Tuesday, November 28, 2006

பனி

பூ வரம்
கேட்டதோ
இந்த புல்லினம்
புதிதாய் பூத்துவிட்டதே
இந்த வெண் மல்லி !

வெள்ளை சட்டை
கேட்டதோ
வெற்றுடம்பில் வாடிடும் சாலை
விரிந்து ஆடையானதே
இந்த வெண்பருத்தி!

சருக்கு மரம்
கேட்டதோ
சிறு குழந்தைகள்
வீதிக்கு வந்ததே
இந்த வெள்ளிப் பனி மலை


பரிதியை
வென்றதே
பனி இன்று
பாரியானதாலா
ஈகையில்...

  Posted by Picasa

0 comments: