Tuesday, January 18, 2005

ஜகத் காரணம்

அரூபமே
ஆண்டவனென
தொழுகினோம்

ஆயுதம் பல
கொண்ட
ஆபத்பாண்டவனாய்
தரிசித்தோம்

ஆசைகள் நீக்கிய
ஆண்டியாய்
அருள் பாவினோம்

வரம் பல தந்திடும்
மாயாமாய்
மருகினோம்

ஆயிரம் கரம் கொண்டவனாய்
அச்சம் நீக்கிட
வேண்டினோம்

நீ பெரிது நான் பெரிதன
போட்டியிடும்
மானிட வடிவத்தில்
உனை வடித்து வணங்கினோம்

உயிரினம் பலவற்றின்
வடிவத்தில் உனை
போற்றினோம்

பஞ்ச பூதமாய் உன்
பதம் நாடினோம்

பாவம் நீக்கிட
வந்த பரிசுத்தனாய் உனை
பாவித்தோம்

நீ யாரோ எனினும்
அழிவு வந்த வேளையில்
அடைக்கும் தாழின்றி
வந்திட்ட அன்பிற்கு
காரணம் நீயே தானா?

ஜகத் காரணமே
நீ யாரென அறிய
ஏழாவது அறிவு
வேண்டுமோ?

No comments: