Monday, December 18, 2006

காணாமல் போகும் தந்திரம்

காணவில்லை
ஆறாம் வகுப்பு பூதலிங்கத்தை
கலங்கியது நண்பர் கூட்டம்..

வறுமையால்
அத்தை வீட்டில்
படித்து வந்தவனை
பிச்சை எடுக்க
கடத்தியவன் எவனோ?

காணாமல் போகும் பயம்
காணத் தொடங்கியது அனைவரிடமும்

பிள்ளை பிடிப்பவன்
பூசிய விபூதி
வியர்வையில் வசியம் அழிய
தப்பிய பூதலிங்கம்
தாய் தந்தையோடு
இப்பொழுது என
கசிய தொடங்கியது சேதி..

பள்ளி நேரத்தில் கூட
பாத்திரம் விளக்கியவன்
பயத்தையும் விலக்கினான் !
சமூகத்தையும் விளக்கினான் !!
விபூதியில் அல்ல விஷயம் !!!

Tuesday, November 28, 2006

பனி

பூ வரம்
கேட்டதோ
இந்த புல்லினம்
புதிதாய் பூத்துவிட்டதே
இந்த வெண் மல்லி !

வெள்ளை சட்டை
கேட்டதோ
வெற்றுடம்பில் வாடிடும் சாலை
விரிந்து ஆடையானதே
இந்த வெண்பருத்தி!

சருக்கு மரம்
கேட்டதோ
சிறு குழந்தைகள்
வீதிக்கு வந்ததே
இந்த வெள்ளிப் பனி மலை


பரிதியை
வென்றதே
பனி இன்று
பாரியானதாலா
ஈகையில்...

  Posted by Picasa

Thursday, November 16, 2006

முயுனிக் - ஜெர்மனி
















நிப்ஹென்புர்க் அரண்மனை

Nymphenburg Palace

நிப்ஹென்புர்க் அரண்மனை

Marble Table and paintings inside Nymphenburg Palace

நிப்ஹென்புர்க் அரண்மனை

Inside Nymphenburg Palace

BMW பொருட்காட்சி நிலையம்

BMW Museum

ஒலிம்பிக் அரங்கு

Munich Olympic Stadium

புதிய நகர மண்டபம்

Neues Rathaus

Friday, November 10, 2006

ஆகாயம்

ஆகாய ஜன்னல்
காட்டிடும்
ஆயிரம் ஒளிச் சிதறல்கள்

நித்தம் நிறம் மாறும்
அரங்கத் திரையில்
விரிந்து மறையும்
நட்சத்திர நாடகம்

விழித்திரையை அடைய
எடுத்திடும்
ஒளிவருடம் பல

ரசிக்கத் தொடங்கிய
மனம் அதன்
ரகசியம் அறிய
துடித்திட

வியந்தது போதும் என்
விண்ணில் சற்றே
மிதந்து வருகிறேன்
புவியாளே உன்
அன்பு பிடியை சற்றே
தளர்த்தேன்!

வாண வில்லை
வளைத்து அம்பெய்தி
உன்னை கண்சிமிட்டி
ஏளனம் செய்யும் அந்த
நட்சத்திர கூட்டத்தய்
வென்று வருகிறேன்

கடமை தவறிய
கார்மேகங்களை
கண்டித்து வருகிறேன்

அழிவில் தொடங்கியு
உன் ஆரம்பத்தின்
அதிசயத்தை
அறிந்து வருகிறேன்

Sunday, October 22, 2006

தீபாவளி

அமுதா மற்றும் அவரது தோழியர்கள் ஒரு மாத காலமாக திட்டமிட்டு தீபாவளி கொண்டாட்டத்தை நேற்று இனிதே எங்கள் இல்லத்தில் நடத்தினர்.
அப்பொழுது எடுக்கப்பட்ட நிகழ்படத் துண்டுகள் இங்கே. நடந்த அனைத்துப் போட்டிகளிலும் , பெருவாரியான மதிப்பெண்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது , எங்கள் அணியே என்பது இரண்டாவது நிகழ்படத்தின் இரைச்சலில் இருந்து தெளிவாக தெரியும்.



Monday, July 31, 2006

ஓடை

மலையைக் குடைந்த
ஓடை
மௌனமாகும்
மண்ணின் மடியில்

கருங்குகை
கரைந்தெடுத்த
கனிமங்கள்
கரை சேர்க்கும்

நிலவியலை
நிதம் செதுக்கும்
பசுமையைப்
பண்படுத்தும்

எனினும்
நொடி நேரம்
சுவம் கொளாது
பிரிந்து செல்லும்


விதிகளுக்கு அடங்காத
வீர்யம் பிறழாது
மீண்டும்
விண் நோக்கும்

Thursday, July 20, 2006

காய்ந்த மரம்


தளும்பும் குளம்
தரை சேர்த்த மரம்
இருந்த இடம்
முகில் முகரும்
உயரம் எனினும்
மிதந்தது போதும் என
கரையில் காய்வது
கால்களுக்கு ஒய்வு தரவா?
இல்லை! எண்ணத்திற்கு ...?

Sunday, July 02, 2006

டென்மார்க் - சில புகைப்படங்கள்

டென்மார்க் - சில புகைப்படங்கள்













கடற்கன்னி



காவலர் மாற்ற அணிவகுப்பு



குளிர்கால அரண்மணை



மாலுமிகளின் பழைய உல்லாசபுரி



கன்னி முரசு



கிரிஸ்டியன்போர்க் அரண்மனை


Sunday, May 28, 2006

இரண்டு கால் பூச்சி

கடந்து வந்த பாதையின்
காலடி தடங்கள் கலைந்தது

விடிதலும் சாயலும்
விளக்கொளியில்
விரிந்து மறைந்தது

தேன் சிந்திய வானம்
திராவகமாய் எரிந்தது

கோழியின் கூவல்
வாகன இரைச்சலில் குறைந்தது

ஒப்பாரியும் ஓங்கார சிரிப்பும்
நாசூக்கில் நசுங்கியது

ஆட்டமும் பாட்டும்
தொலைக்காட்சி முன் அடங்கியது

பம்புசெட்டு குளியல்
பக்கெட்டில் படிந்தது

பாத்தி கட்டிய தோட்டம்
வரவேற்பறை காகித பூவானது

பூசி மெழுகிய ஒப்பனை
இழிக்கத் தொடங்கியதும்
இனம் புரியாத சோகம்
இதயம் முழுதும் வியாபித்தது

வழியக் காத்திருக்கும்
கண்ணீர் துளிகள் கனத்தது

மாறியது தெரிந்தே என்றாலும்
மருகுவது மட்டும் ஏன்?
வெருமையில் அசைபோடவா!


பட்டாம் பூச்சியானதா
இந்த இரண்டு கால் பூச்சி
இல்லை பச்சோந்தியானதா?

Thursday, May 25, 2006

இரும்புக்கை மாயாவி

காமிக்ஸ் படிக்கும் போது மாயாவி எல்லாருக்கும் பிடிக்கும் தானே!!!
மற்றவர்கள் கண்ணுக்கு தெரியாமல் இருப்பதில் எவ்வளவு வசதிகள் உள்ளன.
கண்ணிற்கு தெரியாமல் இருக்கும் போது தான் நம் உண்மை உருவம் தெரியும்.
அடுத்த ஜேம்ஸ்பாண்ட் படத்திற்கு தயார் செய்வது போல் லண்டனில் இந்த முயற்சி நிஜமாகவே நடக்கிறதாக இந்த செய்தி தெரிவிக்கிறது.

http://www.newscientisttech.com/article.ns?id=dn9227

http://news.bbc.co.uk/1/hi/sci/tech/4968338.stm

Monday, May 22, 2006

யூரோவிஷன் பாட்டு போட்டி

யூரோவிஷன் ( Eurovision) பாட்டு போட்டியின் இறுதிப் போட்டியை தொலைக்காட்சியில் பார்க்க நேரிட்டது.பின்லேண்ட் மான்ஸ்டர்ஸ் வெற்றி பெற்றனர்.கெட்ட வேஷம் போட்டால் எல்லாருக்கும் பிடித்துப் போகிறது. ரஷ்யாவின் டிமா மிகவும் உற்சாகத்துடன் பாடியதாக எனக்கு பிடித்திருந்தது.அந்த குழு பாடும் போது அரங்கம் முழுதும் அந்த உற்சாகம் பரவியிருந்தது. யுக்ரைனின் டினாவின் புன்னகை கசிந்த முகபாவனையும்,ஆட்டமும் நன்றாக இருந்தது.

நாடுகள் வாரியாக ஓட்டெடுப்பு முடிவு அறிவிக்கப் பட்ட போது , அண்டை நாடுகளின் மீதான பாசம் பாடல்களின் தரத்தை விட ஓட்டெடுப்பில் வெளிப்பட்டதாக தோன்றியது. ஐரோப்பாவின் அமைப்பு எளிதாக புரிந்தால் போலிருந்தது.

Sunday, May 21, 2006

கியவ்

லக்ஷ்மி மிட்டல் தவிர இந்திய பாஸ்போர்ட்டுடன் யுக்ரைனில் திரிந்த ஒரே ஆள் நான் தான் போலும். விமானம் ஏறியதிலிருந்து திரும்பி வரும் வரை வேறு இந்திய வம்சாவளியினரை காண முடியவில்லை( ஹிமாலயா காபி பார் தவிர). சந்தித்த யுக்ரைனியர்கள் எல்லாம் மிட்டல் ஸ்டீலைப் பற்றி என்னிடம் விவரிக்கவும் தவறவில்லை.

கிய்வ் யுக்ரைனின் மிக அழகிய தலைநகரம். 1600 வருட பழமையும், நவீன தொழிற்சாலைகளின் கலவையும் கொண்ட பசுமையான நகரம்.பல பழமையான கிறித்துவ தேவாலயங்கள் தங்க கோபுரத்துடன் ,கருணை ததும்பும் அற்புதமான ஓவியங்களுடன் வரலாற்றை விவரிக்கின்றன.

வெல்டிங் தொழில்நுட்பத்தில் கிய்வ்வின் பங்கை பறைசாற்றும் வகையில் , பல பாலங்கள் ரிவட் பயன்படுத்தப் படாமல் , வெல்டிங்கிலேயே இணைக்கப் பட்டிருக்கிறது.

சாலை , போக்குவரத்து வசதிகள் இந்தியாவை விட சிறப்பாக இருந்தாலும் , கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பல வகைகளில் இந்தியாவை ஒத்தே இருக்கின்றன. ஐரோப்பிய யூனியனில் சேரும் நாளை கனவுகளுடன் இங்கு மக்கள் காத்துக் கொண்டிருப்பது தெரிகிறது. ஆனால் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம்.

இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரம் அடித்தள , கிராமப் புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவும் படி செய்தால், நாமும் ஆசிய யூனியன் ஆரம்பிக்கலாம்.


இந்தியாவில் வரலாற்று நாயகனாக , மக்களின் பாதுகாவலனாக ஒப்பற்ற தலைவராக அறியப் பெற்ற ரஷ்ய தலைவர் ஸ்டாலினின் ,மறுபக்கத்தை யுக்ரைனின் ஒவ்வொரு அணுவும் கவலையுடன் காட்டுகின்றது.






 

 

 

  

 

 

 

  
Posted by Picasa

Monday, May 15, 2006

யுக்ரைனின் சிராங்கூன் சாலை

யுக்ரைனில் கிய்வ் நகரில் கோடை காலத்தில் வார இறுதியில் அனைவரும் Independence Square சாலையில் கூடி விடுவார்கள். சிங்கப்பூரில் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் சிராங்கூன் சாலையில் சந்திப்பது போல, எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளம் தான் . வயதான பாட்டிகள் , கடலை மற்றும் பூ விற்றுக் கொண்டும் , காலி பீர் பாட்டில்கள் பொருக்கிக் கொண்டும், இளவட்டங்கள் அனைவரும் பீர் பாட்டிலோடும் ,குழந்தைகள் சர்கஸ் பார்த்துக் கொண்டும் என்று அனைவரும் இந்த சாலையில் தான்.
இங்கு தான் ஆரஞ்சு புரட்சி நடந்ததாம்.

Posted by Picasa

Posted by Picasa

Thursday, May 04, 2006

இது என்ன?


இது என்ன?Posted by Picasa

இங்கே என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று தெரிகிறதா?
தெரியுது,ஆனால் புரியவில்லை என்று கடிக்க வேண்டாம்.ஐராவதம் மகாதேவன் அவர்களை தேடி போகவும் வேண்டாம்.

Sunday, April 16, 2006

தமிழ் புத்தாண்டு

வட மொழி தாங்கி வரும் 60 வருட சுழற்சி தமிழ் பஞ்சாங்க முறை மற்றும் இன்றைய கால கட்டத்தில் கொண்டாடப்படும் தமிழ் புத்தாண்டு தினம் , உண்மையிலேயே தமிழரின் புத்தாண்டு இல்லை என்று எப்பொழுதோ படித்த திராவிட கழக பத்திரிக்கை கட்டுரை ஒவ்வொரு முறையும் ஞாபகம் வந்து விடும். ஆனால் இந்தியா முழுவதும் பல வடிவங்களில் இந்த பண்டிகை கொண்டாடப்படுவது பற்றிய மின்னஞ்சலை படித்த பொழுது , தமிழ் புத்தாண்டாய் பண்டைய காலத்தில் கொண்டாடப் படாவிட்டாலும், வேறு ஏதோ ஒரு வகையில் திருநாளாய் இருந்திருக்கும் என்றே தோன்றுகிறது. அதனால் இந்த வருடம் விடுப்பு எடுத்து சிறப்பாக தூக்கம் போட்டு தமிழ் புத்தாண்டை கொண்டாடினேன்.

அஸ்ஸாமில் ரங்கோலி உத்சவ்
பிகாரில் வைஷாஹா
கேரளாவில் விஷு
பஞ்சாபில் பைசாஹி
மேற்கு வங்காளத்தில் நப பர்ஷோ
ஆந்திரா, கர்நாடகாவில் யுகாதி
மஹாரஷ்டிரத்தில் குடிபட்வா
ஒரிஸ்ஸாவில் மஹாவிசுப்ஹ சங்கராந்தி

Monday, April 03, 2006

தானிய கிடங்கு தந்த பாடம்

டக் பர்கம்(Doug Burgum)மின் கன்வர்ஜென்ஸ் நிகழ்ச்சியின் பேச்சு என்னை மிகவும் நெகிழ்வடையச் செய்தது. அவர் தனது தந்தை மற்றும் மூதாதையரின் தானிய கிடங்கு (Grain elevator) வணிகத்திலிருந்து கற்றுக் கொண்ட தொழில் ரகசியத்தை இந்த பேச்சில் குறிப்பிட்ட விதம் மற்றும் இடம் ( listen to the talk starting from 38 minutes till 50 minutes at least , if you can't listen to the whole talk) , மிக அருமை. பரஸ்பர நம்பிக்கை மற்றும் நேர்மை தான் தொழிலின் வெற்றியின் அடித்தளம் என்று தனது சொந்த வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளை மேற்கோளிட்டு உணர்ச்சிபூர்வமாகா பேசி , பின் உணர்ச்சி பிரவாகத்தை கட்டுப் படுத்தி கருத்தை வலியுருத்தி பேச்சை முடித்தது அருமையாக இருந்தது.

Some excerpts here.For full Speech Transcript http://www.microsoft.com/presspass/exec/burgum/03-28convergence2006.mspx


So, my great-grandfather got involved in starting the grain elevator. The grain elevator business that buys the crops from farmers, that aggregates those crops, and then works on arranging transportation, and sending them off to some other market. You know, pretty basic little add value, being in the middle type things, very, very super low margins in the grain elevator business. At the grain elevator, this is where your neighbors come to bring their crops. This is where people's income depends on the price you pay for their crops.It was a relationship where I'm sure there could have been someone might have said, hey, they really don't have a choice, because it's too difficult for them, and too costly for them to haul their grain 15 or 20 miles away to another town. Certainly in the early days, when people were hauling grain by horse, and before there was even road infrastructure or trucks, this was the case.

And when people harvest their grain, it's not pristine. If there's weeds in the field, and this is back, again, if I'm that age, this is probably in the early '60s. The ability to have a super clean field isn't the way it is there today with all the advances in seed technology, and technology in farming, etcetera. You've got a truck that's got grain, and it's got stuff that's not grain, call it chaff. Separate the wheat from the chaff. And within that mix, when the grain is coming out into the pit, someone from the elevator comes out, because you're weighing the truck full of grain, and you're going to weigh the truck empty. The farmer, the customer, is going to get paid for what's in that truck. When the grain comes out, you have an opportunity to stand in the back with a little silver, almost like a gold panning type pan, and you get a chance to pull some grain out of this truck. And then you take that grain, and from that sample you go into a little small separating machine, and that becomes analogous, or a metaphor, or a measurement that says, this is what percent of that truck is grain, and this is what percent of that truck is chaff. And the chaff you don't get paid for, it's dockage. So, if you take a sample that's 5 percent chaff, the farmer gets paid 5 percent less. If you take a sample that's 1 percent, they get paid 1 percent less. Everybody understands there's going to be some dockage.

I'm standing there with my dad as a little kid, he's got the pan. You know what he's teaching me? He's teaching me how to take the cleanest possible sample.I didn't get that out very well. He taught me how to take the cleanest possible sample.That was about how to make sure, even if that truck had 5 percent chaff, you'd only come up with 2, and why was that? Part of that was, I think, this deep understanding about the trust relationship. The other part is, my dad, my uncle, my aunt, were smart business people. The understood that if they and part of being smart is thinking about the long-term, not the short-term. There was a phrase that I later, and it wasn't very articulate, but it sort of came to me after my dad passed way that what he was teaching me, because these farm, all your customers, get passed from one generation to the next generation, the next generation, and this relationship between us and the grain elevator, and the farmers that we support.


And so, if I was going to shorten this story up by about 15 minutes, I could just say something like, you screw grandpa, and his grandson will never bring you his grain 50 years later, because families (applause) because families remember that. Families pass on that kind of learning. Here is who you buy from,here is who you don't buy from, here is who you can trust. And so I think about that trust example, and how important trust is in terms of that relationship between those two between the customer and the partner, and it's such an important thing.

Wednesday, January 11, 2006

கலவை மனிதன்

ரே கர்டஸ்வெய்ல் (Ray Kurzweil) இயற்கைக்கு அப்பாற்பட்ட மனித வாழ்க்கை பற்றி எழுதியிருக்கிறார்.

மனித மூளை சிந்திப்பதை படமெடுக்க தொடங்கி விட்டார்களாம். ஒரு கன அங்குல நானோ ட்யூப் மின்சாதனம் 100 மில்லியன் மனித மூளைகளை விட சிறப்பாக செயல்பட தொடங்கி விடுமாம்.நானோபோடிக் வெள்ளை அணுக்கள் உயிரியல் வெள்ளை அணுக்களை விட வேகமாக செயல் பட தொடங்கி , அவற்றை மனித உடம்பிற்கும் கலந்து விடும் சாத்தியக் கூறு வரும் போது , மனிதன் பாதி கணினி பாதி கலந்து செய்த கலவை நான் என்று எல்லாரும் ஆளவந்தான் மாதிரி திரிய வேண்டியது தான்.

மனிதனுக்கு தான் சிரிக்க தெரியும் , பகுத்தறிவு உண்டு என்று கப்ஸா விட்டுக் கொண்டு காலம் தள்ள முடியாது. மனிதனின் பகுத்தறிவு பழுது பட்டது. பாங்குகளை அடையாளம் காணும் (pattern recognition) கலை மட்டும் தான் நம்மை இன்னும் வேறுபடுத்தி வைத்திருக்கிறது போலும்.

கலவை மனிதனால் கவிதை எழுத முடியுமா , நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று வீண் வாதிட முடியுமா என்று தெரியவில்லை.

மேலும் படிக்க http://www.computerworld.com/hardwaretopics/hardware/story/0,10801,107494,00.html

Saturday, January 07, 2006

ஈரம் புரிந்த நேரம்

அறைந்து சென்ற காற்றின்
கரைந்து கிடந்த ஈரம்
பட்டுக் கன்னத்தில்
ஒட்டி நின்றது தெரியும் போது
புரிந்தது
கோபத்தின் அன்பு!

Thursday, January 05, 2006

கொ(கு)ட்டிக் கதை

ஒரு குளத்தைக் கடக்க வேண்டிய தேவை ஒரு தவளைக்கும் , ஒரு தேளிற்கும் வந்ததாம். தவளைக்கு , குளத்தில் இருக்கும் கொக்கு/நாரையைக் கண்டு பயம். தேளிற்கு நீந்த தெரியாது. அதனால் , தேள் தவளையிடம் நான் உன் முதுகில் ஏறிக் கொள்கிறேன். நீ என்னை மறு கரை சேர்த்து விடு. பதிலாக , கொக்குவிடம் இருந்து உன்னை நான் காப்பாற்றுகிறேன் என்றாதாம். தவளை தேளைப் பார்த்து , நீ என் முதுகில் இருக்கும் போது என்னை கொட்டி விட்டால் என்ன செய்வது , தரையில் இருந்தாலாவது நான் தப்பித்து செல்வேன் முதுகில் இருக்கும் போது என்ன செய்வது என்று தேளைப் பார்த்து அவநம்பிக்கையோடு கேட்டதாம். அதற்கு தேளானது , உன் முதுகில் இருக்கும் போது நான் உன்னைக் கொட்டினால் நீயும் நானும் நீரில் மூழ்கி சேர்ந்தே இறந்து போவோம். அப்படி இருக்கையில் நான் ஏன் உன்னை கொல்லப் போகிறேன் என்றாதாம்.அதன் கூற்றில் அர்த்தம் இருப்பதை உணர்ந்த தவளை , தேளை முதுகில் ஏற்றிக் கொண்டு குளத்தை கடக்க தொடங்கியதாம்.

இந்த கதையை கேட்டறிந்திராதவர்கள், இதன் முடிவு என்னவாகும் என்று ஊகிக்க முடிகிறாதா (கூகிளை நாடாமல்)?
முடிவு நாளை என்றோ அல்லது முழுப்பக்கத்தையும் வெற்றிடமாக தந்து அடியில் பதில் தந்து உங்களை சோதிக்க விரும்பவில்லை.

இதோ கதையின் தொடர்ச்சி.

பாதி குளத்தை கடந்த பொழுது , தேள் தவளையை கொட்டி விட்டதாம். தவளை விஷம் ஏறி தண்ணீரில் மூழ்க தொடங்கியதாம். அதனோடு சேர்ந்து , தேளும் தண்ணீரில் மூழ்கி இறக்க தொடங்கியதாம்.அப்பொழுது , தவளை முட்டாள் தேளே! உன்னால் நாம் இருவரும் மடிய போகிறோம். கரையில் இருந்த போது அறிவுப்பூர்வமாக பேசிய நீ ஏன் இப்படி முட்டாள் தனமாக நடந்து கொண்டாய் என்றதாம். அதற்கு தேள் , கொட்டுவது என் குணம் , அதை எதனாலும் மாற்ற முடியாது என்று கூறி மடிந்ததாம்.

Monday, January 02, 2006

தொலைந்(த்)த நட்பு

எல்லா திசைகளிலும் நுணுக்கி எழுதி
எச்சில் தொட்டு ஒட்டிய
கடிதம் தந்த
ஆத்ம ஸ்பரிசம்

இல்லாத காரணத்தாலா
இரு வரிகளுக்கு மேல்
எழுத தோன்றவில்லை
இ-மெயிலில்!


ஓசையில்லாமல்
ஒப்பாரி வைக்காமல்
இழந்து விட்ட
அற்புத மனித உறவுகளை
இனம் காண்பது எப்பொழுது?

மௌனித்த வார்த்தைகள்
உயிர்ப்பிக்குமா மறுபடியும்?