Saturday, June 07, 2008

முள்ளும் மலையும்

முள்காடு குத்திடுமென
தரை இறங்காமல்
முன் நகர்ந்த
முகிலனமே!

நான் மலராகாமல்
மோக முள்ளானது
உன்னால் தான் என அறிவாயா?

நீ
முச்சி உகர்ந்திடும்
உயர் மலையின்
பனி விரல் ஸ்பரிசம்
மறைத்திடும்
வெடித்து சிதறும்
அதன் எரிமலை இறுக்கம்
என அறியாயோ?

No comments: