Wednesday, February 23, 2005

சருகு

சருகு

காலம் மாறியதும்
கடந்தவை மறந்து
கண நேரத்தில்
உதிர்த்த உன்னை விடுத்து
காரணம் காற்றே என நினைத்து
உயிர் விட்டாலும்
உரமாகியாவது உனை
நலமாக்கலாம் என
மக்கி மடிய தவமிருக்கையில்...

காலனாய் வந்த காற்று
கர்ணனாய் தோள் கொடுத்து
எனை உயரத் தூக்கி
உன் அருகில் கொணர்ந்த போது
பாராதது போல்
பாசங்கு காட்டி
பறந்த எனை
கீழே தள்ளியது
ஏன் கிளையே?
புதிதாய் பூத்த
உறவுகளா!

No comments: