Monday, May 17, 2004

கலைந்தது கனவு!

முன் குறிப்பு : - கல்லூரி காலத்தில் கிறுக்கியது.

அன்பே!
உன்
விழியோரங்களில்
நான்
கண்ட
ஓரங்க நாடகம்...
என்
கனவில்
நினைவுத் திரை விலக...

நாயகன்
அரூபமாய்..
நாயகி
உன் சொரூபமாய்...

அன்பு
நட்டுவாங்கம் செய்ய
ஆனந்த தாண்டவம்...

கனவு பாசறையில்
அறிவு
துருப்பிடிக்க...
நிஜம்
நிதர்ட்சனமாய் சுட்டது...

நாயகனாக
துடிக்கும்
ரசிகனாய் நான்...

தூக்கத்தை தொலைத்து விட்டு
தேடிக் கொண்டிருக்கிறேன்
கனவை!

No comments: