Monday, May 31, 2004

பட்டாம் பூச்சி

கனவில் வந்த
பட்டாம் பூச்சி
கண்டதோர் கனவு !

கனவில் அது
மனிதானக
பட்டாம் பூச்சி
கனவு கானும் மனிதனாக !

நான்
மனிதனா?
பட்டாம் பூச்சியா?

எது கனவு?
எது நிஜம்?




கவிதைக் குறிப்பு
ஹாங்காங்கில் ஒரு உணவு விடுதியில் கேட்ட சீன க(வி)தையின்
தமிழாக்கம் இது.

Friday, May 28, 2004

நூலகம்

முதல் வகுப்பில் சேரும் முன்னரே மூன்று வருடங்கள் என் அக்காவுடன் (இந்திரா) பள்ளிக்கு சென்று பாடம் படித்த அனுபவத்தால் , எனக்கு 5 அல்லது 6 வது வயதிலேயே நன்றாக தமிழ் படிக்க வரும்.அப்பா அரசாங்க ஊழியர் என்பதால் கதைப் புத்தகங்கள் படிப்பது அவரின் ஊழியமாக இருந்தது.அவர் வாங்கி குவித்த வார,மாத இதழ்களை பார்த்து பத்திரிக்கை படிக்கும் பழக்கம் எனக்கு மிகச் சிறிய வயதிலேயே வந்து விட்டது.ஒரு நாள் இந்திராவின் தோழி ரேவதி என்னிடம் வந்து , பக்கத்து தெருவில் ஒரு இடம் இருப்பதாகவுப் , அங்கு கையெழுத்து மட்டும் போட்டால் போதும் எத்தனை புத்தகங்கள் வேண்டுமானாலும் படிக்கலாம் என்று சொன்னாள்.எதற்காக கையெழுத்து கேட்கிறார்கள் , ஒரு வேளை அதை வைத்து பின்னால் காசு கேட்பார்களோ என்று எனக்கு பயங்கர சந்தேகம். அதனால் உஷாராக வேறு ஒரு கற்பனை பெயரை அங்கே எழுதி விட்டு , வெற்றிகரமாக நூலகத்தின் உள்ளே சென்றேன்.

அங்கே இரண்டு அறைகள் இருக்கும். முதல் அறையில் நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் இருக்கும். உள்ளே இருக்கும் அறையில் நாவல்கள் இருக்கும. அதன் முன்னே காவல் பூதமாக நூலக பொறுப்பாளர் அமர்ந்திருப்பார். முதல் நாளே நான் நேரடியாக நாவல் அறைக்கு செல்ல முயல, அவர் என் உயரத்தை பார்த்து என்னை உள்ளே செல்ல விட வில்லை. "உனக்கு அனா , ஆவன்னா தான் படிக்க தெரியும்,அதுக்குள்ள கதை புத்தகமா? போய் முன்னாடி இருக்கும் அம்புலி மாமாவில் கிழிக்காமல் படம் பார்" என்று விரட்டி விட்டார்.எனக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வந்து , என் திறமையை அவருக்கு காட்ட , அம்புலி மாமாவை எடுத்து சத்தமாக படிக்க ஆரம்பித்தேன்.அவ்வளவு தான் , அடுத்த நிமிடம் நான் வெளியே...

பின்னொரு நாள் , அவர் சற்று அயர்ந்திருந்த சமயம் , உள்ளே ஓடிப்போய் , நான் முதலில் படிக்க ஆரம்பித்த புத்தகம் "விக்கிர மாதித்தன் கதை பாகம் 1". பின் பத்தாம் வகுப்பு வரை நூலகம் என் மற்றொரு வீடானது.

என் அப்பா எப்பொழுதும் ஒரு கதையின் முடிவை படித்து விட்டு தான் , பின் ஆரம்பத்திலிருந்து படிக்க ஆரம்பிப்பார். இந்த பழக்கம் எதனால் வந்திருக்கலாம் என்பது நூலகத்திற்கு செல்ல ஆரம்பித்த பின் தெரிய வந்தது. அங்கே உள்ள புத்தகங்களில் , பலவற்றில் முடிவு பக்கங்களை சில சஸ்பென்ஸ் பிரியர்கள் கிழித்து விடுவார்கள்.சிலர் அவர்களின் விமர்சனத்தை பதித்திருப்பார்கள்.சிலர் புத்தகத்தை "புறா" வாக பயன்படுத்த முயற்சித்திருப்பார்கள்.இது கொடுமை என்றால், பல வருடங்கள் சென்று , சென்னையில் அண்ணா சாலையில் உள்ள ORWO films-ல் வேலை பார்த்து வந்த என் சகோதரியை பார்க்க சென்ற போது , அருகில் உள்ள தேவநேய பாவணர் நூலகத்திற்கு சென்றேன்.அதை பலர் கட்டணம் இல்லாத ஓய்வறையாக பயன் படுத்து வதையும், பலர் அங்கு தூங்கி கொண்டிருப்பதையும் பார்த்து நொந்து போனேன்.

நூலகங்கள் சமுதாயத்தின் மேம்பாட்டிற்கு அடிப்படை தேவை. வளரும் நாடாக இருந்தாலும் ,வறுமை கோட்டிற்கு கீழே இருந்தாலும் , ஊருக்கு ஒரு நூலகம் இருப்பது , இந்தியாவின் சிறப்பு.ஆயிரத்திற்கு குறைவாக உள்ள எங்கள் கிராமத்தில் கூட ஒரு சிறிய நூலகம் உள்ளது.பொது சொத்தை முறையாக,சரியாக பயன் படுத்த எல்லாரும் தெரிந்து கொண்டால் , இதை இன்னமும் சிறப்பாக பயன்படுத்தலாம். பின்னாளில் சிங்கப்பூரிலும், அமெரிக்காவிலும் உள்ள அதி நவின நூலகங்களை பார்த்து ஏக்க பெரு மூச்சு விட்டது தனி கதை.

Thursday, May 27, 2004

கஞ்சனும் பட்டினத்தாரும்

நான் ஒரு கஞ்சன் என்பது என்னுடன் கல்லூரியில் படித்து , பின் பெங்களூரில் வேலை பார்க்கும்
போதும் , என்னுடன் ஒரு வருடம் தங்கியிருந்த என் நண்பன் செந்தில்குமாரின் திண்ணமான எண்ணம்.அப்பொழுதெல்லாம் , என்னைப் பார்த்து பின் வரும் பாடலை கூறி என்னை கிண்டல் செய்வான்.

"பாடுபட்டு தேடிப் பணத்தை புதைத்து வைத்த
கேடு கெட்ட மானிடரே கேளுங்கள்
கூடு விட்டு ஆவிதான் போயின பின்
யாருக்கால் உதவும் பாவிக்கால் இந்த பணம்"

இப்பொழுது உலகின் எந்த புறம் இருக்கிறான் என்பதே எனக்கு தெரியவில்லை. இது பட்டினத்தார் பாடல் என்று அவன் சொல்ல கேட்டிருக்கிறேன். இது நிஜமாகவே பட்டினத்தார் பாடல் தான இல்லை அவனது சொந்த சரக்கா அல்லது வேறு யாரேனும் எழுதியதா என்று தெரிந்து கொள்ள ஆசை. இதில் உள்ள தவறுகளை திருத்திக் கொள்ளவும் ஆசை.

நான் தேடிய வரையில் http://www.infitt.org/pmadurai/mp083.html -யில் இது பற்றி குறிப்பிட படவில்லை. இது குறித்து தெரிந்தவர்கள் யாரேனும் இதை நிவர்த்தி செய்தால் நன்று.


Wednesday, May 26, 2004

இரட்டை கிளவி

அரை வேக்காடு
சத்தான உணவு
பத்தாத அறிவு


மதம்
கட்டுப்படுத்தும் வாழ்க்கை கோட்பாடு
கட்டுக்கடங்கா கோபத்தின் வெளிப்பாடு


கலை
அழகியல் துறை
அழிக்கும் முறை

Tuesday, May 25, 2004

காலணி

துணை பிரியாத
காவிய நாயகன்...
அயோத்தியை
அரசாண்ட மன்னன் !


கொடுத்து கொடுத்து
தேய்ந்த கரங்கள்...
ஆதரித்தவனுக்காக
உயிரையும் கொடுக்கும் கர்ணன் இவன்!

அரசியல் மேடைகளில்
ஆவலாய் பறக்கும்...
ஆலயத்தின் முன்னால்
ஒதுங்கிவிடும் பகுத்தறிவுவாதி!


கால நேரம் தெரியாமல்
காலை வாரும் அரசியல்வாதி...
விமான நிலையத்தில்
விசேஷமான் கவனிப்பு இவருக்கு!


கல்யாண வீட்டில்
கள்வனோடு ஓடிப்போகும்...
வண்ண மங்கையரின்
செல்ல ஆயுதம்...

Monday, May 24, 2004

சியாட்டலில் திரை திருவிழா

சியாட்டலில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை எப்பொழுதாவது ஒரு முறை தமிழ் திரைப்படம் வரும்.அப்படியே வந்தாலும் கூட்டம் மிக குறைவாக தான் இருக்கும். இரண்டு , மூன்று வரிசை நிறைவதே கடினம் தான்.சியாட்டல் தமிழ் சங்கம் ஏற்பாடு செய்தால் மட்டும் கொஞ்சம் கூட்டம் கூடுதலாக வரும். ஆனால் இந்த மூன்று வாரங்களாக வார இறுதியில் தமிழ் திரைப்படம் திரையிடப் படுகிறது. கடந்த வாரம் "கில்லி".இந்த வாரம் "பேரழகன்". வரும் வாரம் "ஆயத எழுத்து". எனவே இது ஒரு "திரை திருவிழா" என் போன்றோருக்கு.

தமிழ் திரைப்படத்தை ஆதரிக்கும் கடையேழு வள்ளல்களில் நானும் ஒருவன்.கடைசியாக் என் மகளுடன் ஆசை ஆசையாய் "பாய்ஸ்" பார்த்து நெளிந்து நொந்து போயிருந்தேன். இருந்தாலும் , இந்த "திரை திருவிழா" மீண்டும் என்னை படம் பார்க்க தூண்டி விட்டது.

தமிழ் படம் திரையரங்கில் வந்து பார்க்க மாட்டேன் என்று சபதமெடுத்து ( என்ன மாதிரி வினோத சபதம். படம் "DVD"-ல் பார்க்கலாமாம், ஆனால் திரையரங்கில் பார்க்க மாட்டார்களாம்.)

ஒரு வருடமாக "லொல்லு" செய்து வந்த மனைவியை ஒரு வழியாக சமாதானம் செய்து , இரண்டு வயதான அருமை புதல்வன் என்ன பாடுபடுத்த போகிறானோ ( திரையரங்கிற்கு அவனின்
முதல் வருகை) என்ற கவலையுடன் ,முதல் வாரம் "கில்லி" சென்றோம். படம் அருமை. ( "A","B","C" எந்த சென்டருக்கு எடுக்க பட்ட படமானால் ரசிக்கும் தன்மை எனக்கு உண்டு).

என் பையனுக்கும் படம் பிடித்திருந்தது , படத்தின் வெற்றி. "அப்பா , கார் மூவி நல்லாக்கு" என்பது அவனின் மழலை கருத்து. இப்படித்தான் , என் மகள் இரண்டு வயதாயிருக்கும் போது ,

சிங்கப்பூரில் " ஜீன்ஸ்" பார்க்க கூட்டி சென்றிருந்தோம்.அவளும் அப்பொழுது பாடல்களை ரசித்து கண் சிமிட்டாமல் பார்த்தாள்.

முதல் அனுபவம் தந்த நம்பிக்கையில் , அடுத்த வாரம் "பேரழகன்" சென்றோம். என் மகன் கொஞ்சம் தொல்லை கொடுத்து விட்டான்."second half OK" என்பது என் 7 வயது மகளின் தோழியின் கருத்து."Ugly யாக இருந்தாலும் Goodd people அழகுதான்" இது என் மகள் கண்டு பிடித்த moral of the story.

வரும் வாரம் "ஆயத எழுத்து". செல்லலாமா , இல்லை "DVD அல்லது cassette"க்கு பொறுத்திருக்கலாம என்று யோசிக்க வைத்தது , இணையத்தில் சுழன்று வந்த விமர்ச்சனங்கள். ஆனால் அருணின் பதிவை பார்த்தபின் , திரையரங்கு சென்று பார்த்து விடுவது என்ற முடிவிற்கு வந்து விட்டேன்.

இது மாதிரி குழப்பங்களை தவிர்க்க , எந்த விமர்ச்சனமும் வருவதற்குள் , முதல் நாள் , முதல் காட்சி பார்த்து விடுவது என் வழக்கம்.என்ன செய்வது , சியாட்டலில் எல்லா படமும் தாமதமாகத் தான் வருகிறது.

மானாமதுரையில் இருந்த வரை சுற்று வட்டாரத்தில் படம் ரிலீஸ் ஆகும் ஊருக்கு ( பரமக்குட்டி , இராமநாதபுரம் , மதுரை) நண்பர் பட்டாளங்களுடன் வேன் எடுத்துக் கொண்டோ அல்லது பேருந்திலோ சென்று விடுவது வழக்கம். காரைக்குடி வந்த பின் , பெரும்பாலும் படங்கள் அங்கேயே வெளியிடப் பட்டு விடுவதால் , முதல் நாள் ஆஜர் கொடுப்பதில் பிரச்சனை இருக்காது.
"தளபதி" மட்டும் அங்கு ரிலீஸ் ஆகவில்லை. அதனால் ராஜ்குமார் அண்ணன் மற்றும் அவரது நண்பர்களுடன் புதுக்கோட்டை சென்று பார்த்தேன். ( தேர்வு காலத்தில்).

எனது அக்காள் தலை தீபாவளிக்கு வீட்டிற்கு வந்திருக்க , அதி காலையில் கிளம்பி படம் பார்க்க சென்ற நான் , இரவு அனைவரும் தூங்கிய பின் தான் வந்து சேர்ந்தேன் என்றால் என் கலை பற்றை என்ன என்பது. என் பெற்றோரின் சகிப்பு தன்மையை என்ன என்று மெச்சுவது.

ஒரே நாளில் மூன்று படங்கள் , ஒரு வாரத்தில் ஏழு படங்கள் ,ஒரே படத்தை பதினாறு முறை பார்த்தவன் என்ற பெருமை எனக்கு உண்டு. இதெல்லாம் கல்லூரி வரும் வரை தான்.
கல்லூரி வந்த பின் தான் தெரிந்தது , எனக்கு "அப்பன்கள்" நிறையப் பேர் இருக்கிறார்கள் என்று.

யார் இட்ட சாபம் !

அரை மணி நேர பயணத்திற்கு கூட
அமர்ந்து செல்ல
பேருந்தில் இடம் பிடிக்க
முண்டியடிக்கும் பொதுஜனம்!!


பெற்ற பிள்ளை
கசடற கற்க
கல்வி கூடத்தில் இடம் பிடிக்க
காத்து நிற்கும் பெற்றோர் கூட்டம்!!

கன்னியரின்
காதல் மனதில் இடம் பிடிக்க
கடுந்தவம் செய்யும் காளையர் கூட்டம்!!

தலைவர் படத்தை
முதல் நாள் பார்க்க
திரையரங்கில் இடம் பிடிக்க
மோதிக் கொள்ளும் ரசிகர் கூட்டம்!!


எந்த அரசு வந்தாலும்
அமைச்சரவையில் இடம் பிடிக்க
எதையும் செய்யும் அரசியல் கூட்டம்!!


யார் இட்ட சாபம்
இந்த "இடம் பிடிக்கும்" தண்டனை
மானுட சமுதாயமே அல்லல்படுகிறதே!

Saturday, May 22, 2004

நான் கேட்ட முதல் ஹைகு

மேல் நிலை கல்வி பயிலும் போது வானொலியில் முதல் முதலலாக ஹைகு பற்றி விவரித்து விட்டு கவிஞர் மீரா என்று நினைக்கிறேன், அவர் சொன்ன ஹைகு இன்னமும் என் நினைவில் நிற்கிறது.


அழுக்கை தின்னும்
மீனை தின்னும்
கொக்கை தின்னும்
மனிதனை தின்னும்
பசி!

Friday, May 21, 2004

என்று தணியும் இந்த பதவி மோகம்

From WebUlagam http://www.webulagam.com/news/regional/0405/21/1040521004_1.htm

தமிழக காங்கிரசில் எம்.பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 பேருமே அமைச்சர் பதவி பெற விரும்புவதாகவுப் செய்திகள் தெரிவிக்கின்றன.

என்று மாறும் இந்த கல்வி முறை

இந்திய கல்வி முறை அடிப்படையில் மாற்றப் பட வேண்டும் என்பது என் கருத்து.
அறிவொளி இயக்கத்தில் பயில்வோர் மாதிரி , பரீட்சைக்கு முதல் நாள் ஹாஸ்டலில் அடுத்தவன் படித்ததை முதல் நாள் கதை மாதிரி சொல்லக் கேட்டு அடுத்த நாள் அதை எழுதி, அவனை விட மதிப்பெண் அதிகம் வாங்கும் சாமர்த்தியசாலிகள் உண்டு.வருடம் முழுவதும் ENJOY செய்து விட்டு , study leave-இல் மாங்கு மாங்கு என்று படித்து நல்ல மதிப்பெண் வாங்குவோரும் உண்டு. உணவு,உறக்கம் தவிர்த்து படிப்பே வாழ்க்கை என்று முதல் தரம் எடுக்க கடும் தவம் செய்பவரும் உண்டு.என்னதான் படித்தாலும் ,எவ்வளவோ புத்திசாலித்தனமாக பாடத்தை புரிந்து கொண்டாலும் , just pass செய்பவரும் உண்டு.

"புத்தி உள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை" என்பது நம் கல்வி முறைக்கு மிகப் பொருந்தும். வருடம் (வாழ்க்கை) முழுவதும் கணிதத்தில் 100க்கு 100 எடுத்து விட்டு, +2-வில் ஒரு கணக்கு தவறாக் போட்டு விட்டு , நல்ல பொறியியல் கல்லூரி செல்ல முடியாமல் தவித்த நண்பர் எனக்கு உண்டு.பரிட்சை நேரத்தில் உடல் நிலை சரியில்லாமல் வருடங்களை தொலைத்தவர்களும் உண்டு.ஒரு நாள் திருவிழாவாக இந்த கல்வி முறை உள்ளது.

கல்வி எனக்கு கற்று கொடுத்தது கடின உழைப்பை மட்டும் தான். சிந்திக்கும் திறனை வளர்த்ததா என்றால் சந்தேகம் தான். தெரிந்து கொள்ளும் ஆர்வத்தையும் அது வளர்க்கவில்லை.கல்லூரி வரை எனக்கு கல்வி ஒரு பெருஞ்சுமையாகத் தான் இருந்தது.எனக்கு தெரிந்த பலருக்கும் அப்படித்தான்.கற்பது ஒரு சந்தோசமான விஷயமாக எல்லாருக்கும் இருக்க , இந்திய கல்வி முறை அடிப்படையில் மாற வேண்டும்.

Wednesday, May 19, 2004

வைகை

மானாமதுரை - வானரவீரமாமதுரை என்பது மருவி மானாமதுரையானதாக கூற கேட்டதுண்டு.சீதையை மீட்க சென்ற ஆஞ்சிநேயர் , தன் வானர படைகளுடன் தங்கியிருந்ததால் வந்த காரண பெயர் இது என்பர். பாரதிராஜா படத்தில் வருபது போன்ற அழகிய சிறு நகரம். ( பெரும் கிராமம் என்றும் சொல்லலாம்.)

மட்பானைக்கும், மணக்கும் மல்லிக்கும் பெயர் பெற்ற ஊர் மானாமதுரை. ஆங்கிலேயர் காலத்து இரயில்வே ஜங்சனும், ஒக்கூர் வெள்ளையன் செட்டியார் கட்டிய கல்வி கூடங்களும் ( ஒக்கூரில் வேறு ஒருவர் முன்பே கல்வி கூடங்கள் கட்டி விட்டதால் மானாமதுரைக்கு கிடைத்தது இந்த பாக்கியம்) சுற்று வட்டார கிராமங்களில் மானாமதுரையை பெரிய ஊர் ஆக்கியது.

ஊரின் உயிர் நாடி , அதன் நடுவில் செல்லும் வைகை நதி. சிறு வயதில் உங்கள் ஊரில் ஆறு இருக்கிறதா என்று வேறு ஊரில் வசிக்கும் மற்ற உறவின சிறுவர்களை பெருமையுடன் கேலி செய்ய உதவிய நதி. நதியும் நதி சார்ந்த நாகரீகமாக எங்கள் அனைவரின் வாழ்கையிலும் கலந்து விட்ட நதி.

மேல் கரையில் ஆனந்தவள்ளி சோமநாதர் கோவில். கீழ் கரையில் பெருமாள் கோவில். இந்த புறம் மாதா கோவில் , அந்த புறம் மசூதி. ஆற்றின் நடுவே 100 வயதான பாலம். ( இப்பொழுது புது பாலம் கட்டப்பட்டுள்ளது). கலைஞர் முதல் முறை முதல்வராய் வருகை தந்த போது , துரிதமாய் மேடைக்கு செல்ல அமைக்கப் பட்ட பாதி அரித்து , கரைந்து போன கட்டை மண் பாலம் ஒன்று.

நதி என்றவுடன் வற்றாத நதி என்று நினைத்து விட வேண்டாம். எப்பொழுதுமே வற்றிய நதி தான் எங்கள் வைகை.வருடத்திற்கு 10- 15 நாட்கள் மட்டுமே தண்ணீர் வரும். மற்ற நாட்களில் எங்களுக்கு அது மிகப் பெரிய விளையாட்டு மைதானம்.கபடி,கிளித்தட்டு,எறி பந்து என்று குழு விளையாட்டு ஆனாலும் சரி , பட்டம் விடுதல் , புதிர் விளையாட்டு போன்ற மென்மையான விளையாட்டு ஆனாலும் சரி , கிரிக்கெட், வாலிபால் போன்ற நவீன விளையாட்டு ஆனாலும் சரி , சிறுவர்கள் எங்களுக்கு ஆறுதான் மைதானம். பெருசுகளுக்கு அதுவே விவாத மேடை ஆகி விடும் . அவர்கள் பேசும் அரசியலும், அக்கம்பக்கத்து கதைகளும், விளையாடி களைத்து ஓய்வெடுக்கும் போது காதில் விழும்.அப்படி கற்றுக் கொண்டது தான் பல விஷயங்கள்.

கோபம் வந்து விட்டால் ,"சாயங்காலம் ஆற்றுக்கு வாடா , ஒரு கை பார்த்துக்கலாம்" என்று எதிரிகளிடம் சவால் விட்டு மோதும் குஸ்திகளமாகவும் இருக்கும்.சமயத்தில் ஊரும் ஊரும் மோதிக் கொள்ளும் குருசேஷ்திர போர்க்களமாகவும் அமையும்.

ஆற்றில் தண்ணீர் வந்து விட்டால், அதுவே நீச்சள் குளமாகி விடும். மீன் பிடிக்க பெரிய படையே கிளம்பி விடும். தண்ணீர் வற்றும் போது , வெறும் கையிலேயே மீன் பிடித்ததுண்டு.தண்ணீர் வந்தால் பலி வாங்காமல் வற்றாது என்று பெரியவர்கள் அபிப்ராயம். ( அது பெரும்பாலும் உண்மை). அதனால் வீட்டிற்கு தெரியாமல் "டிமிக்கி" கொடித்து விட்டு தான் செல்ல வேண்டும்.

சித்திரா பௌர்ணமிக்கு நிலாச்சோறு சாப்பிட இரவில் ஊரே கூடும் சாப்பாட்டு கூடமாகி விடும்.சித்திரை திருவிழா நேரங்களில், நாடக மேடை ஆகி விடும்.இலவச சினிமா திரையரங்காகவும் இருக்கும்.

அழகர் ஆற்றில் இறங்கும் நாள் , எல்லாவற்றிற்கும் உச்சகட்டம்.தங்கை மீனாட்சியின் திருமணம் காண அந்த கரையில் இருந்து அழகர் குதிரை வாகனத்தில் வருவார். அவர் வரும் முன்பே திருமணம் நடந்து விட , கோபித்து கொண்டு வேக வேகமாக திரும்பி ஓடி விடுவார். அழகர் வரும் போது, தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வைபவம் உண்டு. அது எல்லார்க்கும் மிகவும் பிடிக்கும்.

சக்தி விகடனில் மதுரை அழகர் ஆற்றில் கதை சில நாட்களுக்கு முன்பு வந்தது.அதில் சொல்லப்பட்டிருக்கும் காரணம், மேலே சொன்ன ( எங்களுக்கு காலம் காலமாய் சொல்லப்பட்ட) கதையில் இருந்து முற்றிலும் மாறு பட்டிறுந்தது.

வைணவமும் , கைலாயமும் ( சைவமும்) அழகர் ஆற்றில் இறங்கும் போது கலப்பதால் , வைகை என்று அழைக்கப் படுவதாக சுகி சிவம் சொல்வது சாலப் பொருத்தம்.

Tuesday, May 18, 2004

பாரதியும் நானும்...

மூன்று அல்லது நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிறுந்த போது என்று நினைக்கிறேன்.
மழைக்காக பள்ளியில் ( ஒக்கூர் வெள்ளையன் செட்டியார் ஆரம்ப பாட சாலை , மானாமதுரை) ஒதுங்கிய மாலை வேளை!
நான் முதலாம் வகுப்பு படித்த அறையில் ஒரு இளம் பேச்சாளார் மிக ஆவேசமாக , அற்புதமாக பேசிக் கொண்டிறுந்தார்.
பால்ய விதவைகளின் அவலங்களை கண்ட பாரதியின் கோபத்தை , அதை பிரதிபலித்த கதை , கவிதைகளை பற்றி விவரித்தார்.இந்த மாதிரி கொடுமை செய்பவர் இருக்கும் இடத்தில் நில நடுக்கம் வந்து அந்த பச்சிளம் பாலகிகளை தவிர மற்ற அனைவரும் மடிய வேண்டும் என்று சொல்லியதாக ஞாபகம்.என் மூத்த அண்ணன் மறைந்து , அண்ணி விதவையாக அப்பொழுது இருந்ததாலோ என்னமோ தெரியவில்லை, அந்த பேச்சில் மிகவும் கவர்ந்து போனேன்.அன்று பிடிக்க ஆரம்பித்தது பாரதியை...
"சாதிகள் இல்லையடி பாப்பா" என்று பாடத்தில் படித்த போது, என் நெஞ்சில் நீக்க மற நிறைந்தார்.
பின் பாரதியின் பாடல்களை தேடிப் படித்தேன். பெரும்பாலும் எனக்கு பிடித்தவை அவரின் மிகப் பிரபலமான பாடல்களே.. அதனால் அவற்றை இங்கே வரிசை படுத்த வில்லை.

விடலை பருவத்தில் "பாரதி" என்று பெயர் கொண்ட பெண்களின் பின்னால் மையல் கொண்டு அலைந்ததற்கும் , இதற்கும் அறிவுப்பூர்வமாக எந்த சம்பந்தமும் இல்லை.

Monday, May 17, 2004

கலைந்தது கனவு!

முன் குறிப்பு : - கல்லூரி காலத்தில் கிறுக்கியது.

அன்பே!
உன்
விழியோரங்களில்
நான்
கண்ட
ஓரங்க நாடகம்...
என்
கனவில்
நினைவுத் திரை விலக...

நாயகன்
அரூபமாய்..
நாயகி
உன் சொரூபமாய்...

அன்பு
நட்டுவாங்கம் செய்ய
ஆனந்த தாண்டவம்...

கனவு பாசறையில்
அறிவு
துருப்பிடிக்க...
நிஜம்
நிதர்ட்சனமாய் சுட்டது...

நாயகனாக
துடிக்கும்
ரசிகனாய் நான்...

தூக்கத்தை தொலைத்து விட்டு
தேடிக் கொண்டிருக்கிறேன்
கனவை!

திருமதி.சோனியா காந்தி !!!

எங்கு பார்த்தாலும் ஒரே விவாதம்!!!
இன்று அலுவலகத்தில் கிட்டத்தட்ட 50 emails. பெரும்பாலும் சோனியாவை எதிர்த்து!!!
அந்நிய மண்ணில் விசுவாசமாய் வேலை பார்ப்பவர்களிடம் இருந்து இந்த கருத்து!.

என் சொந்த கருத்து சோனியாவுக்கு ஜே!!!.
காரணம்
1)யாதும் ஊரே!! யாவரும் கேளிர்!
2)கணவன் இறந்த பின் உடனே அரசியலுக்கு வரவில்லை. நீண்ட நாட்களுக்கு பின்
கட்சியை ( கணவன் பெயரை?) காப்பாற்ற வந்தார்.
3)இந்திய அரசியலில் இதுவரை ஈடுபட்ட பெண் அரசியல்வாதிகள் ( இந்திரா காந்தி , ஜெயலலிதா , மாயாவதி, மம்தா பானர்ஜி ) ஒப்பிடுகையில் சோனியா எவ்வளவோ மேல்!

Wednesday, May 12, 2004

Thank You Mr. ChandraBabu Naidu

He is a seasoned politician every inch but he delivered what most others never even thought for a moment.
He changed the dynamics of politics and acted more like a CEO.
I am not going to argue whether or not he is corruption free or he reached out to the poor or he hyped his image etc.
Every politician does that. But none before changed the image of govt. India like the way Mr. Naidu did. For that I bow my head.
Well done indeed and a what a good show!!!.
Now every CM wants to be proactive like him and that indeed speaks his achievement. It’s a life time achievement and in Indian political history Mr.Naidu has a permanent place.

Tuesday, May 11, 2004

The places I have worked...

WS Industries (Dec-1992 to Apr-1995 ):
======================================
My first job. I was very fortunate to get this job within very few interviews. That means a lot to a fresher before the IT boom in India.
Very bad experience except for some very good friendships. Managers over there were horrible. I quit the company at the right time thanks to the course done at “Brilliant” Software Training Institute.


Accord (May-1995 to Apr-1995) : http://www.accord-soft.com
===================================================================
Wonderful people. The company was run like a family business by a close gang of 6 people.

I got salary hike every month. (yes. every month). My life has changed for ever.Dedicated staffs were working on ambitious GPS project.

I should some day start a company like these people.

Deutsche Software ( May-1996 to Oct-1996 ): http://www.db.com
===============================================================

What a life!!! Traveling in business class. Nice Food and beverages served at the table. Games and riddles to play with. Talented people around and very little work ( at the beginning). My software career flourished here. I was very creative and eager to learn and people loved me. I was doing primarily Oracle Reports and then on to PL/SQL. My first overseas trip to Singapore.

Eutech ( Dec-1996 to May-2000 ): http://www.ecyber.com
=======================================================
I learnt a lot. Interesting mgmt team with ambitious goals and lots of good friends. Some people liked me a lot and some of them hated me a lot . My leadership skills and analytical skills grew a lot.
I had the life time opportunity to travel lots of places and meet with lots of interesting people and implement lots of different projects. You can see how many times I used “lots of” in the previous sentence and see how excited I am.
I really enjoyed a lot. I declined an offer from a Big Multi National for this sake.

iOrmyx ( June-2000 to OCT-2000 ) : http://www.iormyx.com
=========================================================
very short span. Difficult time in moving from Singapore to USA and iORMYX made it worse for me. With determination I put everyting behind and bought a ticket to USA and landed here. It was a nightmare. But quickly I got into a project and some good people around to support ( transportation, advise, accommodation).Quickly become the tech. leader in the project at onecore Got offers from OneCore , Cap Gemini and Microsoft and joined Microsoft.

Microsoft ( Oct-2000 to Till Date ) : http://www.microsoft.com
==============================================================
Challenging and rewarding environment. So far so good.My projects have been so far well recognized and widely popular internally. But still I feel I have achieved very little at Microsoft and trying to recharge my batteries to propel higher. Always looking for the right opportunity to realize my FULL potential.

Monday, May 10, 2004

Indian Elections

Biggest democracy goes into poll today and the results will start coming out from tomorrow and Pranoy Roys and others will be doing all sorts of analysis in the media in this week and it will be lot of fun !!!.

Some of the questions that is lingering on my mind are
1. Will it be a hung parliament and will there be a coalition govt or a single part govt?
2. What will happen to IT ( Chandra) Babu?
3. What effect Rajni Fan’s will have on this election in TN?
4. How will Amma’s stubbornness will be meted out by the people in TN?
5. What will be the post election alliance ?

Saturday, May 08, 2004

My First Drink !!!

I could really remember very clearly when I had my first drink . it’s because it was done on an very important day in Indian Histroy. Guess What?.


We were on our first ever Educational(??!!) tour on our third semester EEE in ACCET in 1989.
I was one of the very few day scholars at the college and we were treated like a different kind of animals or to put it in other words , we were always treated like “FRUITS”.
May be because everyone else is enjoying their freedom at hostel , we were still struggling to breathe freedom outside our home to do “SUCH” things that any other adult would love to do at this age.

Our first destination was the famous “OOTY” the “Queen of Hills” and the first thing any one would think to do at OOTI is to have a “DRINK”.
So we pledged to have a beer as soon as we land in OOTY , since this would the first opportunity for us to stay away from out homes.

We landed in OOTY and checked in to the Hotel (YMCA) and were waiting eagerly for the night to come.
We very carefully avoided many folks , simple because they may notice that and make fun of this spreading this news.
Myself , Suresh Kumar , Raj kumar and Ravi shankar VB went to the nearest BAR and to our surprise the BAR WAS CLOSED. We thought may be the Shop was on holiday and went out looking for another BAR.
And to the surprise again , the next BAR was also Closed.
We were bewildered but never decided to give up , Remembering that this was our first stay outside home and we should make use of it fully.
We walked a mile away from this place to venture into a new area and to our sadness again the BAR’s in that region were also closed.
You could imagine our state of mind that time. We thought may be GOD was not willing to let us spoil (?) and be remained as “FRUITS” for ever.
Then I pulled up my courage and enquired a “kudi mahan” near the bar about what was the reason for the closure all the Bars.
He stared at all of us and laughed and then came the reply “Today is Gandhi Jayanthi”.
Oh! God. We ,Indians, totally forgot that “Gandhi Jayanthi” is the only day when all the Bars in India would be closed marking the respect for the Great Saint for his fight against “Liquor”.

So what next?.
Give up or ….

We , all four ,looked at each other and were for a moment speechless.
Then some one asked “Is there any other way to get a bottle of Beer?” and that “kudi mahan” answered thet we could go to the back door of the BAR and they might sell it there.,“Thanks to the Indian System” and sure we did it.
Finally we bought a bottle of beer and four of us shared it and of course got some kick out it.

Now you know well , How easy for me to remember the day when I took my first drink. It’s Gandhi Jeyanthi day. October 02nd 1989

Friday, May 07, 2004

Happy, Not Paranoid

Some snipperts from Silicon India
...
...

Craig Barret once remarked that “only the paranoid survive.” Jothilingam, however, takes it a step further and believes that it is the ones who are, in his words, “happy,” who thrive. He should know, for he is a person who has experience where it counts.


Life is Fun
“If you look at business or life,” expands Jothilingam, “you find three elements—people, processes, profits. If you manage yourself (in your life) and people (in your business), and are clear about the processes you adopt, profits will follow.” The bottomline is that it is not as much as getting to Point B from Point A, as much as the process of getting from Point A to Point B. “Think of anything you have done in life,” he says, his voice pitching higher to match the enthusiasm with which he is trying to get the point across. “It’s getting there that’s the fun. Say you want to make a million dollars, and someone hands it to you on a platter, you will not enjoy it. On the other hand, if you worked smartly at it, put the right things together, then you will. More than the guy next door who made a hundred million dollars.”

...
...

“Business is about people.” To have a successful business, one has to manage people well—build strong relationships. And, even more profoundly, that “the No. 1 relationship which a person has is with himself”. Then come family and friends, employees, vendors and customers. For all these relationships, there is one, and only one, guiding philosophy. That is to “treat people as you would expect them to treat you”.
...
...

-----------------------------------------------------------------------

For most part of my life I am in the "paranoid" category.
Treating people , I follow the same principle except when I am angry :)


முதல் கவிதை

நான் பெரிய கவிஞனில்லை. தொடர்ந்து எழுதுபவனும் இல்லை.
ஆனால் தமிழை நேசிப்பவன்.
1988-89 ல் எழுதிய முதல் கவிதை.
-----------------------------------------------------

அன்பே !

நீ கண்ணகியாக இருக்கலாம்
ஆனால் நான் மதுரையல்ல எரிந்து போக

நீ சீதையாக இருக்கலாம்
ஆனால் நான் நெருப்பல்ல உன்னை அணைக்க அஞ்சுவதற்கு

ஆனால் நான் தமிழன்
வெற்றியடையும் வரை விடா முயற்சிக்க...

Thursday, May 06, 2004

Anamikaa ( அனாமிகா )

எப்பொழுதோ லக்ஷ்மியின் கதையில் படித்த ஞாபகம்.
கல்லூரயில் கவிதை எழுத எண்ணம் வந்த பொழுது ஒளிந்து கொள்ள உதவியது.
அரூபமாய்...
பெயரில்லாதவன்...
எனக்கு மிகவும் பொருத்தமாய்...
எத்தனையோ பேருக்கு புனை பெயராய் இருந்த பெயர்...
எனக்கும் உதவிற்று...

முதல் கவிதை "சங்கமத்தில்" வெளி வந்த போது
சுற்றுலாவில் எல்லோறும் நண்பண் ராஜ்குமார் தான் இதை எழுதியதாய் நினைத்திருந்த பொழுது ,
அவன் தான் இல்லை என்று மறுத்ததை தூரத்தில் இருந்து ரசிக்க உதவிய பெயர்...

Professor T.R.T அதிசயமாய் வகுப்பறையில் வினவிய பெயர்...

என் புனை பெயர்...

என் முதல் தமிழ் BLOG

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
Read about Picasso Painting setting record for auction sale with 100+ millions and wondering how it might be connected to my recent interest to write Kavithai ( Poem) about "Thoorighai ( Paint brush)" :)

Frustrating day at work. I generally take others feedback well in the right sense ( Even if they don't mean it in that way) but today it was totally different. I was furious and fuming all day. Such incidents and remarks should propel me higher and higher.

Discussed with Ram how frustrating it is even to debug one simple code ( protocol handler...).
Technology has still lot to improve and we are in stone age still in IT. It's too soon to call "IT doesn't matter". I really feel that it is just the beginning of the beginning.


I often see some famous quotes as the foot note in some emails that are thought provoking.

Thinking about some of the qutoes I love

"Quality is never an accident. It is always the result of high intention , sincere effort ,intelligent direction and skillful execution. It represents the wise choice of many alternatives"

"We must be the change we wish to see"

"No person can be a great leader unless he takes genuine joy in the successes of those under him"

"My opinions may have changed, but not the fact that I'm right"

I will add more to this collection in later blogs.

Wednesday, May 05, 2004

Interesting day with lots of learnings.
Went for a walk with Shammu and it was very refreshing. Watched some of the old moives Anandh suggested in the library and the kids enjoyed the most.
Read about "Kallalagar" in SakthiVikatan and rememberd the childhood days in Manamadurai.
Thinking about writing a kavithai about "Thoorighai" after a loooooooooooooooong time ( a decade!!!).
I always select the "title" first and then think about what to write. That's me :)

Tuesday, May 04, 2004

It's wonderful to see Sundar Rajan and now Rajkumar started blogging regularly and share their poems , thoughts and their experiences in free flow and I am stunned to see how the IT and the web is morphing and evolving when everyone thinks this is the end. I have curtailed my sporadic intentions many times before to start blogging just to make sure that it's not temporary and I should not start just to join the bandwagon but I can commit it to it long and now I finally decided it's time to start.

Sunday, May 02, 2004

Hello World!!!
Just getting started ...