Thursday, August 19, 2004

காற்றே நீதானா!

தென்றலாய் தழுவிய நீதானா
சூரைக் காற்றாய் இன்று!

காதல் தீபத்தை வளர்த்த நீதானா
காட்டுத் தீயாய் கருக்கியது இன்று!

காற்றாலையாய் இயக்கி வந்த நீதானா
அறுந்த மின்கம்பமாக்கியது இன்று!

பாய்மர கப்பலாய் செலுத்தி வந்த நீதானா
காகித ஓடமாய் சுழற்றியடித்தது இன்று!

பருவக் காற்றாய் வந்த நீதானா
கண்ணீர் மழைக்கு காரணகர்த்தாவாய் இன்று!

பூங்காற்றாய் வந்த நீதானா
பாலை அனல் காற்றாய் இன்று!

புல்லாங்குழலாய் இசைத்த நீதானா
பேரிரைச்சலாய் இன்று!

சுவசமாய் இருந்த நீதானா
சிதை எரிக்கும் நெருப்பிற்கு துணையாய் இன்று!

No comments: