Saturday, September 27, 2008

ஏமாற்றம்

ஏமாறுவதில் தான்
எத்தனை சௌகர்யம்!

அதிலும்
தன்னை தானே
ஏமாற்றிக் கொள்பவர்களை
விஞ்சியவர்கள் எவருமில்லை!!


மாற்றம் எனும்
அசுரன் மாயக் குரல்
கேட்டு காவியம் படைத்திட
விருப்பமில்லாமல்
இல்லாத இலக்குமண கோடுகளை
தானே வரைந்து கொள்வது
எளிது தானே!!!

நிஜங்களை
காண விரும்பாமல்
விழித்திரையை மூடி
தூங்குவதாய்
பிறரை ஏமாற்றிய பிம்பம்
தந்தாலும்
ஏமாற்றிக் கொண்டிருப்பது
தன்னையே என்பதை உணர்!!

மூடனாக்குவது
நீயே எனினும்
அதை முறித்திட
உன்
வசதி வட்டத்தை
விட்டு வெளியே வந்து
உன்னையே நீ வெல்!!!