Tuesday, July 31, 2007

கடற்கரை

வற்றிய கடல்
வரைந்த கோலங்கள்
கரையெங்கும் வரவேற்கும்!


கடல்வனம் காட்டும்
நீலவண்ணம்
வெண்ணிறமாய் கரை வந்து
கண்களை வருடும்!


உவர்ப்புக்குள்
உயிர்களை அடக்கி
உலாவரும் அலைகள்
உணர்வுகளுடன் ஒத்ததிரும்!


கரை சேர்ந்த சிப்பிகளின்
உடைந்த கூடும்
கைதேர்ந்த சிற்பியின்
செதுக்கலாய் கலை வண்ணம் சேர்க்கும்!

பால் வனமாய் வெண்மணல்
பூத்திடும் சந்தோஷப் பூக்கள்
பாலைவன சோலைகளாய்
பார்க்கும் இடமெங்கும்
பரவசம்!!!