின் பற்றி ,குறைகளை களைவதே சிறந்தது என்பதாகும்.மதவாதிகள் சொல்வதை மந்திரமாக கண்மூடித்தனமாக அது மட்டும் தான் உண்மை என்று நம்பாமல் , அவர்கள் தவறு செய்திருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு என்று புரிந்து கொள்வது அவசியம் என்ற கருத்தும் அருமை.

1) Is perfection, or even the lack of major flaws, the measure of affiliation/relationships?
1.a) Where is the perfect XYZ? Government? Business? Marriage? Family?
1.b) If "lack of major flaws" were the criteria, what relationship would survive?
2) Do we ever have an obligation to help make things better, vs. pack up and leave?
3)Forget "true".... consider "good"
4) What will bring you the most joy?
5) Look to the XYZ as a good place to SERVE
6) You CAN be a XYZ on your own terms - At the core, everyone is

மோர்மொன் அல்லது வேறு எந்த மதமானாலும் , அதன் பற்றிய குற்றசாட்டுகளை சரி என்றோ அல்லது தவறு என்று நியாப்படுத்தியோ அல்ல இந்த பதிவு.

Saturday, November 19, 2005

பீட்டர் ட்ரக்கர்

நாளைய நிர்வாக துறையில் தோன்றக் கூடிய போக்குகள் இன்றே தெரியும் மந்திரக் கண்ணாடி போலும் அவரது மூக்கு கண்ணாடி என்று குறிப்பிடும் படியான ஆளுமை படைத்தவர் பீட்டர் ட்ரக்கர் (Peter F. Drucker).

சில வருடங்களுக்கு முன் சிஎன்என்னில் அவரைப் பற்றிய விவரண படத்தை பார்த்த மாத்திரத்தில் , அவரது கட்டுரைகளையும் , புத்தகங்களையும் படிக்க ஆரம்பித்தேன்.
காலங்களை கடந்த சிந்தனையோட்டம் அதில் தெளிவாக தெரியும்.நிர்வாக மேலாண்மை மட்டுமின்றி , சமூக , பொருளாதார மாற்றங்களையும் அலசும் தன்மை என்னை மிகவும் கவர்ந்தது. சேவை நிறுவனங்களை நிர்வாகிப்பது மற்றும் அவற்றின் தாக்கம் பற்றிய அவரின் கருத்துக்கள் , புதிய பார்வையை தந்தது.

வர்த்தக மேலாண்மை பட்டப் படிப்பு படித்திராத என்னைப் போன்றோர்க்கு , படிக்கத் தூண்டும் பயனுள்ள பல படைப்புகள் தந்தவர். மேலும் இன்று என்னைப் போன்றோருக்கு சோறு போடும் "Knowledge worker" என்ற பதத்தை தந்தவர். அண்மையில் தனது 95வது வயதில் நிறைவான வாழ்க்கையின் இறுதி அத்தியாயத்தை முற்றிலுமாக நிறைவடைந்தார்.

Monday, November 07, 2005

கடற் கன்னி

சாண்டில்யன் கதை மாதிரி தலைப்பை பார்த்தவுடன் , இதை மேலும் படிக்க கிளிக் செய்ய நினைப்பவர்கள் மன்னிக்க.இது சென்ற வாரம் , கடற்கன்னி கதைகளை படைத்த ஹான்ஸ் கிர்ஸ்டின் ஆண்டெர்சன் சொந்த நாட்டிற்கு நான் அலுவல் நிமித்தம் சென்ற பயணக் க(கு)ட்டுரை.


சென்ற வாரம் அலுவல் நிமித்தம் கோபன்கேஹன் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. முதலில் சென்று பார்த்தது அங்கு இருந்த கடற்கன்னி சிலையை தான்.அமெரிக்காவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ,இதை பார்க்க வரும் முன் , வழிகாட்டுபவரிடம் ,இதை ஏறிப் பார்க்க , மின் தூக்கி இருக்கின்றதா என்று விசாரித்துக் கொண்டே வருவார்களாம்.இந்த இடத்தைப் பார்த்தபின் , அசடு வழிவது சகஜம் என்று அலுவலகத்தில் ஒருவர் சொன்னார். கடற் கன்னி சிலை நம்மை விட சிறியதாக இருக்கும்:)

கோபன்கேஹன் டென்மார்க்கின் தலை நகரம். குழந்தைகளுக்கு லெகோ ப்ளாக் , வளர்ந்த குழந்தைகளுக்கு கார்ல்ஸ்பெர்க் , மற்றவர்களுக்கு குக்கி என்று ஏதாவது ஒரு வகையில் டென்மார்க் பரிச்சயமான நாடு தான்.

ஆனால் நான் அறியாதது , (கடற்கன்னியை தவிர) மிதிவண்டிகளின் தலை நகரம் இது என்பது தான்.எங்கு பார்த்தாலும் சைக்கிள்கள் தான். டென்மார்க்கின் மொத்த மக்கள் தொகை ( 6 மில்லியன்) கிட்டத்தட்ட சிங்கப்பூர் அளவு தான்.மக்கள் தொகை அளவிற்கு சைக்கிள்களின் தொகையும். அது தவிர தலைசிறந்த கட்டிட நிர்மாணிகள் , கலை ல்லுனர்கள் இங்கு அதிகம் போலும். கடந்த 1000 வருடங்களின் தலைசிறந்த பல கட்டிட கலைகளையும் ஒருங்கே காணலாம்.

மற்றொரு ஆச்சர்யம் பயணம் செய்த இரயிலில் ஒவ்வொரு முறையும் , பரிசோதகர் வந்து 100% டிக்கெட்டை பரிசோதித்தது தான். ( ஹிஹி. என்னை மட்டும் இல்லை. எல்லாரையும் தான்.)

Monday, October 24, 2005

எண்ணுவம்

நான் எதிலும்
முடிவெடுக்க
தயங்கியதில்லை!

சரியா தவறா
என்று
குழம்பி திரிந்ததில்லை!

பிரசவ வேதனை
என் பிறழ்ம்பி
திரிந்ததில்லை!

வாதங்களில்
காலங்களை
கடத்திய தில்லை!

என் குழப்பம்
எல்லாம்
முடிவெடுத்த பின் தான்
ஆரம்பம் :)

எனினும்
இழுக்கை விட
துணிவுக்கு
கவர்ச்சி அதிகம் தான்!

Saturday, October 01, 2005

பிரம்மன் நானே!!!

என்
சிறிய தவறுகளை கூட
நான்
பெரிதாக பிரகடனப்படுத்துவது
பெரும் குறைகள்
என்னிடம் இல்லை
என தெரிவிக்கத் தான்!

முட்டாள் தனமான
கேள்விகளை
நான்
பொதுவிடங்களில்
வெட்கப் படாமல் கேட்பது
கற்ற கர்வம்
என்னிடம் இல்லை
என் தெரிவிக்கத் தான்!!

முட்டித் தள்ளி
ஓடும் கூட்டத்தில்
நான்
காலில் உரசியதற்குக் கூட
கவனமாய் வருத்தம் தெரிவிப்பது
கண்ணியனாய் காட்டிடத் தான்!!!

உன்
உள்ளக் கண்ணாடியில்
ஓளிரும் உருவம்
நான் வடித்தது
என்பதனால்
இரவில் கூட
என் வீட்டுக் கண்ணாடியில்
பார்க்க விரும்புவதில்லை
அந்த பிரம்மன் படைத்த
உண்மை உருவத்தை

எனக்கு
நானே பிரம்மன்!!

Tuesday, August 30, 2005

கவர்ந்த காலை பேச்சு

காலையில் எப்பொழுதும் போல் இல்லாமல் , அலாரம் வைத்து எழுந்து , வாகன வெள்ளத்தில் மெதுவாக நீந்தி , வாகன நிறுத்தும் இடத்தில் ஒவ்வொரு தளமாக தேடி , கலப்பின வாகனத்தை நிறுத்தி , அலுவலகத்தின் காலை சிறப்பு பேச்சு நடைபெறும் சந்திப்பறையில் நுழைந்த போது , கடைசி வரிசையில் ஒரு சில இடங்கள் மட்டுமே காலியாக இருந்தது.நூற்றுக் கணக்கானவர்கள் நுழைவாயிலில் வந்து கொண்டிருக்க நடை ஓட்டமாக விரைந்து , இருக்கையில் அமர்ந்து மடிக் கணினியை தட்டி , மின் அஞ்சலை அலச தொடங்கு முன் , கிரெய்க் (Craig Mundie) அறிமுக உரையை ஆரம்பித்தார்.

ஆயிரம் பேர் அமரக்கூடிய அந்த கூட்ட அறைக்கு , அன்றைய பேச்சை கேட்க இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விருப்பம் தெரிவித்திருந்தார்களாம். மிகுதி அறைகள் மேலும் இரண்டு அமைத்தும் ,கூட்டம் நிரம்பி வழிந்தது இதற்கு முன்பு XBox 360க்கு மட்டும் தான் என்று நகைச்சுவையாக அறிமுகப் படுத்தி , சிறப்புரையாற்ற வந்த தாமஸ் ப்ரைட்மேனை(Thomas L. Friedman) பேச அழைத்தார். அடுத்த ஒரு மணி நேரத்திற்கு , மடிக்கணினியை மறந்திருந்து அவரின் பேச்சாற்றலில் மயங்கியிருந்தேன்.

உலகம் சம தளம் என்ற அவரின் நூலைப் பற்றி , உண்மையில் பாதி உலகம் தான் சம தளமாகி இருக்கிறது என்று பில்ஜி கூறியதாக சொன்னது மிகவும் சரி என்பது எனது கருத்து. என்றாலும் , தாமஸின் புதிய சிந்தனையும்,படைப்பாற்றலும், கருத்துகளை தொகுக்கும் திறனும் , அவற்றை தொடர்பு படுத்தி சிறந்த கதை போல ஆர்வமுடன் படிக்கும் வகையில் எழுதும் திறனும், தனது கருத்தில் தீவிர நம்பிக்கையுடன் கேட்பவர்களை கவரும் வகையில் பேசும் திறனும் நேரில் பார்த்து கேட்க கிடைத்து ஒரு சிறந்த அனுபவம்.

Friday, August 19, 2005

மாயை

கண்ணால் காண்பதும் ....





நடுவில் இருக்கும் crosshair-ஐ (எப்படி இதை தமிழ் படுத்துவது) உற்று நோக்குங்கள். பச்சை பந்து ,மெதுவாக ஊதா பந்தின் மேல் வட்டமிடுவது தெரிந்தால் சில மணித் துளிகளை வீணாக்குவது எப்படி என்று தெரியும்.
வெறும் பச்சை பந்து மட்டும் தெரிந்தால் பல மணித் துளிகளை வீணாக்குவது எப்படி என்று தெரியும். இதை வலைப்பதிந்தோ அல்லது மினஅஞ்சலுலில் அனுப்பத் தொடங்கினால் , வார இறுதி நெருங்கி விட்டது என்று தெரியும்.

விளக்கம்: http://www.michaelbach.de/ot/col_rapidAfterimage
ஆக்கம்: Jeremy L Hinton (2005-05-22, personal communication, jeremy dot hinton at bigfoot dot com)


மேலும் சி(ப)ல: http://www.michaelbach.de/ot

Sunday, August 07, 2005

வெற்றிக் கோப்பை



வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் , அதை வாங்கித் தந்த பெருமையெல்லாம் டீம்மைச் (தாமரை) சேரும்.வாழ்க்கையில் வாங்கிய முதல் வெற்றி கோப்பை.

கம்பெனி பிக்னிக் வாலிபால் போட்டி முதல் பரிசு ( ஊதா பிரிவு) Posted by Picasa


பி.கு: நம்பிக்கை கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

Thursday, August 04, 2005

அலுவலக வருடாந்திர மகிழ்வுணவு - கைப்பந்து போட்டி


கம்பெனி பிக்னிக் வாலிபால் போட்டி Posted by Picasa

Tuesday, July 26, 2005

நம்பிக்கை

நாளை
வரும் மரணம்
எனும் நம்பிக்கை
தூண்டும் எனை
நன்றே வாழ்ந்து விட
இன்று!!

பி.கு எனக்கு போட்டி , பரிசு இதிலெல்லாம் நம்பிக்கை :) இல்லை என்றாலும், 'நம்பிக்கை' என்ற தலைப்பு எழுத தூண்டிவிட்டது.