Thursday, April 21, 2005

சந்தரமுகி 'பஞ்ச் டயலாக்'

சந்தரமுகி விமர்சனம் எழுதியோ, திரைப்படம் பார்க்க சென்று வந்த அனுபவத்தையோ எழுதியோ பிறவி பயனை அடைய எனக்கும் ஆசை தான். இருந்தாலும் , நான் எழுதுவதை எப்பொழுதாவது படிக்கும் ஒன்றிரண்டு வாசக நெஞ்சங்கள் பல விமர்சங்களை படித்து குழம்பியிருக்கும் நிலையில் , மேலும் படுத்தாமல்நம்மால் ஆன உதவியாக அதை செய்யாமல் விட்டு விடிடுகிறேன்.

சியாட்டல் ( ரெட்மண்D) திரையரங்கில் , முதலில் சென்ற ஒரு சிலர் ,ஊரில் தெரிந்த அனைவருக்கும் சீட் பிடிக்கிறேன் பேர்வழி என்று , புறம்போக்கு நிலம் போல பல வரிசை இருக்கைகளை துண்டு போட்டு பிடித்து வைக்க , அடுத்த வந்த சிலர் , முன்னுரிமை கேட்டு போராட , கடைசியாகா டிக்கெட் வாங்கியும் , இருக்கை கிடைக்காமல் பலர் திரும்பி விட்டனர்.

அதனால் , அடுத்த நாள் அலுவலகத்தில் அதைப் பற்றி சூடான விவாதம் மின்னஞ்சல் குழுவில் இடம் பெற்றது. சந்தடி சாக்கில் , படம் பார்க்காத ஒருவர் படத்தில் 'பஞ்ச் டயலாக்'இல்லையாமே , படம் எப்படி இருந்தது என்று வினவ , அடுத்தவரின் பதில் இது

eppudu choodu.......I will give you one ....(Stepping in For RAJINI)
Munnadiye vanthu seetu pudicha 'family'um.......Avangaloda seetukku sandapodara 'family'um ozhunga padam pathatha saritharame illa.......


மின்அஞ்சல்கள் குவிவதை பார்த்த அடுத்தவர் , எப்பொழுதும் மின் அஞ்சலே வராத இந்த (தமிழ்) குழுவில் , இத்தனை ஈ-மெயில்களா என்று கடுப்படிக்கதிரையரங்கும் நிறைந்து வழிவதானாலும் , மெயில் பாக்ஸ் நிறைந்து வழிவதானாலும் , அதற்கு காரணம் தலைவர் தான் என்றார் மற்றொருவர்.

மொத்தத்தில் , எனக்கு ஒரே டிக்கெட்டில் 3 படம் பார்த்த திருப்தி.நீண்ட நாட்களுக்குப் பின் , அபரிமிதான வெற்றி பெற்ற ரஜினி படம் , அருமையான கதைப் பின்னணி கொண்ட ஒரு நல்ல சஸ்பென்ஸ் திரில்லர் படம் தமிழில் பார்த்த திருப்தி(ஒரிஜினல் கதை/படம் பண்ணியவர்களுக்கு ஒரு ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ..........), பக்கா மசாலா வாசு படம் ( அட்டகாசமான திரைக்கதை , இயக்கம் , இசை , நீண்ட நாட்கள் கழித்து SPBயின் குரலிசை)

படம் பார்த்து என் பெண்ணிற்கு காய்ச்சல். எனக்கும் ஜோவின் முட்டை கண் இரவில் வந்து பயமுறுத்தியது. லக்கலக்கலக்கல்க்கல்க...


பி.கு.: நான் விமர்சனம் எழுதும் பலரைப் போல நல்ல திரைப் பட ரசிகன் இல்லை. ரஜினி biased ரசிகன்.

Wednesday, April 06, 2005

மேடை பயம்

இன்று மேடை பேச்சு பற்றிய ஒரு பயிற்சிக்கு சென்ற இடத்தில் கேட்ட தகவல்.உலகில் அதிக மக்கள் பயப்படும் முதல் விஷயம் மேடை பேச்சு. அதற்கு அடுத்த இடம் தான் மரணத்திற்கு. செயின்ஃபெல்ட்(Seinfeld) ஒரு முறை நகைச்சுவையாக மரண அஞ்சலி செலுத்தி பேசுபவர்களில் , இப்படி மேடை ஏறி அஞ்சலி சொல்வதை விட மரண படுக்கையில் தானே இருந்திருக்கலாம் என்று எண்ணுபவர்கள் அதிகம் என்று கூறினாராம்.


கல்லூரி வரை மேடை பேச்சு என்றால் , கட்டை குரலில் எதுகை மோனையோடு பேசும் திராவிட சிகாமணிகள் , சுந்தர தமிழில் அடுக்கு மொழியில் மற்றவர்கள் படித்திடாத சங்க கவிதைகளை சுட்டிக் காட்டி பேசும் தமிழ் ஆர்வலர்கள் , இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக பேசும் அரசியல் வாதிகள் , துணுக்கு தோரணம் கட்டும் பட்டிமன்ற சொற்பொழிவார்கள் , குட்டிக் கதைகள் சொல்லி அருள் மொழி வழங்கும் ஆன்மீகவாதிகள் , தத்து பித்தென்று பேசும் திரை நடிகர்கள் என்று தான் பார்த்திருந்தேனே தவிர , சொல்ல வந்த கருத்தை தெளிவாக , எளிமையாக புரியும்படி , மனதில் என்றும் இருக்கும் படி பேசியவர்களை பார்த்தது அரிது.

வேலை பார்க்க ஆரம்பித்த பின் தான் , நிறுவனங்களின் உயர் பதவியில் இருப்பவர்கள் (சிலர்) தான் , நான் பார்த்ததில் மிகச் சிறந்த பேச்சாளர்களாக இருந்திருக்கிறார்கள். மற்றவர்களைப் போல தன்னுடைய திறமையை வெளிப்படுத்தும் ஒரு கருவியாக இதை பயன் படுத்தாமல் , கேட்பவர்கள் தான் பேசும் கருத்தில் உடன் பட்டு , நம்பிக்கையோடு உழைப்பதில் தான் , நிறுவனத்தின் வெற்றி இருக்கிறது என்று எண்ணுவதால் இப்படி அமைகிறது போலும். மைக்கேல் பெய்னர் (Michael Feiner) கூட தான் திறமைசாலி என்று மற்றவர்கள் எண்ணும்படி பேசுபவனை விட , கேட்பவர்கள் திறமைசாலிகள் என்று எண்ணும்படி நடந்து கொள்பவனிற்கே வெற்றி அதிகம் என்று கருத்து வரும்படி தனது நூலில் எழுதியுள்ளார்.