Saturday, November 01, 2008

கடவுள்

கல்லை
கடவுளாக்கி காட்டியது
சில மனித கைகள் தானெனினும்
என் வாழ்வில்
வெளிச்சமிட்டு காட்டியது
கண் தான ஒப்பமிட்ட
உன் கைகள் தான் !

வார்த்தைகளை
மந்திரமாக்கி
வாழ்த்து பாடியது
சில மனித குரல்கள் தானெனினும்
என் பார்வைக்கு
வாழ்த்து அழைத்தது
மரணத்திலும்
மறவாத
உன் வாக்கு தான் !!

No comments: