Sunday, September 27, 2009

கொலு

படிக்கட்டு கட்டி
பரணியில் இருந்த
பொம்மைகளை பழுது பார்த்து
மூளையை கசக்கி
முழுத்திறமையை காட்டி
புது விதமாய் கொலு பரப்பி
பஜனை பாடி
பட்சணம் கொடுத்து
பரபரப்பாய் உபசரித்து
பூர்வீக கதை பேசிய அம்மாவை
ஆச்சர்யமாக பார்த்தது
கடந்த வாரம்
விளையாட்டு பொம்மை வாங்க
போராடிய குழந்தை!

1 comment:

Sarvani Sathish said...

Very Nice poem Mey!! A fitting end to Navarathri.