Friday, May 22, 2009

நூலகம்

கலைத் தாயை
அரசாளும் கட்சிகளின்
அனுதாப பத்திரிக்கைகள்
அலங்கரிக்க
முழுக் கதையின்
முடிவைக் கிழித்து
கலைப் பூசாரிகள்
ஆராதிக்க
கற்பனை பிரசாதம்
பெற்ற இடம்!!


பத்திரிக்கைகளை
பகிர்ந்து படிக்க
அமைதிப் பிரகாரம்
அனு தினமும்
சுற்றிய இடம்!!

அறிவுப் பக்திக்கு
அடிபணிந்து
ஒரு சிறு கையெழுத்து
வேண்டுதலில்
விலகிடும் நந்தி
விரிந்திடும் விசுவரூபம்!!!


அங்கே
தினம் திறந்திடும்
சொர்க்க வாசல் !
அது
காட்டிடும் தினம்
புது வழி !!

No comments: