Monday, January 02, 2006

தொலைந்(த்)த நட்பு

எல்லா திசைகளிலும் நுணுக்கி எழுதி
எச்சில் தொட்டு ஒட்டிய
கடிதம் தந்த
ஆத்ம ஸ்பரிசம்

இல்லாத காரணத்தாலா
இரு வரிகளுக்கு மேல்
எழுத தோன்றவில்லை
இ-மெயிலில்!


ஓசையில்லாமல்
ஒப்பாரி வைக்காமல்
இழந்து விட்ட
அற்புத மனித உறவுகளை
இனம் காண்பது எப்பொழுது?

மௌனித்த வார்த்தைகள்
உயிர்ப்பிக்குமா மறுபடியும்?

1 comment:

ப்ரியன் said...

இந்த எழுத்துக்களும் அருமை & நிதர்சனம்