Sunday, June 06, 2010

பூமி

இயற்கையை ரசிக்க
ஓசோன் படலத்தை
ஒட்டையாக்கியபடி
நீண்ட தூர பயணம்!

கடலில் கலக்கும்
கசிவை கடிந்தபடி
நிரம்பிய காரின் எரிப்பை
மெல்ல கசிந்தது புகையாய்.

பொருந்தாத பழுதுபார்ப்புகள்
பொருளாதாரத்தை சரிசெய்ய
பொறுமையாய் சாலையெங்கும்

சூரிய குடும்பத்தில்
சுற்றித் திரியும் கோள்களெல்லாம்
கடவுளாய் சந்நிதானம்
பெற்றிட்ட பெருமையில்
வானில் உயர மின்னிட ...

பூமி மட்டும்
காலடியில் எங்கெங்கும் !!!

உயர்ந்த மலையும்
விரிந்த கடலும்
பரந்த வானமும்
தராத வியப்பும் மகிழ்வும்
தந்தது
தரையில் இட்ட முத்தம் !

No comments: