Thursday, December 29, 2005

சரியா ! தவறா ? - 2

சரியா தவறா - 2

முடிவு என்பது ஒரு தெரிவு. ஒரு வழியில் செல்ல முடிவெடுத்தவுடன், மற்ற வழிகளில் செல்வது இல்லை என்றாகிவிடும் போது, எல்லா வழிகளுக்கும் அதற்கென்ற தர்க்கம், உத்வேகம், நியாயங்கள் இருக்கையில்முடிவெடுக்கும் போது கருத்து மோதல்கள் வருவது இயல்பு.

ஆனால் முடிவு செய்வதை கருத்து மோதல்களை சமாளிப்பதாக மட்டும் எடுத்துக் கொண்டால் சரியான முடிவு அமையாது. ஒரு பிரச்சனையை ,தீர்வின் ஆரம்பமாக பார்க்கும் அளவிற்கு ,எண்ணங்களை விரிவடையச் செய்வதன் மூலமே , சரியான முடிவை அடைய முடியும்.

முடிவெடுப்பதிற்கு மிகப் பெரிய முட்டுக்கட்டையாக இருப்பது மாற்றத்தைப் பற்றிய பயம் தான். எல்லா தெரிவுகளும் செயலுக்கு வழிகோலும். செயல் மாற்றத்தை உண்டு பண்ணும். விருப்பமில்லாத விஷயத்தில் முடிவெடுப்பதில் தடுமாறுவதை விட,திருமணம், வேலை மாறுதல் போன்ற நல்ல மாற்றங்களுக்கான முடிவெடுப்பது இன்னும் கடினமான ,அழுத்தமான செயல்.

தர்க்க அறிவும் (காரண காரணிகளும்) , மன உணர்வுகளும் , முடிவெடுப்பதில் சம ஈடுபாடு கொண்டவை. உணர்வுகளுக்கும் இடம் கொடாமல் ,வெறும் காரணங்களை மட்டும் ஆராய்ந்தால் எதிலும் நிலையான முடிவெடுக்க முடியாது. ஏனெனில் , உலகுன் பல விஷயங்கள் ஒன்றுக்கொன்று முரணானவை. உணர்வோடு ஒட்டிய பகுத்தறிவு தான் , நம்க்கு ஒத்த நல்ல பாதையை தேர்ந்தெடுக்க உதவம்.

செயல்படுத்தப் படாத எண்ணமும் , எண்ணாமல் எடுத்த செயலும் இல்லாமைதான்.கண நேரத்தில் எடுத்த பல முடிவுகள் சரியாக அமையும் போது , யோசித்து முடிவெடுப்பது தேவைதானா என்ற கேள்வியை எழுப்பும்.அதும் யோசிப்பது கடினமாகவும் , மன அழுத்தை தரும் போதும் , அது கொண்டு வரப் போகும் மாற்றத்தைப் பற்றிய பயத்தை பெரிதாக்கும் போதும் , எதற்காக யோசித்து முடிவெடுக்க வேண்டும் என்று தோன்றும்.
யோசித்து முடிவெடுப்பது , நம்மை முடிவின் மாற்றத்திற்கு தயார் செய்யும். வெற்றியுன் வாய்ப்புகளை இது அதிகரிக்கச் செய்யும். எனினும் , சில சமயங்களிம் மன உண்ர்வுகள் உந்தி தள்ளும் கண வேர முடிவுளும் சரியாக இருக்கும் என்பதையும் அறிந்திருக்க வேண்டும்.

மகிழ்ச்சியைத் தேடி

ஒரு பூனை தன் வாலை கவ்வி பிடிக்க தொடர்ந்து முயற்சி செய்து சுற்றி சுற்றி வந்ததாம்.அதைப் பார்த்த நகைத்த மற்றொரு பூனையிடம் , பூனைகளின் மகிழ்ச்சி அதன் வாலில் தான் இருக்கிறது என்பது தெரிந்ததால் தான் , என் வாலை பிடிக்க சுற்றி வருகிறேன் என்றதாம். அதைக் கேட்ட இரண்டாவது பூனை, அது எனக்கும் தெரியும். நம் வாலைப் பிடிக்க நாமே முயன்று சுற்றி வந்தால் , வால் நம்மை விட்டு விலகியே செல்லும் என்பதும் எனக்கும் தெரியும். அதை விட்டு , நம் வேலையை பார்க்க போனால் , சந்தோஷம் இருக்கின்ற வால் விலகிச் செல்லாது , நம் பின்னே வரும் என்றதாம்.

மேலே குறிப்பிட்ட தகவல்கள் சேகரிக்க உதவிய தளம் http://www.gita-society.com/section2/dharmic-management.htm

1 comment:

Suka said...

//முடிவெடுப்பதிற்கு மிகப் பெரிய முட்டுக்கட்டையாக இருப்பது மாற்றத்தைப் பற்றிய பயம் தான். //

Very well said. It is the same unreasonable fear that prevents one from making or accepting changes as well.

(sorry for English, Keyman is crashing)

Suka