Thursday, February 04, 2010

அஞ்ஞான பட்டகம்

குப்பையை கூட்ட சோம்பி
வெளிச்சத்தை மறைத்து
சுத்தமானதாய்
வாழ்ந்த கூட்டம் ...
ஒளியின் குற்றமென
அழுக்கை
அடையாளம் காட்டின!

நுழைய மறுத்த இடங்களின்
பிம்பங்களை பிரதிபலித்த
திருப்தியில் திரும்பி சென்றது
புற ஒளி!

அமைதியில் உதித்தது
அஞ்ஞானத்தை
அடையாளம் காட்டிடும்
அரிய பட்டகம்
அடைத்திட வழியில்லாமல் !!

1 comment:

mathangie said...

it is a nice one....