Saturday, September 29, 2007

பால பாடம்

எழுதாத சிலேட்டை
எடுத்து வந்தேன்னு
கோவத்தில் குட்ட வந்த
வாத்தியாரு
முன் ஜாக்கிரதயாய்
மோதிரத்தை கழட்டிக்கிட்டு கத்தினாரு
"பழைய சிலேட்டுனாலும்
பாழும் அடுப்புக்கரி பூசியிருக்கலாம்" என்று

பாவம் தெரியவில்லை
அவருக்கு
மதியம் வரை காத்திருக்க
கடித்து தின்ன சிலேட்டுக் குச்சி
வயிற்றுக்குள் எழுதிய பாடம் !

2 comments:

Subbiah Veerappan said...

எட்டும் அவர்பெயர் காவல்துறை என்பதனால்
குட்டும் வாத்தியார் இன்றில்லை! அறிக!:-))))

லக்ஷ்மி said...

கவிதை ரொம்ப அருமையா இருக்கு.