Sunday, January 03, 2010

புதுவருட வாழ்த்துக்கள்

புதிய சுப்ரபாதமாய்
குத்துப் பாட்டு ஒன்று
டீக்கடையில்
எழுப்பிக் கொண்டிருந்தது!

இலையாய் , இருக்கையாய்
துண்டாய் , தோரணமாய்
அவதரிக்கும் நாளிதழ் பிரம்மம்
உலக ஜீவன்கள் அனைத்திற்கும்
பிரசுரித்திற்கும் ஒரே ராசி பலனை
சத்தமாய் படித்து பரவசமானது
அதிகாலை துயில் எழும் ௬ட்டம்!

நிறைமாதமாய்
நிரம்பி வழியும் பேருந்து
குழிகளில் சாலையை தேடி ஓடும்
விரக்தியில்
அபய ஒலியை எழுப்பி
தன் வருகையை
சப்தமாய் வெளிப்படுத்தி சென்றது!

வராத வேலைக்காரியை
வாசலில் சபித்துக் கொண்டிருந்த
அம்மாவிற்காக
சிணுங்கி கொண்டிருந்த தொலைபேசி
கேட்க வழியின்றி அடங்கியது!

வாழ்த்துக்களை பரிமாறிப்
பழக்கமில்லாத கிராமத்தில்
புதுவருட வாழ்த்துக்கள்
வாழ்க்கையின்
ஒவ்வொரு ஒலியிலும் தான் !

No comments: