இருளுக்கும்
பொலிவு தந்திடும்
வெளிச்ச பூவாய்
வீட்டு வாசலில்
நித்தம் பூத்திடும்
வாடா மல்லியின்
வாசம் மறைந்தது இன்று...
ஏழு குதிரை பூட்டி
எட்டாத தூரம்
சென்றிட்ட தலைவன்
வருகைக்கு காத்திருக்கும்
விசுவாச வேலை
விடைபெற்றது இன்று...
அன்னிச்சை செயலாய்
அந்தி மாலைப் பொழுதில்
நித்தம் வணங்க வைத்த
வெளிச்ச அபிஷகம்
நிறையச் செய்தது
நினைவலைகளை...
இரவை பகலாக்கும்
வித்தை கற்ற
வெளிச்ச கர்வம் காட்டாத
கரிய யோகியின்
கடமையை வணங்கி
இருள் துக்கம்
அனுஷ்டிப்பேன்
சில நாட்கள்...
Sunday, June 22, 2008
Subscribe to:
Post Comments (Atom)

1 comments:
உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது. மேலும் அதிகமான இணைய நண்பர்களுக்கு உங்கள் பதிவினை கொண்டு செல்ல http://www.tamilish.com -ல் சமர்பிக்கவும். வாழ்த்துக்கள்
Post a Comment