Tuesday, May 25, 2004

காலணி

துணை பிரியாத
காவிய நாயகன்...
அயோத்தியை
அரசாண்ட மன்னன் !


கொடுத்து கொடுத்து
தேய்ந்த கரங்கள்...
ஆதரித்தவனுக்காக
உயிரையும் கொடுக்கும் கர்ணன் இவன்!

அரசியல் மேடைகளில்
ஆவலாய் பறக்கும்...
ஆலயத்தின் முன்னால்
ஒதுங்கிவிடும் பகுத்தறிவுவாதி!


கால நேரம் தெரியாமல்
காலை வாரும் அரசியல்வாதி...
விமான நிலையத்தில்
விசேஷமான் கவனிப்பு இவருக்கு!


கல்யாண வீட்டில்
கள்வனோடு ஓடிப்போகும்...
வண்ண மங்கையரின்
செல்ல ஆயுதம்...

1 comment:

Vanthiyathevan said...

arumaiyaana karpanai. athenna ayutham appadai yippadinnu...nanna thane irukkell?