Thursday, October 29, 2009

வரமாட்டாய் நீ என

கடிபட கிட்டாத நகங்கள்
நினைவுகளை கடிக்க தொடங்க..
நீண்ட நேரம் உனக்காக
காத்திருப்பது நினைவு வந்தது!

பாதையை அலசிய பார்வை
பார்ப்பவர் அனைவரிடமும்
உன்னையே கண்டு
அத்வைத்தை அறுதியிட்டது!!

காத்திருப்பது ஒரு
சுகவேதனை ...
எனவேதான்
உனை அழைக்காமல்
காத்திருக்கிறேன்!

வளரத் தொடங்கின
நகங்களும் நாட்களும்
தொடரந்திருக்க
வந்து விடாதே
நம்பிக்கையை தகர்க்க!!