Friday, January 21, 2005

அரைத் தூக்கம்

கனவிற்கும்
நினைவிற்கும்
இடையில் ஆடும்
ஊஞ்சல் ஆட்டம்!

கனவுலகில்
கனவு மாடு
செல்லும் வழி இல்லாமல்
கற்பனை குதிரை பூட்டிய
மனோரதத்தில்
விரும்பும் வழி ஊர்வலம்!!

விழிக்கும் முன்
அளிக்கும் உற்சாகம்..
விழித்தபின் தான்
விடாது சோர்வு!

இயந்திர வாழ்க்கையிலும்
என்றும் விடாது தொடரும்
ஆனந்த தவம்!


அலாரம் அடிப்பதற்கும்
அன்றாட கவலைகள்
எழுப்புவதற்கும்
இடைப்பட்ட
அரைமணி நேர
சொர்க்கம்!!

1 comment:

Anonymous said...

let ur tamil work continue. i am proud to be a tamilian after seeing ur blog (a microsoft employee writes kavidhaigal in tamil) cooooooooooooooool. keep the good work going!

gr8!