Thursday, September 06, 2007

வெள்ளை யானை

வீதி வழி வந்தது
வெள்ளை யானை!


வெல்லத்திற்கும் பழத்திற்கும்
வளைந்து குனியாமல்
அம்பாரி சுமப்பது போல்
அமைதியாய் அடி வைத்தது!


தர்மத்திற்கும் செழிப்பிற்கும்
அடையாளமான காலம் போய்
வீண்செலவாய் அறிந்திட
விருப்பமில்லாமல் விடை பெற்றது!


காவிய பாத்திரம்
என மட்டுமே அறிய போகும்
காலத்தை நோக்கி
மெல்ல அடி வைத்தது!


மதம் கொண்ட
பிளிரல் இல்லை அதனிடம்
மௌனத்துடன்
அபூர்வம் அருவமாகியது!


நிறங்களின் பேதம்
நிழல்களை தான் பிரிக்கவில்லை
என்ற நிஜம்
நிழல் வரா நேர பகலவனாய்
உச்சந் தலையில்
ஓங்கி அறைந்தது!

No comments: