Saturday, November 21, 2009

நாமவளி

என் முகம் அறியா பலருக்கும்
முகவரியாய் நீ இருப்பதனால்
உன் வடிவில் என்னை தனித்துக் காட்டிட
கிறுக்கிப் பழகாத பக்கம் இல்லை!

என் அடையாளத்தின்
ஆரம்ப தொடக்கம்
தொடங்கியது உன் வடிவில்

அதிர்ஷ்டத்தின் ஆசையில்
நீட்டவும் குறுக்கவும்
நினைத்ததில்லை
நிரந்தரம் நீ என்பதனால்

தீக்கோழியாய்
புனைப் பெயரில் புதைந்தாலும்
அணையாத தீச்சுடராய்
புலம் வருவது நீ தான்

உன் துணை இன்றி
என்னையே நான் என்று
நம்ப மறுத்திடும் உலகம்.