Wednesday, December 14, 2005

சரியா ! தவறா ?

ஆய கலைகள் அறுபத்து நான்கில், முடிவெடுக்கும் ( முடி எடுக்கும் அல்ல) கலை தான் என்னை கவர்ந்தது போல. அது பற்றி என்ன கட்டுரை வந்தாலும் என்னை ஈர்த்து விடுகிறது.
"சரியான முடிவெடுப்பது கடினமல்ல. எடுத்த முடிவை சரியானதாக்குவது தான் கடினம்" (The problem is not to make the right decision; it's to make the decision right) என்ற மேற்கோளை சுட்டிக் காட்டிய பெரடரிக் ப்ரூக்ஸ் (Frederick Brooks)-ன் Fortune பேட்டியை படித்தவுடன் பிடித்து விட்டது.

http://www.fortune.com/fortune/print/0,15935,1135298,00.html

ஒரு முடிவின் இருபக்கம் 80/20 என்று கீழ்மட்டத்தில் மிகச்சரியான முடிவாக ஆரம்பிப்பது , ஒவ்வொரு நிர்வாக அடுக்கை தாண்டும் போது 70/30 , 60/40 என்று தேய்ந்து , கடைசியாக

உயர் அதிகாரிகளின் வசம் செல்லும் போது 49/51 என்ற அளவில் எந்த முடிவு எடுத்தாலும் அது சரியாகத்தான் இருக்கும் என்ற நிலையை அடைகிறது. எடுத்த முடிவில் உறுதியாக இருந்து செயல்படுத்துவதில் தான் வெற்றியே தவிர , இருபக்கமும் ஊசலாடுவதில் இல்லை என்று செல்கிறது.

பல விவாதங்களில் இரு பக்கங்களிலும் நியாயம் இருக்கிறது. சிக்கல்கள் ,நல்லதற்கும் கெட்டதற்கும் இடையில் வருவதல்ல. ஒரு நல்லதிற்கும் , மற்றொரு நல்லதிற்கும் இடையில் வருவது தான் என்று படித்தது , இந்த கட்டுரையை படித்த போது நினைவில் வந்தது.

1 comment:

வெளிகண்ட நாதர் said...

நல்லதொரு கருத்து!