Sunday, June 22, 2008

ஜீரோ வாட் பல்ப்

இருளுக்கும்
பொலிவு தந்திடும்
வெளிச்ச பூவாய்
வீட்டு வாசலில்
நித்தம் பூத்திடும்
வாடா மல்லியின்
வாசம் மறைந்தது இன்று...

ஏழு குதிரை பூட்டி
எட்டாத தூரம்
சென்றிட்ட தலைவன்
வருகைக்கு காத்திருக்கும்
விசுவாச வேலை
விடைபெற்றது இன்று...

அன்னிச்சை செயலாய்
அந்தி மாலைப் பொழுதில்
நித்தம் வணங்க வைத்த
வெளிச்ச அபிஷகம்
நிறையச் செய்தது
நினைவலைகளை...

இரவை பகலாக்கும்
வித்தை கற்ற
வெளிச்ச கர்வம் காட்டாத
கரிய யோகியின்
கடமையை வணங்கி
இருள் துக்கம்
அனுஷ்டிப்பேன்
சில நாட்கள்...

No comments: