Monday, October 24, 2005

எண்ணுவம்

நான் எதிலும்
முடிவெடுக்க
தயங்கியதில்லை!

சரியா தவறா
என்று
குழம்பி திரிந்ததில்லை!

பிரசவ வேதனை
என் பிறழ்ம்பி
திரிந்ததில்லை!

வாதங்களில்
காலங்களை
கடத்திய தில்லை!

என் குழப்பம்
எல்லாம்
முடிவெடுத்த பின் தான்
ஆரம்பம் :)

எனினும்
இழுக்கை விட
துணிவுக்கு
கவர்ச்சி அதிகம் தான்!

Saturday, October 01, 2005

பிரம்மன் நானே!!!

என்
சிறிய தவறுகளை கூட
நான்
பெரிதாக பிரகடனப்படுத்துவது
பெரும் குறைகள்
என்னிடம் இல்லை
என தெரிவிக்கத் தான்!

முட்டாள் தனமான
கேள்விகளை
நான்
பொதுவிடங்களில்
வெட்கப் படாமல் கேட்பது
கற்ற கர்வம்
என்னிடம் இல்லை
என் தெரிவிக்கத் தான்!!

முட்டித் தள்ளி
ஓடும் கூட்டத்தில்
நான்
காலில் உரசியதற்குக் கூட
கவனமாய் வருத்தம் தெரிவிப்பது
கண்ணியனாய் காட்டிடத் தான்!!!

உன்
உள்ளக் கண்ணாடியில்
ஓளிரும் உருவம்
நான் வடித்தது
என்பதனால்
இரவில் கூட
என் வீட்டுக் கண்ணாடியில்
பார்க்க விரும்புவதில்லை
அந்த பிரம்மன் படைத்த
உண்மை உருவத்தை

எனக்கு
நானே பிரம்மன்!!