Sunday, May 28, 2006

இரண்டு கால் பூச்சி

கடந்து வந்த பாதையின்
காலடி தடங்கள் கலைந்தது

விடிதலும் சாயலும்
விளக்கொளியில்
விரிந்து மறைந்தது

தேன் சிந்திய வானம்
திராவகமாய் எரிந்தது

கோழியின் கூவல்
வாகன இரைச்சலில் குறைந்தது

ஒப்பாரியும் ஓங்கார சிரிப்பும்
நாசூக்கில் நசுங்கியது

ஆட்டமும் பாட்டும்
தொலைக்காட்சி முன் அடங்கியது

பம்புசெட்டு குளியல்
பக்கெட்டில் படிந்தது

பாத்தி கட்டிய தோட்டம்
வரவேற்பறை காகித பூவானது

பூசி மெழுகிய ஒப்பனை
இழிக்கத் தொடங்கியதும்
இனம் புரியாத சோகம்
இதயம் முழுதும் வியாபித்தது

வழியக் காத்திருக்கும்
கண்ணீர் துளிகள் கனத்தது

மாறியது தெரிந்தே என்றாலும்
மருகுவது மட்டும் ஏன்?
வெருமையில் அசைபோடவா!


பட்டாம் பூச்சியானதா
இந்த இரண்டு கால் பூச்சி
இல்லை பச்சோந்தியானதா?

No comments: