Saturday, May 07, 2005

பரிபாஷை

காலில்லா குதிரை
காதில் முளைத்த கம்பை பிடித்து
பறக்கும் ராட்டிணத்தில் பரவசம்!

மரக்குதிரை தான் எனினும்
மனம் விரும்பிய வெண்குதிரை
மாட்டாத வருத்தம் மனமெங்கும்...

பல நாள் கனவு
பாதியாய் கிட்டியதில்
சோகமா? சுகமா?

அடுத்த சுற்றிலாவது
அருகில் வருமா
ஆசை குதிரை
அல்லது...
அடுத்த சுற்றே அவ்வளவு தானா!

தவித்த மனத்திற்கு
தரை இறங்கிய தருணம்
சுற்றிய உலகம்
சுத்தமாய் புரிந்தது!!!

1 comment:

Mookku Sundar said...

அட..புரிஞ்சிடுச்சா..?? நீ பாக்கியசாலி.

இன்னமும் எனக்கு புரியலை குழந்தே...இன்னமும் குழப்பமா இருக்கறது...:-)