Tuesday, November 28, 2006

பனி

பூ வரம்
கேட்டதோ
இந்த புல்லினம்
புதிதாய் பூத்துவிட்டதே
இந்த வெண் மல்லி !

வெள்ளை சட்டை
கேட்டதோ
வெற்றுடம்பில் வாடிடும் சாலை
விரிந்து ஆடையானதே
இந்த வெண்பருத்தி!

சருக்கு மரம்
கேட்டதோ
சிறு குழந்தைகள்
வீதிக்கு வந்ததே
இந்த வெள்ளிப் பனி மலை


பரிதியை
வென்றதே
பனி இன்று
பாரியானதாலா
ஈகையில்...

  Posted by Picasa

No comments: