Monday, July 31, 2006

ஓடை

மலையைக் குடைந்த
ஓடை
மௌனமாகும்
மண்ணின் மடியில்

கருங்குகை
கரைந்தெடுத்த
கனிமங்கள்
கரை சேர்க்கும்

நிலவியலை
நிதம் செதுக்கும்
பசுமையைப்
பண்படுத்தும்

எனினும்
நொடி நேரம்
சுவம் கொளாது
பிரிந்து செல்லும்


விதிகளுக்கு அடங்காத
வீர்யம் பிறழாது
மீண்டும்
விண் நோக்கும்

No comments: