Friday, May 07, 2004

முதல் கவிதை

நான் பெரிய கவிஞனில்லை. தொடர்ந்து எழுதுபவனும் இல்லை.
ஆனால் தமிழை நேசிப்பவன்.
1988-89 ல் எழுதிய முதல் கவிதை.
-----------------------------------------------------

அன்பே !

நீ கண்ணகியாக இருக்கலாம்
ஆனால் நான் மதுரையல்ல எரிந்து போக

நீ சீதையாக இருக்கலாம்
ஆனால் நான் நெருப்பல்ல உன்னை அணைக்க அஞ்சுவதற்கு

ஆனால் நான் தமிழன்
வெற்றியடையும் வரை விடா முயற்சிக்க...

No comments: