Monday, October 17, 2011

சிணுக்கம்

உன் குரல் கேட்டு
ஓடோடி வந்த தருணங்கள்
எத்தனை!

ஏனிந்த கோபம்
எத்தனை முறை அழைத்தும்
ஏகாந்த மௌனம் !!

உன்னை தாண்டி
கண நேரம் கண் மேய்ந்ததில்
பொறாமையா !

கோபத்தில் கொட்டிவிடாதே
மையலில் பகிர்ந்த
ரகசியங்களை !!

மீண்டும் அழைப்பாய்
என காத்திருக்கிறேன்
காணாமல் போன
என் கைபேசியே !