உன் குரல் கேட்டு
ஓடோடி வந்த தருணங்கள்
எத்தனை!
ஏனிந்த கோபம்
எத்தனை முறை அழைத்தும்
ஏகாந்த மௌனம் !!
உன்னை தாண்டி
கண நேரம் கண் மேய்ந்ததில்
பொறாமையா !
கோபத்தில் கொட்டிவிடாதே
மையலில் பகிர்ந்த
ரகசியங்களை !!
மீண்டும் அழைப்பாய்
என காத்திருக்கிறேன்
காணாமல் போன
என் கைபேசியே !
Monday, October 17, 2011
Wednesday, July 21, 2010
தட்டாம் பூச்சி
புழுக்கத்திற்காக
திறந்த ஜன்னலில்
புகுந்தது தட்டாம் பூச்சி!
பயத்தில் பதுங்கியது
பட்டிணத்து குழந்தை..
பாவத்தில் குறுகிய
அப்பாவின் பின்!!
திறந்த ஜன்னலில்
புகுந்தது தட்டாம் பூச்சி!
பயத்தில் பதுங்கியது
பட்டிணத்து குழந்தை..
பாவத்தில் குறுகிய
அப்பாவின் பின்!!
Monday, July 19, 2010
கல்யாண சமையல்
பரிட்சை முடிவிற்காக
காத்திருக்கும் மாணவனாய்
தவித்திருக்கும் தந்தை
மணமகனை விட
அதிக நேரம் செலவிட்டது
சமையல் தேர்விற்கு தான்...
முதல் பந்தி
முக்கிய விருந்தினர்கள்
பத்தியமாய் கொறித்து
அற்புதமென அறிவிக்க
நிறைவடைந்த தந்தை
சந்தோஷ போதையில்
பசி துறந்தார்...
சமைத்த நெடி தாளாமல்
போதையில் பசி துறந்தது
சமையல் குழுவும்.
புகைப்படத்திற்காக
ஊட்டிய இனிப்பு
கசக்கத் தொடங்க
புரியாமல் விழித்த
மணமக்களை பார்த்து
கல்யாண சமையல்
போதுமென
ஒலிபெருக்கியில்
பாடிக் கொண்டிருந்தார்
திருச்சி லோகநாதன்
வரும் காலத்தை
அறிந்து !!!
காத்திருக்கும் மாணவனாய்
தவித்திருக்கும் தந்தை
மணமகனை விட
அதிக நேரம் செலவிட்டது
சமையல் தேர்விற்கு தான்...
முதல் பந்தி
முக்கிய விருந்தினர்கள்
பத்தியமாய் கொறித்து
அற்புதமென அறிவிக்க
நிறைவடைந்த தந்தை
சந்தோஷ போதையில்
பசி துறந்தார்...
சமைத்த நெடி தாளாமல்
போதையில் பசி துறந்தது
சமையல் குழுவும்.
புகைப்படத்திற்காக
ஊட்டிய இனிப்பு
கசக்கத் தொடங்க
புரியாமல் விழித்த
மணமக்களை பார்த்து
கல்யாண சமையல்
போதுமென
ஒலிபெருக்கியில்
பாடிக் கொண்டிருந்தார்
திருச்சி லோகநாதன்
வரும் காலத்தை
அறிந்து !!!
Sunday, June 06, 2010
பூமி
இயற்கையை ரசிக்க
ஓசோன் படலத்தை
ஒட்டையாக்கியபடி
நீண்ட தூர பயணம்!
கடலில் கலக்கும்
கசிவை கடிந்தபடி
நிரம்பிய காரின் எரிப்பை
மெல்ல கசிந்தது புகையாய்.
பொருந்தாத பழுதுபார்ப்புகள்
பொருளாதாரத்தை சரிசெய்ய
பொறுமையாய் சாலையெங்கும்
சூரிய குடும்பத்தில்
சுற்றித் திரியும் கோள்களெல்லாம்
கடவுளாய் சந்நிதானம்
பெற்றிட்ட பெருமையில்
வானில் உயர மின்னிட ...
பூமி மட்டும்
காலடியில் எங்கெங்கும் !!!
உயர்ந்த மலையும்
விரிந்த கடலும்
பரந்த வானமும்
தராத வியப்பும் மகிழ்வும்
தந்தது
தரையில் இட்ட முத்தம் !
ஓசோன் படலத்தை
ஒட்டையாக்கியபடி
நீண்ட தூர பயணம்!
கடலில் கலக்கும்
கசிவை கடிந்தபடி
நிரம்பிய காரின் எரிப்பை
மெல்ல கசிந்தது புகையாய்.
பொருந்தாத பழுதுபார்ப்புகள்
பொருளாதாரத்தை சரிசெய்ய
பொறுமையாய் சாலையெங்கும்
சூரிய குடும்பத்தில்
சுற்றித் திரியும் கோள்களெல்லாம்
கடவுளாய் சந்நிதானம்
பெற்றிட்ட பெருமையில்
வானில் உயர மின்னிட ...
பூமி மட்டும்
காலடியில் எங்கெங்கும் !!!
உயர்ந்த மலையும்
விரிந்த கடலும்
பரந்த வானமும்
தராத வியப்பும் மகிழ்வும்
தந்தது
தரையில் இட்ட முத்தம் !
Sunday, April 11, 2010
முதல் வார்த்தை
நாள் முழுதும்
வெயிலில் காய்ந்த
வானம்
கருக்க தொடங்கியது...
விழித்திருந்த பொழுது
தெரியாத நட்சத்திரங்கள்
மெல்ல
கேட்க மறந்த குரலை
ஞாபக ஒளி பெயற்க தொடங்கின...
முதல் வார்த்தையின்
முகவரி
இனிமுதல் வீடு தாண்டி
விசாலமானது!
ஊரின் வெளியே
புதிதாய் விரித்த
அக்னி படுக்கை
அதன் அர்த்தத்தை
சுட்டு உணர்த்தியது!
நிழற் படத்தின் முன்
தவமிருக்க தொடங்கியது
அக(ல்) விளக்கு...
வெயிலில் காய்ந்த
வானம்
கருக்க தொடங்கியது...
விழித்திருந்த பொழுது
தெரியாத நட்சத்திரங்கள்
மெல்ல
கேட்க மறந்த குரலை
ஞாபக ஒளி பெயற்க தொடங்கின...
முதல் வார்த்தையின்
முகவரி
இனிமுதல் வீடு தாண்டி
விசாலமானது!
ஊரின் வெளியே
புதிதாய் விரித்த
அக்னி படுக்கை
அதன் அர்த்தத்தை
சுட்டு உணர்த்தியது!
நிழற் படத்தின் முன்
தவமிருக்க தொடங்கியது
அக(ல்) விளக்கு...
Thursday, February 04, 2010
அஞ்ஞான பட்டகம்
குப்பையை கூட்ட சோம்பி
வெளிச்சத்தை மறைத்து
சுத்தமானதாய்
வாழ்ந்த கூட்டம் ...
ஒளியின் குற்றமென
அழுக்கை
அடையாளம் காட்டின!
நுழைய மறுத்த இடங்களின்
பிம்பங்களை பிரதிபலித்த
திருப்தியில் திரும்பி சென்றது
புற ஒளி!
அமைதியில் உதித்தது
அஞ்ஞானத்தை
அடையாளம் காட்டிடும்
அரிய பட்டகம்
அடைத்திட வழியில்லாமல் !!
வெளிச்சத்தை மறைத்து
சுத்தமானதாய்
வாழ்ந்த கூட்டம் ...
ஒளியின் குற்றமென
அழுக்கை
அடையாளம் காட்டின!
நுழைய மறுத்த இடங்களின்
பிம்பங்களை பிரதிபலித்த
திருப்தியில் திரும்பி சென்றது
புற ஒளி!
அமைதியில் உதித்தது
அஞ்ஞானத்தை
அடையாளம் காட்டிடும்
அரிய பட்டகம்
அடைத்திட வழியில்லாமல் !!
Sunday, January 03, 2010
புதுவருட வாழ்த்துக்கள்
புதிய சுப்ரபாதமாய்
குத்துப் பாட்டு ஒன்று
டீக்கடையில்
எழுப்பிக் கொண்டிருந்தது!
இலையாய் , இருக்கையாய்
துண்டாய் , தோரணமாய்
அவதரிக்கும் நாளிதழ் பிரம்மம்
உலக ஜீவன்கள் அனைத்திற்கும்
பிரசுரித்திற்கும் ஒரே ராசி பலனை
சத்தமாய் படித்து பரவசமானது
அதிகாலை துயில் எழும் ௬ட்டம்!
நிறைமாதமாய்
நிரம்பி வழியும் பேருந்து
குழிகளில் சாலையை தேடி ஓடும்
விரக்தியில்
அபய ஒலியை எழுப்பி
தன் வருகையை
சப்தமாய் வெளிப்படுத்தி சென்றது!
வராத வேலைக்காரியை
வாசலில் சபித்துக் கொண்டிருந்த
அம்மாவிற்காக
சிணுங்கி கொண்டிருந்த தொலைபேசி
கேட்க வழியின்றி அடங்கியது!
வாழ்த்துக்களை பரிமாறிப்
பழக்கமில்லாத கிராமத்தில்
புதுவருட வாழ்த்துக்கள்
வாழ்க்கையின்
ஒவ்வொரு ஒலியிலும் தான் !
குத்துப் பாட்டு ஒன்று
டீக்கடையில்
எழுப்பிக் கொண்டிருந்தது!
இலையாய் , இருக்கையாய்
துண்டாய் , தோரணமாய்
அவதரிக்கும் நாளிதழ் பிரம்மம்
உலக ஜீவன்கள் அனைத்திற்கும்
பிரசுரித்திற்கும் ஒரே ராசி பலனை
சத்தமாய் படித்து பரவசமானது
அதிகாலை துயில் எழும் ௬ட்டம்!
நிறைமாதமாய்
நிரம்பி வழியும் பேருந்து
குழிகளில் சாலையை தேடி ஓடும்
விரக்தியில்
அபய ஒலியை எழுப்பி
தன் வருகையை
சப்தமாய் வெளிப்படுத்தி சென்றது!
வராத வேலைக்காரியை
வாசலில் சபித்துக் கொண்டிருந்த
அம்மாவிற்காக
சிணுங்கி கொண்டிருந்த தொலைபேசி
கேட்க வழியின்றி அடங்கியது!
வாழ்த்துக்களை பரிமாறிப்
பழக்கமில்லாத கிராமத்தில்
புதுவருட வாழ்த்துக்கள்
வாழ்க்கையின்
ஒவ்வொரு ஒலியிலும் தான் !
Saturday, January 02, 2010
பெயர் தெரியாத
பெயர் தெரியாத மரத்தின் கீழ்
சாய்வு நாற்காலியில் சரிந்து
மோட்டாவை உந்தி தாங்கி
ஓய்வு யோகத்தில் திளைத்திருந்தேன் !
இயற்கையின் இனிமையில்
மன இரைச்சல்கள் மறைந்திருக்க...
இலைகளின் இடுக்குகளில்
தேடி வந்த ஒளி கீற்றுக்கள்..
மூடிய விழிகளை திறக்க முயல
தேநீர் கோப்பையின் வெம்மை
நாசியை துளைத்தது!
இயற்கையின் காதலை
இன்றைக்காவது தெரிவிக்க
பொங்கிய தைரியத்தில்
மூடியிருந்த முட்டாள் தனங்கள்
கவிதை வடிவமெடுத்தன .
புன்னகை புரிந்த
புதுக்கவிதையை
புகைப்படமாய் புரிந்து விட
போக்கினேன் பொன்னான
தருணங்களை!
நாளைய ஞாபகங்களுக்காக
இன்றைய அனுபவங்களை
விட்டு விடாதேயென்று
புது ஞானம் பிறக்க...
சாய்வு நாற்காலியில்
மீண்டும் சராணகதியடைந்து
சாந்தமானேன்.
பத்து தலையும்
பவித்திரம் அடைந்து
உடைந்த வில்லாய்
உயர்ந்தது !
சாய்வு நாற்காலியில் சரிந்து
மோட்டாவை உந்தி தாங்கி
ஓய்வு யோகத்தில் திளைத்திருந்தேன் !
இயற்கையின் இனிமையில்
மன இரைச்சல்கள் மறைந்திருக்க...
இலைகளின் இடுக்குகளில்
தேடி வந்த ஒளி கீற்றுக்கள்..
மூடிய விழிகளை திறக்க முயல
தேநீர் கோப்பையின் வெம்மை
நாசியை துளைத்தது!
இயற்கையின் காதலை
இன்றைக்காவது தெரிவிக்க
பொங்கிய தைரியத்தில்
மூடியிருந்த முட்டாள் தனங்கள்
கவிதை வடிவமெடுத்தன .
புன்னகை புரிந்த
புதுக்கவிதையை
புகைப்படமாய் புரிந்து விட
போக்கினேன் பொன்னான
தருணங்களை!
நாளைய ஞாபகங்களுக்காக
இன்றைய அனுபவங்களை
விட்டு விடாதேயென்று
புது ஞானம் பிறக்க...
சாய்வு நாற்காலியில்
மீண்டும் சராணகதியடைந்து
சாந்தமானேன்.
பத்து தலையும்
பவித்திரம் அடைந்து
உடைந்த வில்லாய்
உயர்ந்தது !
Saturday, November 21, 2009
நாமவளி
என் முகம் அறியா பலருக்கும்
முகவரியாய் நீ இருப்பதனால்
உன் வடிவில் என்னை தனித்துக் காட்டிட
கிறுக்கிப் பழகாத பக்கம் இல்லை!
என் அடையாளத்தின்
ஆரம்ப தொடக்கம்
தொடங்கியது உன் வடிவில்
அதிர்ஷ்டத்தின் ஆசையில்
நீட்டவும் குறுக்கவும்
நினைத்ததில்லை
நிரந்தரம் நீ என்பதனால்
தீக்கோழியாய்
புனைப் பெயரில் புதைந்தாலும்
அணையாத தீச்சுடராய்
புலம் வருவது நீ தான்
உன் துணை இன்றி
என்னையே நான் என்று
நம்ப மறுத்திடும் உலகம்.
முகவரியாய் நீ இருப்பதனால்
உன் வடிவில் என்னை தனித்துக் காட்டிட
கிறுக்கிப் பழகாத பக்கம் இல்லை!
என் அடையாளத்தின்
ஆரம்ப தொடக்கம்
தொடங்கியது உன் வடிவில்
அதிர்ஷ்டத்தின் ஆசையில்
நீட்டவும் குறுக்கவும்
நினைத்ததில்லை
நிரந்தரம் நீ என்பதனால்
தீக்கோழியாய்
புனைப் பெயரில் புதைந்தாலும்
அணையாத தீச்சுடராய்
புலம் வருவது நீ தான்
உன் துணை இன்றி
என்னையே நான் என்று
நம்ப மறுத்திடும் உலகம்.
Thursday, October 29, 2009
வரமாட்டாய் நீ என
கடிபட கிட்டாத நகங்கள்
நினைவுகளை கடிக்க தொடங்க..
நீண்ட நேரம் உனக்காக
காத்திருப்பது நினைவு வந்தது!
பாதையை அலசிய பார்வை
பார்ப்பவர் அனைவரிடமும்
உன்னையே கண்டு
அத்வைத்தை அறுதியிட்டது!!
காத்திருப்பது ஒரு
சுகவேதனை ...
எனவேதான்
உனை அழைக்காமல்
காத்திருக்கிறேன்!
வளரத் தொடங்கின
நகங்களும் நாட்களும்
தொடரந்திருக்க
வந்து விடாதே
நம்பிக்கையை தகர்க்க!!
நினைவுகளை கடிக்க தொடங்க..
நீண்ட நேரம் உனக்காக
காத்திருப்பது நினைவு வந்தது!
பாதையை அலசிய பார்வை
பார்ப்பவர் அனைவரிடமும்
உன்னையே கண்டு
அத்வைத்தை அறுதியிட்டது!!
காத்திருப்பது ஒரு
சுகவேதனை ...
எனவேதான்
உனை அழைக்காமல்
காத்திருக்கிறேன்!
வளரத் தொடங்கின
நகங்களும் நாட்களும்
தொடரந்திருக்க
வந்து விடாதே
நம்பிக்கையை தகர்க்க!!
Sunday, September 27, 2009
கொலு
படிக்கட்டு கட்டி
பரணியில் இருந்த
பொம்மைகளை பழுது பார்த்து
மூளையை கசக்கி
முழுத்திறமையை காட்டி
புது விதமாய் கொலு பரப்பி
பஜனை பாடி
பட்சணம் கொடுத்து
பரபரப்பாய் உபசரித்து
பூர்வீக கதை பேசிய அம்மாவை
ஆச்சர்யமாக பார்த்தது
கடந்த வாரம்
விளையாட்டு பொம்மை வாங்க
போராடிய குழந்தை!
பரணியில் இருந்த
பொம்மைகளை பழுது பார்த்து
மூளையை கசக்கி
முழுத்திறமையை காட்டி
புது விதமாய் கொலு பரப்பி
பஜனை பாடி
பட்சணம் கொடுத்து
பரபரப்பாய் உபசரித்து
பூர்வீக கதை பேசிய அம்மாவை
ஆச்சர்யமாக பார்த்தது
கடந்த வாரம்
விளையாட்டு பொம்மை வாங்க
போராடிய குழந்தை!
Monday, August 10, 2009
கடல் அலை
நீரில்லாத நிலா
நிலமகளிடம் இருந்து
அபகரிக்க
விரித்த
காந்தப் புன்னகையின்
கவர்ச்சியில்
விம்மி நெகிழ்ந்த
நீர் ஆடையின்
விடாத மடிப்புகள்!!!
நிலமகளிடம் இருந்து
அபகரிக்க
விரித்த
காந்தப் புன்னகையின்
கவர்ச்சியில்
விம்மி நெகிழ்ந்த
நீர் ஆடையின்
விடாத மடிப்புகள்!!!
Saturday, July 25, 2009
மழைச் சாரல்
சுட்டெரித்த சூரியன்
சூட்டிக் கொடுத்த
மாலை மலர
சுகந்தமாய் மதி
பணி தொடர்ந்த நேரம்!
கண் கெட்ட பின்
சூர்ய நமஸ்காரமாய்
காலம் கடந்து
தொடங்கிய நடைப் பயிற்சி
தொடர்ந்தேன் அன்று!
அண்டை அயல் பாரது
தன்னை மட்டும் பார்த்த
வேகப் பயணத்தில்
சட்டென முகத்தில்
பட்டது ஈரப் பதம்!
யாரின் எச்சில்
என அசூசையாய் நிமிர
சடசடவென சாரல் ...
கோவர்த்தனமாய்
குடை பிடிக்க கிட்டாத
அவலத் தனம்
ரசிக்கத் தொடங்கியது
தொப்பலாக்கிய மழையை!
நாளைய நகரின்
திரிவேணி சங்கமங்கள்
சாலையோரம்
சங்கடப் படுத்த
அவசரமாய்
வீட்டை அடைந்த மகிழ்ச்சி
அதற்குள்
நின்று விட்டிருந்தது
அன்றைய சாரல்!
எப்பொழுதோ
கடந்து சென்ற
ஆற்றுப் பாலம்
அடியில் பார்த்த
கோரைப்புல்லும்
குழியான மணல் திட்டும்
காகித கப்பலாய்
மிதக்க தொடங்கியது
தேங்கிய நினைவில்!
சூட்டிக் கொடுத்த
மாலை மலர
சுகந்தமாய் மதி
பணி தொடர்ந்த நேரம்!
கண் கெட்ட பின்
சூர்ய நமஸ்காரமாய்
காலம் கடந்து
தொடங்கிய நடைப் பயிற்சி
தொடர்ந்தேன் அன்று!
அண்டை அயல் பாரது
தன்னை மட்டும் பார்த்த
வேகப் பயணத்தில்
சட்டென முகத்தில்
பட்டது ஈரப் பதம்!
யாரின் எச்சில்
என அசூசையாய் நிமிர
சடசடவென சாரல் ...
கோவர்த்தனமாய்
குடை பிடிக்க கிட்டாத
அவலத் தனம்
ரசிக்கத் தொடங்கியது
தொப்பலாக்கிய மழையை!
நாளைய நகரின்
திரிவேணி சங்கமங்கள்
சாலையோரம்
சங்கடப் படுத்த
அவசரமாய்
வீட்டை அடைந்த மகிழ்ச்சி
அதற்குள்
நின்று விட்டிருந்தது
அன்றைய சாரல்!
எப்பொழுதோ
கடந்து சென்ற
ஆற்றுப் பாலம்
அடியில் பார்த்த
கோரைப்புல்லும்
குழியான மணல் திட்டும்
காகித கப்பலாய்
மிதக்க தொடங்கியது
தேங்கிய நினைவில்!
Thursday, July 02, 2009
செல்போன் பொருத்தம்
ஜாதகம்
வருமானம்
அந்தஸ்து
தோற்றம் என
ஜோடிப் பொருத்தம் பல பார்த்து
முடிவு செய்த திருமணம்
நிச்சயித்த சில நாட்களிலேயே
தெரிய வந்தது
பார்க்காத பொருத்தம் ஒன்று!
சிரிப்பும் சிணுங்கலுமாய் தொடங்கிய
செல்போன் வார்த்தை பரிமாறல்கள்
சில நாட்களிலேயே
ஒவ்வாத அலைவரிசையை
ஒலி பெருக்கி காட்டிட
நீதிமன்ற படியேற
பின்னாளில் தேவையில்லாமல்
நிச்சயதார்த்தோடு நிறுத்தி வைத்த
செல்போன் புறாவை
நல்லதா கெட்டதா என
புரியாமல் பார்த்தனர்
மண மக்களின் பெற்றோர்!!
வருமானம்
அந்தஸ்து
தோற்றம் என
ஜோடிப் பொருத்தம் பல பார்த்து
முடிவு செய்த திருமணம்
நிச்சயித்த சில நாட்களிலேயே
தெரிய வந்தது
பார்க்காத பொருத்தம் ஒன்று!
சிரிப்பும் சிணுங்கலுமாய் தொடங்கிய
செல்போன் வார்த்தை பரிமாறல்கள்
சில நாட்களிலேயே
ஒவ்வாத அலைவரிசையை
ஒலி பெருக்கி காட்டிட
நீதிமன்ற படியேற
பின்னாளில் தேவையில்லாமல்
நிச்சயதார்த்தோடு நிறுத்தி வைத்த
செல்போன் புறாவை
நல்லதா கெட்டதா என
புரியாமல் பார்த்தனர்
மண மக்களின் பெற்றோர்!!
Friday, May 22, 2009
நூலகம்
கலைத் தாயை
அரசாளும் கட்சிகளின்
அனுதாப பத்திரிக்கைகள்
அலங்கரிக்க
முழுக் கதையின்
முடிவைக் கிழித்து
கலைப் பூசாரிகள்
ஆராதிக்க
கற்பனை பிரசாதம்
பெற்ற இடம்!!
பத்திரிக்கைகளை
பகிர்ந்து படிக்க
அமைதிப் பிரகாரம்
அனு தினமும்
சுற்றிய இடம்!!
அறிவுப் பக்திக்கு
அடிபணிந்து
ஒரு சிறு கையெழுத்து
வேண்டுதலில்
விலகிடும் நந்தி
விரிந்திடும் விசுவரூபம்!!!
அங்கே
தினம் திறந்திடும்
சொர்க்க வாசல் !
அது
காட்டிடும் தினம்
புது வழி !!
அரசாளும் கட்சிகளின்
அனுதாப பத்திரிக்கைகள்
அலங்கரிக்க
முழுக் கதையின்
முடிவைக் கிழித்து
கலைப் பூசாரிகள்
ஆராதிக்க
கற்பனை பிரசாதம்
பெற்ற இடம்!!
பத்திரிக்கைகளை
பகிர்ந்து படிக்க
அமைதிப் பிரகாரம்
அனு தினமும்
சுற்றிய இடம்!!
அறிவுப் பக்திக்கு
அடிபணிந்து
ஒரு சிறு கையெழுத்து
வேண்டுதலில்
விலகிடும் நந்தி
விரிந்திடும் விசுவரூபம்!!!
அங்கே
தினம் திறந்திடும்
சொர்க்க வாசல் !
அது
காட்டிடும் தினம்
புது வழி !!
Friday, May 15, 2009
ஓய்வு
அதீத மகிழ்ச்சி
சற்று அயர்ச்சியை தந்தது!
கவலை தான் உற்ற
நண்பன் என தோன்றியது!
எங்கோ தோன்றி
எது நோக்கியோ
சென்று கொண்டிருந்த காற்று
சற்றே இறங்கி
வருடிச் சென்ற பின்
மேய்ப்பனாய் மேகங்களை
விரட்டிச் செல்ல ஆரம்பித்தது!
கலைந்த மேகங்கள்
நினைவுச் சுனாமியை
கிளப்பி
அமிழ்ந்திருந்த எண்ணங்களை
தூக்கி சுழற்றியடிக்க..
இறுக்கிப்பிடித்த ஆடை
நெகிழ்ந்தது போல்
இலேசான விடுதலையும்
முற்றிலும் விழுமோ என
வெட்கமான பயமும்
மாற்றி ஊஞ்சலாடியது!
திசைகளை மறந்து
வழிகளை தொலைக்க
தடம் அழித்து
முட்களை மறந்து
நினைவுப் புதர்களை மிதித்து
ஆனந்த தாண்டவம்
ஆடியமைந்தது எண்ண ஓட்டம்!
காலப் பெருவெளியில்
ஓய்வெடுப்பது ஒரு
பெரிய வேலை!
உள்ளார்ந்த வேலை
தரும் உத்வேகம்
ஒரு பெரிய ஓய்வு!
சற்று அயர்ச்சியை தந்தது!
கவலை தான் உற்ற
நண்பன் என தோன்றியது!
எங்கோ தோன்றி
எது நோக்கியோ
சென்று கொண்டிருந்த காற்று
சற்றே இறங்கி
வருடிச் சென்ற பின்
மேய்ப்பனாய் மேகங்களை
விரட்டிச் செல்ல ஆரம்பித்தது!
கலைந்த மேகங்கள்
நினைவுச் சுனாமியை
கிளப்பி
அமிழ்ந்திருந்த எண்ணங்களை
தூக்கி சுழற்றியடிக்க..
இறுக்கிப்பிடித்த ஆடை
நெகிழ்ந்தது போல்
இலேசான விடுதலையும்
முற்றிலும் விழுமோ என
வெட்கமான பயமும்
மாற்றி ஊஞ்சலாடியது!
திசைகளை மறந்து
வழிகளை தொலைக்க
தடம் அழித்து
முட்களை மறந்து
நினைவுப் புதர்களை மிதித்து
ஆனந்த தாண்டவம்
ஆடியமைந்தது எண்ண ஓட்டம்!
காலப் பெருவெளியில்
ஓய்வெடுப்பது ஒரு
பெரிய வேலை!
உள்ளார்ந்த வேலை
தரும் உத்வேகம்
ஒரு பெரிய ஓய்வு!
Tuesday, April 21, 2009
Poems from my daughter Meena
Thursday, April 16, 2009
எழுத மறந்த டைரி குறிப்புகள்
தினம் வாங்கிய திட்டு
கடலை மிட்டாய் கணக்கு
பக்கத்து வீட்டு வனிதாவுடன்
ஓடிப் பிடித்த விளையாட்டு
வெற்றி பட்டியல்
எனத் தொடங்கிய
குழந்தைப் பருவ டைரி குறிப்புகள்
பார்த்த படங்களின் விமர்சனங்கள்
மனம் கவர்ந்த மங்கையரின்
ரகசிய பெயர் குறிப்புகள்
என விடலை பருவம் அடைந்து
கல்லூரி லேப்பில்
இரவல் பென்சில் வாங்க
என்னை அவள் அணுகிய
தருணம் தொடங்கிய
காதல் கவிதை தொகுப்பு
என வாலிபம் பெற
பின்னாளில்
சலவைக் குறிப்பு கூட
எழுத மறந்த மௌனம்
உண்மையின் உபத்திரவத்திற்கு பயந்து
ஒரு நல்ல நண்பனுக்கு
நான் இழைத்த
துரோகம்!
டைரியில்
எழுத மறந்த குறிப்புகள்
நான் ரசிக்க மறந்த
நாட்களின் தொடக்கங்கள்..
கடலை மிட்டாய் கணக்கு
பக்கத்து வீட்டு வனிதாவுடன்
ஓடிப் பிடித்த விளையாட்டு
வெற்றி பட்டியல்
எனத் தொடங்கிய
குழந்தைப் பருவ டைரி குறிப்புகள்
பார்த்த படங்களின் விமர்சனங்கள்
மனம் கவர்ந்த மங்கையரின்
ரகசிய பெயர் குறிப்புகள்
என விடலை பருவம் அடைந்து
கல்லூரி லேப்பில்
இரவல் பென்சில் வாங்க
என்னை அவள் அணுகிய
தருணம் தொடங்கிய
காதல் கவிதை தொகுப்பு
என வாலிபம் பெற
பின்னாளில்
சலவைக் குறிப்பு கூட
எழுத மறந்த மௌனம்
உண்மையின் உபத்திரவத்திற்கு பயந்து
ஒரு நல்ல நண்பனுக்கு
நான் இழைத்த
துரோகம்!
டைரியில்
எழுத மறந்த குறிப்புகள்
நான் ரசிக்க மறந்த
நாட்களின் தொடக்கங்கள்..
Sunday, April 05, 2009
பாலம்
ஊரை ஒட்டாமல்
சற்றே தள்ளி உயர்ந்திருந்தது
புதிய பாலம்!
தண்ணீர் காணாத தாகத்தில்
புதுப் பாலம்
எதெற்கென விழித்திருந்தனர்
ஊர் மக்கள்!
இமயத்தையும் குமரியையும்
சாலையில் இணைத்த
பெருமையில்
அர்ப்பணிக்க வந்தார்
கல்வெட்டு நாயகர்!
தண்ணீர் தராத மாநிலத்தை
தரையில் இணைக்க தகாதென
ஊர் திரள
ஒடியது அங்கே
இரத்த ஆறு!
உள்ளம் இணையாத மக்களின்
ஊர்களை இணைத்த
வெட்கத்தில் குறுகியது பாலம்!
அதை படமெடுத்து
நாளைய சரித்திர சாட்சியாக்கியது
நாசா விண்வெளி.
சற்றே தள்ளி உயர்ந்திருந்தது
புதிய பாலம்!
தண்ணீர் காணாத தாகத்தில்
புதுப் பாலம்
எதெற்கென விழித்திருந்தனர்
ஊர் மக்கள்!
இமயத்தையும் குமரியையும்
சாலையில் இணைத்த
பெருமையில்
அர்ப்பணிக்க வந்தார்
கல்வெட்டு நாயகர்!
தண்ணீர் தராத மாநிலத்தை
தரையில் இணைக்க தகாதென
ஊர் திரள
ஒடியது அங்கே
இரத்த ஆறு!
உள்ளம் இணையாத மக்களின்
ஊர்களை இணைத்த
வெட்கத்தில் குறுகியது பாலம்!
அதை படமெடுத்து
நாளைய சரித்திர சாட்சியாக்கியது
நாசா விண்வெளி.
Sunday, March 15, 2009
வின்செண்ட் வான் கோ
மல்லிகை மகள் - 9/16/07 / 4/30/08
--------------------------------------------
ஆம்ஸ்டர்டாமில் ஒரு நாள் சுற்றிப்பார்க்கும் வாய்ப்பு கிடைத்த போது , வழக்கம் போல ஏதாவது ஒரு சுற்றுலா பேருந்தில் ஏறி முக்கிய தலங்கள் அனைத்தின் முன்பும் புகைப்படம் எடுத்து சுற்றிப் பார்த்த இடங்களின் எண்ணிக்கையில் ஒன்றை சேர்த்த திருப்தி அடையலாம் என்றிருந்த போது , உடன் வந்த ரஷ்ய நண்பர் டிமிட்ரி நேரே வான் கோ ஓவிய அருங்காட்சியகம் செல்லலாம் என்றார். இது ஓவியர்களின் புனித தலம், அறிவு கோயில் என்றும் காணக் கிடைக்காத வான் கோவின் ஓவியங்கள் பல இங்கு உள்ளது என்று அழைத்துச் சென்றார்.
விமான நிலையத்திலிருந்து 20 நிமிட ரயில் பயணத்தில் சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடைந்தோம். மழை லேசாக தூற ஆரம்பிக்கவே, குடை ஒன்றையும்,வரைபடம் ஒன்றையும் வாங்கி கொண்டு, காபியை சிப்பினோம். மோனலிசா வகை ஓவியங்களா ,இல்லை தலையை பிய்க்க வைக்கின்ற நவீன ஓவியங்களா என்று நண்பரின் ஓவிய திறமையே சோதித்தேன். இரண்டும் இல்லை, இது சாமன்யர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் கருத்தோவியங்கள் என்றார். காபியை முடித்து, காபியுடன் வந்த சாக்லேட்டை கடித்து ( சாப்பிட்டவுடன் வெற்றிலை மாதிரி , காபியுடன் சாக்கலேட்) ,ட்ராம் ஒன்றை பிடித்து வான் கோவை வந்தடைந்தோம்.
10 யுரோ செலுத்தி உள்ளே சென்றால், உடன் கொண்டு வந்த பொருட்களை ( காமிரா உட்பட) லாக்கரில் போட்டு விட்டுதான் நிரந்தர காட்சிக் கூடத்திற்குள் செல்ல அனுமதித்தார்கள்.நிரந்தர காட்சிக் கூடம் மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. முதாலவது வான் கோவின் ஓவியங்கள். இரண்டாவது மற்ற கலைஞர்களின் ( அவரது சம காலத்தவர், நண்பர்கள் மற்றும் அவரின் ஓவிய வழி வந்தவர்கள்) ஓவியங்கள். மூன்றாவது வான் கோவின் ஓவிய வரலாற்றை பிரதிபலிக்கும் கடிதங்கள் மற்றும் பொருட்கள்.
"கலைகளிலே அவள் ஓவியம்" என்றார் கண்ணதாசன். "கலைகளிலே அவள் ஓவியம்" என்றார் கண்ணதாசன். அழகியல் மட்டுமின்றி, உணர்வியலகாவும் உள்ளதால்தான் ஓவியம் என அதன் உண்ணதத்தை கவிதையில் படைத்தாரோ நம் கவிஞர். அது போல் , ஓவியத்திலேயே புதுக்கவிதைகள் படைத்து இந்த உலக்த்தை உலுக்கியவர் தான் வின்செண்ட் வான் கோ ( 1853-1890). இந்த டச்சு (நெதர்லாந்த்) நாட்டவரின் கலைவடிவங்களை , டச்சு தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் வின்செண்ட் வான் கோ ஓவிய அருங்காட்சியகம் பெருமையுடன் தாங்கி வருகிறது.
ஓவியம் என்பது காட்சியை அச்சு பிசகாமல் நகல் எடுக்கும் கலையாக மட்டும் இருந்த காலத்தில் , ஓவியரின் திறமை என்பது ஓவியத்தின் தத்ரூபத்தில் மட்டும் மதிப்பிடப்பட்ட காலத்தில் ஒவியரை ஒரு படைப்பாளியாக காட்ட வித்திட்ட முதல் முயற்சி இது.காட்சியின் நகலாக ஒரு பரிமாணத்தை மட்டும் ஓவியம் காட்டாமல் , காண்பவரின் கற்பனையில் ஆயிரம் கதைகள் சொல்லும் ஒரு படைப்பாக அதை மாற்ற , காட்சியின் வரைவை சிறிதே திரித்து , கருப் பொருளின் வீர்யத்தை உணர்வாக வெளிப்படுத்தும் அவரின் முயற்சிகள்.
அவரின் ஓவியங்களில் காணப்படும் தூக்கலான வண்ணங்களும், அநாயசமான தூரிகை வீச்சும் ஒரு புதிய ஓவிய உலகிற்கு வழி வகுத்தது எனலாம்.வசீகர புன்னைகையோ, புரியாத புதிரோ இல்லை.அன்றாடம் காணும் காட்சிகள் தான், ஆனால் கார்பன் காப்பியாக இல்லாமல் , வண்ணங்களின் கலவையும் , தூரிகையின் வீச்சும் மனசோடு சொல்லும் கதைகள் ஆயிரம். வாயில்லா ஜீவன்களின் வார்த்தைகள் தான் வண்ணங்களோ?.
இவரின் ஆரம்ப கால ஓவியங்கள் , இயற்கையின் மீதிருந்த இவரின் ஈடுபாட்டை வெளிப்படுத்தும். இவரின் சகோதரர் தியோவின் ஆதரவோடு , பாரீஸ் சென்றபின் அங்கிருந்த திறமை மிகுந்த ஓவியர்களின் நட்பு இவரின் ஓவிய அணுகுமுறையை மாற்றியது. ஜப்பானிய ஓவியங்களும் இவரை மிகவும் கவர்ந்தது.இவை இரண்டும் வேர்ந்து வான் கோவின் தூரிகையில் , ஒரு புதிய ஓவிய உலகிற்கு பாதையிட்டன.வான் கோவின் வண்ணங்கள் அவரின் உணர்வுகளை பிரதிபலித்தன.நிறங்கள் உணர்வுகளின் ஊடகம் என்ற இவரின் அணுகுமுறை, புதுவகையான சாயங்களை உபயோகிக்கும் முறைகளையும், வரைந்தது போல் வர்ணம் தீட்டும் தூரிகை கெட்டியான வீச்சுகளையும்,தூக்கலான நிறங்களை பயன்படுத்தும் முறையையும் அறிமுகப்படுத்தியது.அவரது சகோதரர் தியோவின் ஆதரவும் நட்பும் அவர்களின் கடிதங்களும் கண் கலங்க செய்தது.
காவியம் எழுதும் போது ஏற்படும் பிழைகளுக்காக தனது தலையால் எழுத்தாணியால் குத்திக் கொண்ட சீ(ழ்)த்தலைசாத்தனார் போல , கோபத்தில் தன் காதையே நறுக்கிக் கொண்டவர் தான் வான் கோ.உலகமெங்கும் உன்னத
கலைஞர்களின் வாழ்க்கை ஒரே மாதிரிதான் போலும்.வறுமை,விரக்தி,எதிர்ப்பு , பைத்தியகாரப் பட்டம், உலகத்தை உலுக்கிவிடும் மனோபலம், வாழும் போது கிட்டாப் புகழ்,இளம் வயதில் அகால மரணம்.
200கும் மேற்பட்ட ஓவியங்கள மற்றும் கடிதங்கள் அவரின் வாழ்க்கையின் ஐந்து பகுதிகளாக அவர் வாழ்ந்த இடங்களின் காலகட்டமாக காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளது.நெதர்லாந்த்(Netherland),பாரீஸ்(Paris),ஆர்ல் (Arles), சென்ரேமி(Saint-Rémy),ஒவெர்சுர்வஸ்(Auvers-sur-Oise)
ஆரம்ப காலத்தில் தனது உறவினர் ஆண்டனிடம் (Anton Mauve) ஓவியம் வரைய கற்றுக் கொண்டாலும் , பின்னர் ஏகலைவன் போல் தானே படம் வரையக் கற்றுக் கொண்டு வரைந்த பண்ணை காட்சிகளும், விவசாயிகளின் படங்களும் "நெதர்லாந்த்" பகுதியில் நிறைந்திருக்கிறது.இந்த காலகட்ட ஓவியங்கள் , கறுமையான வண்ணங்களை கொண்டிருப்பதை காணலாம்.இதை பூமியின் நிறமெனலாம். 40க்கும் மேற்பட்ட விவசாய காட்சிகள், பண்ணை ஆட்கள் ஒவியம், சிகரெட் பிடிக்கும் எலும்புக் கூடு ஓவியங்கள் அற்புதமானது. ஒரு விவசாய குடும்பம் இரவு உணவு அருந்தும் காட்சியில் அமைந்த்த உருளைக்கிழங்கு உண்பவர்கள் என்ற தலைப்பிலிட்ட ஓவியம் பிரபலமானது.
பின்னர் பாரிஸ் சென்று , அவரது சகோதரர் தியோவுடன் இருந்து ,பிரென்சு ஓவிய கல்லூரியில் சிறிது காலம் ஓவியம் பயின்று வரைந்த படங்கள் "பாரீஸ்" பகுதியில் உள்ளது.இந்த காலகட்டத்தில் தான் அவரது புகழ்பெற்ற ஓவிய பாணி ஆரம்பமானது. பிரகாசமான பிண்ணனிகளையும்,நகர்புற காட்சிகளையும் கொண்ட படங்கள் , வண்ணங்களின் விளையாட்டுகளில் உயிரோட்டமாய் உள்ளன.பாரிஸில் தான் தனி நபர்களின் ஓவியங்களை வரைவதன் மூலம் வருமானம் ஈட்டமுடியும் என்று தோன்றியதால் , தனி நபர் ஓவியங்களை வரைய பயிற்சி செய்ய ஆரம்பித்திருக்கிறார்.மாதிரியாக மற்றவர்களை அமர்த்திக் கொள்ள நிதிநிலைமை இடம் கொடாததால் , கண்ணாடி முன் அமர்ந்து கொண்டு தன்னையே வெவ்வேறு பாணிகளில் வரைந்து பழகிய படங்கள் , வான் கோ என்ற கலைஞனின் கனவை தினம் சொல்கின்றன. காலத்தின் சாட்சியாக, தனது தோற்றத்தின் ஞாபகமாக , சுவரை அலங்கரிக்க தன்னை அசலாக படமாக வரைந்து வைத்து கொள்ள எத்தனிக்கும் மனிதரிடம், தனது மனத்தின் படமாக இவற்றை வரைந்துள்ளார்.
சக ஓவியர்களை ஒன்று சேர்த்து ஓவிய கூடம் அமைப்பது அவரது கனவாக இருந்தது. அதற்காக தென் பிரான்ஸில் உள்ள ஆர்ல் பிரதேசத்தில் , மஞ்சள் இல்லம் எனும் ஓவியக் கூடத்தை வாடகைக்கு எடுத்த அவரின் முயற்சிகளின் நினைவுபடுத்தும் படங்கள் , "ஆர்ல்" பகுதியில் உள்ளது. இங்குதான் உலக் புகழ் பெற்ற சூரிய காந்தி படங்கள் உள்ளது. மஞ்சள் நிறத்தின் மேலிருந்த அவரது காதல் , அவரது அனைத்து படங்களிலும் காண முடியும். நண்பர் கோகெனுடன் (Gauguin) கொண்ட கருத்து வேறுபாட்டில் தனது காதை அறுத்தெரிந்ததும் இங்கு தான்.
ஓவியக் கூடம் அமைக்கும் முயற்சியில் தோல்வி,நண்பருடன் கருத்து வேறுபாடு என் விரக்தியில் வாழ்க்கையின் ஓரத்திற்கு விரட்டப்பட ,வான் கோ சென்ரேமி மனநல மருத்துவமனையில் தன்னை சேர்த்துக் கொண்டார். வெளி உலகில் இருப்பதை விட , இங்கு அமைதியாக இருப்பதாக உணர்ந்ததாக தியோவிற்கு எழுதிய கடிதத்தில் தெரிவிக்கிறார். தனது அறை சன்னலின் வழியாக தெரிந்த மரங்களையும், பூக்களையும்,பரந்தவெளிகளையும் , கோதுமை விளைநிலங்களையும், சைப்ரஸ் மரங்களையும் கண்டு வரைந்த படங்கள் "சென்ரேமி" பகுதியில் உள்ளது. காட்டின் பசுமையில் ஊடுரும் ஒளிக்கதிர்கள் பிரதிபலிக்கும் நிறங்களின் கலவை கண்களின் கனவுலகம்.மற்ற ஓவியர்களின் கருப்பு வெள்ளை வரைபடங்களை மாதிரியாகக் கொண்டு வரைந்த வண்ண ஒவியங்கள் பலவும் உண்டு.
நகர்புர வாழ்க்கையை விரும்பாத , அதே சமயம் சகோதரர் தியோவின் அருகாமையில் இருக்க் விரும்பிய வான் கோ, பாரிஸ்க்கு அருகில் உள்ள ஒவெர்சுர்வஸில் மருத்துவர் பாலின் (Paul Gachet) கண்காணிப்பில் இருந்த போது வரைந்த கிராமப்புற தோற்றங்கள் , "ஒவெர்சுர்வஸ்" பகுதியில் உள்ளது.வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஆரோக்கியத்தையும்,ஊக்கத்தையும் இந்த காட்சிகள் அளிப்பதாக வான் கோவின் கடிதங்கள் விவரிக்கின்றன.
1890-ல் விரக்தியின் உச்சத்தில் அவர் ஒரு கோதுமை விளைநிலத்தில் தன்னை சுட்டுக் கொண்டார். இறுதியில் , அவரது சவப்பெட்டியை அலங்கரித்ததும் மஞ்சள் மலர்கள் தான்.
--------------------------------------------
ஆம்ஸ்டர்டாமில் ஒரு நாள் சுற்றிப்பார்க்கும் வாய்ப்பு கிடைத்த போது , வழக்கம் போல ஏதாவது ஒரு சுற்றுலா பேருந்தில் ஏறி முக்கிய தலங்கள் அனைத்தின் முன்பும் புகைப்படம் எடுத்து சுற்றிப் பார்த்த இடங்களின் எண்ணிக்கையில் ஒன்றை சேர்த்த திருப்தி அடையலாம் என்றிருந்த போது , உடன் வந்த ரஷ்ய நண்பர் டிமிட்ரி நேரே வான் கோ ஓவிய அருங்காட்சியகம் செல்லலாம் என்றார். இது ஓவியர்களின் புனித தலம், அறிவு கோயில் என்றும் காணக் கிடைக்காத வான் கோவின் ஓவியங்கள் பல இங்கு உள்ளது என்று அழைத்துச் சென்றார்.
விமான நிலையத்திலிருந்து 20 நிமிட ரயில் பயணத்தில் சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடைந்தோம். மழை லேசாக தூற ஆரம்பிக்கவே, குடை ஒன்றையும்,வரைபடம் ஒன்றையும் வாங்கி கொண்டு, காபியை சிப்பினோம். மோனலிசா வகை ஓவியங்களா ,இல்லை தலையை பிய்க்க வைக்கின்ற நவீன ஓவியங்களா என்று நண்பரின் ஓவிய திறமையே சோதித்தேன். இரண்டும் இல்லை, இது சாமன்யர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் கருத்தோவியங்கள் என்றார். காபியை முடித்து, காபியுடன் வந்த சாக்லேட்டை கடித்து ( சாப்பிட்டவுடன் வெற்றிலை மாதிரி , காபியுடன் சாக்கலேட்) ,ட்ராம் ஒன்றை பிடித்து வான் கோவை வந்தடைந்தோம்.
10 யுரோ செலுத்தி உள்ளே சென்றால், உடன் கொண்டு வந்த பொருட்களை ( காமிரா உட்பட) லாக்கரில் போட்டு விட்டுதான் நிரந்தர காட்சிக் கூடத்திற்குள் செல்ல அனுமதித்தார்கள்.நிரந்தர காட்சிக் கூடம் மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. முதாலவது வான் கோவின் ஓவியங்கள். இரண்டாவது மற்ற கலைஞர்களின் ( அவரது சம காலத்தவர், நண்பர்கள் மற்றும் அவரின் ஓவிய வழி வந்தவர்கள்) ஓவியங்கள். மூன்றாவது வான் கோவின் ஓவிய வரலாற்றை பிரதிபலிக்கும் கடிதங்கள் மற்றும் பொருட்கள்.
"கலைகளிலே அவள் ஓவியம்" என்றார் கண்ணதாசன். "கலைகளிலே அவள் ஓவியம்" என்றார் கண்ணதாசன். அழகியல் மட்டுமின்றி, உணர்வியலகாவும் உள்ளதால்தான் ஓவியம் என அதன் உண்ணதத்தை கவிதையில் படைத்தாரோ நம் கவிஞர். அது போல் , ஓவியத்திலேயே புதுக்கவிதைகள் படைத்து இந்த உலக்த்தை உலுக்கியவர் தான் வின்செண்ட் வான் கோ ( 1853-1890). இந்த டச்சு (நெதர்லாந்த்) நாட்டவரின் கலைவடிவங்களை , டச்சு தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் வின்செண்ட் வான் கோ ஓவிய அருங்காட்சியகம் பெருமையுடன் தாங்கி வருகிறது.
ஓவியம் என்பது காட்சியை அச்சு பிசகாமல் நகல் எடுக்கும் கலையாக மட்டும் இருந்த காலத்தில் , ஓவியரின் திறமை என்பது ஓவியத்தின் தத்ரூபத்தில் மட்டும் மதிப்பிடப்பட்ட காலத்தில் ஒவியரை ஒரு படைப்பாளியாக காட்ட வித்திட்ட முதல் முயற்சி இது.காட்சியின் நகலாக ஒரு பரிமாணத்தை மட்டும் ஓவியம் காட்டாமல் , காண்பவரின் கற்பனையில் ஆயிரம் கதைகள் சொல்லும் ஒரு படைப்பாக அதை மாற்ற , காட்சியின் வரைவை சிறிதே திரித்து , கருப் பொருளின் வீர்யத்தை உணர்வாக வெளிப்படுத்தும் அவரின் முயற்சிகள்.
அவரின் ஓவியங்களில் காணப்படும் தூக்கலான வண்ணங்களும், அநாயசமான தூரிகை வீச்சும் ஒரு புதிய ஓவிய உலகிற்கு வழி வகுத்தது எனலாம்.வசீகர புன்னைகையோ, புரியாத புதிரோ இல்லை.அன்றாடம் காணும் காட்சிகள் தான், ஆனால் கார்பன் காப்பியாக இல்லாமல் , வண்ணங்களின் கலவையும் , தூரிகையின் வீச்சும் மனசோடு சொல்லும் கதைகள் ஆயிரம். வாயில்லா ஜீவன்களின் வார்த்தைகள் தான் வண்ணங்களோ?.
இவரின் ஆரம்ப கால ஓவியங்கள் , இயற்கையின் மீதிருந்த இவரின் ஈடுபாட்டை வெளிப்படுத்தும். இவரின் சகோதரர் தியோவின் ஆதரவோடு , பாரீஸ் சென்றபின் அங்கிருந்த திறமை மிகுந்த ஓவியர்களின் நட்பு இவரின் ஓவிய அணுகுமுறையை மாற்றியது. ஜப்பானிய ஓவியங்களும் இவரை மிகவும் கவர்ந்தது.இவை இரண்டும் வேர்ந்து வான் கோவின் தூரிகையில் , ஒரு புதிய ஓவிய உலகிற்கு பாதையிட்டன.வான் கோவின் வண்ணங்கள் அவரின் உணர்வுகளை பிரதிபலித்தன.நிறங்கள் உணர்வுகளின் ஊடகம் என்ற இவரின் அணுகுமுறை, புதுவகையான சாயங்களை உபயோகிக்கும் முறைகளையும், வரைந்தது போல் வர்ணம் தீட்டும் தூரிகை கெட்டியான வீச்சுகளையும்,தூக்கலான நிறங்களை பயன்படுத்தும் முறையையும் அறிமுகப்படுத்தியது.அவரது சகோதரர் தியோவின் ஆதரவும் நட்பும் அவர்களின் கடிதங்களும் கண் கலங்க செய்தது.
காவியம் எழுதும் போது ஏற்படும் பிழைகளுக்காக தனது தலையால் எழுத்தாணியால் குத்திக் கொண்ட சீ(ழ்)த்தலைசாத்தனார் போல , கோபத்தில் தன் காதையே நறுக்கிக் கொண்டவர் தான் வான் கோ.உலகமெங்கும் உன்னத
கலைஞர்களின் வாழ்க்கை ஒரே மாதிரிதான் போலும்.வறுமை,விரக்தி,எதிர்ப்பு , பைத்தியகாரப் பட்டம், உலகத்தை உலுக்கிவிடும் மனோபலம், வாழும் போது கிட்டாப் புகழ்,இளம் வயதில் அகால மரணம்.
200கும் மேற்பட்ட ஓவியங்கள மற்றும் கடிதங்கள் அவரின் வாழ்க்கையின் ஐந்து பகுதிகளாக அவர் வாழ்ந்த இடங்களின் காலகட்டமாக காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளது.நெதர்லாந்த்(Netherland),பாரீஸ்(Paris),ஆர்ல் (Arles), சென்ரேமி(Saint-Rémy),ஒவெர்சுர்வஸ்(Auvers-sur-Oise)
ஆரம்ப காலத்தில் தனது உறவினர் ஆண்டனிடம் (Anton Mauve) ஓவியம் வரைய கற்றுக் கொண்டாலும் , பின்னர் ஏகலைவன் போல் தானே படம் வரையக் கற்றுக் கொண்டு வரைந்த பண்ணை காட்சிகளும், விவசாயிகளின் படங்களும் "நெதர்லாந்த்" பகுதியில் நிறைந்திருக்கிறது.இந்த காலகட்ட ஓவியங்கள் , கறுமையான வண்ணங்களை கொண்டிருப்பதை காணலாம்.இதை பூமியின் நிறமெனலாம். 40க்கும் மேற்பட்ட விவசாய காட்சிகள், பண்ணை ஆட்கள் ஒவியம், சிகரெட் பிடிக்கும் எலும்புக் கூடு ஓவியங்கள் அற்புதமானது. ஒரு விவசாய குடும்பம் இரவு உணவு அருந்தும் காட்சியில் அமைந்த்த உருளைக்கிழங்கு உண்பவர்கள் என்ற தலைப்பிலிட்ட ஓவியம் பிரபலமானது.
பின்னர் பாரிஸ் சென்று , அவரது சகோதரர் தியோவுடன் இருந்து ,பிரென்சு ஓவிய கல்லூரியில் சிறிது காலம் ஓவியம் பயின்று வரைந்த படங்கள் "பாரீஸ்" பகுதியில் உள்ளது.இந்த காலகட்டத்தில் தான் அவரது புகழ்பெற்ற ஓவிய பாணி ஆரம்பமானது. பிரகாசமான பிண்ணனிகளையும்,நகர்புற காட்சிகளையும் கொண்ட படங்கள் , வண்ணங்களின் விளையாட்டுகளில் உயிரோட்டமாய் உள்ளன.பாரிஸில் தான் தனி நபர்களின் ஓவியங்களை வரைவதன் மூலம் வருமானம் ஈட்டமுடியும் என்று தோன்றியதால் , தனி நபர் ஓவியங்களை வரைய பயிற்சி செய்ய ஆரம்பித்திருக்கிறார்.மாதிரியாக மற்றவர்களை அமர்த்திக் கொள்ள நிதிநிலைமை இடம் கொடாததால் , கண்ணாடி முன் அமர்ந்து கொண்டு தன்னையே வெவ்வேறு பாணிகளில் வரைந்து பழகிய படங்கள் , வான் கோ என்ற கலைஞனின் கனவை தினம் சொல்கின்றன. காலத்தின் சாட்சியாக, தனது தோற்றத்தின் ஞாபகமாக , சுவரை அலங்கரிக்க தன்னை அசலாக படமாக வரைந்து வைத்து கொள்ள எத்தனிக்கும் மனிதரிடம், தனது மனத்தின் படமாக இவற்றை வரைந்துள்ளார்.
சக ஓவியர்களை ஒன்று சேர்த்து ஓவிய கூடம் அமைப்பது அவரது கனவாக இருந்தது. அதற்காக தென் பிரான்ஸில் உள்ள ஆர்ல் பிரதேசத்தில் , மஞ்சள் இல்லம் எனும் ஓவியக் கூடத்தை வாடகைக்கு எடுத்த அவரின் முயற்சிகளின் நினைவுபடுத்தும் படங்கள் , "ஆர்ல்" பகுதியில் உள்ளது. இங்குதான் உலக் புகழ் பெற்ற சூரிய காந்தி படங்கள் உள்ளது. மஞ்சள் நிறத்தின் மேலிருந்த அவரது காதல் , அவரது அனைத்து படங்களிலும் காண முடியும். நண்பர் கோகெனுடன் (Gauguin) கொண்ட கருத்து வேறுபாட்டில் தனது காதை அறுத்தெரிந்ததும் இங்கு தான்.
ஓவியக் கூடம் அமைக்கும் முயற்சியில் தோல்வி,நண்பருடன் கருத்து வேறுபாடு என் விரக்தியில் வாழ்க்கையின் ஓரத்திற்கு விரட்டப்பட ,வான் கோ சென்ரேமி மனநல மருத்துவமனையில் தன்னை சேர்த்துக் கொண்டார். வெளி உலகில் இருப்பதை விட , இங்கு அமைதியாக இருப்பதாக உணர்ந்ததாக தியோவிற்கு எழுதிய கடிதத்தில் தெரிவிக்கிறார். தனது அறை சன்னலின் வழியாக தெரிந்த மரங்களையும், பூக்களையும்,பரந்தவெளிகளையும் , கோதுமை விளைநிலங்களையும், சைப்ரஸ் மரங்களையும் கண்டு வரைந்த படங்கள் "சென்ரேமி" பகுதியில் உள்ளது. காட்டின் பசுமையில் ஊடுரும் ஒளிக்கதிர்கள் பிரதிபலிக்கும் நிறங்களின் கலவை கண்களின் கனவுலகம்.மற்ற ஓவியர்களின் கருப்பு வெள்ளை வரைபடங்களை மாதிரியாகக் கொண்டு வரைந்த வண்ண ஒவியங்கள் பலவும் உண்டு.
நகர்புர வாழ்க்கையை விரும்பாத , அதே சமயம் சகோதரர் தியோவின் அருகாமையில் இருக்க் விரும்பிய வான் கோ, பாரிஸ்க்கு அருகில் உள்ள ஒவெர்சுர்வஸில் மருத்துவர் பாலின் (Paul Gachet) கண்காணிப்பில் இருந்த போது வரைந்த கிராமப்புற தோற்றங்கள் , "ஒவெர்சுர்வஸ்" பகுதியில் உள்ளது.வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஆரோக்கியத்தையும்,ஊக்கத்தையும் இந்த காட்சிகள் அளிப்பதாக வான் கோவின் கடிதங்கள் விவரிக்கின்றன.
1890-ல் விரக்தியின் உச்சத்தில் அவர் ஒரு கோதுமை விளைநிலத்தில் தன்னை சுட்டுக் கொண்டார். இறுதியில் , அவரது சவப்பெட்டியை அலங்கரித்ததும் மஞ்சள் மலர்கள் தான்.
Subscribe to:
Posts (Atom)