Sunday, April 05, 2009

பாலம்

ஊரை ஒட்டாமல்
சற்றே தள்ளி உயர்ந்திருந்தது
புதிய பாலம்!
தண்ணீர் காணாத தாகத்தில்
புதுப் பாலம்
எதெற்கென விழித்திருந்தனர்
ஊர் மக்கள்!

இமயத்தையும் குமரியையும்
சாலையில் இணைத்த
பெருமையில்
அர்ப்பணிக்க வந்தார்
கல்வெட்டு நாயகர்!

தண்ணீர் தராத மாநிலத்தை
தரையில் இணைக்க தகாதென
ஊர் திரள
ஒடியது அங்கே
இரத்த ஆறு!

உள்ளம் இணையாத மக்களின்
ஊர்களை இணைத்த
வெட்கத்தில் குறுகியது பாலம்!
அதை படமெடுத்து
நாளைய சரித்திர சாட்சியாக்கியது
நாசா விண்வெளி.

No comments: