Sunday, July 04, 2004

மரண தண்டனை ?

மரண தண்டனை சரியா , தவறா என்ற விவாதம் பற்றியது அல்ல இந்த பதிவு.கல்கத்தா சிறுமியின் கொலை வழக்கு குற்றவாளியின் கருணை மனு பற்றியும், அதைத் தொடர்ந்து விருமாண்டி மாதிரி மரண தண்டனை தேவையா இல்லையா என்று விவாதித்தும் பல பதிவுகள் வந்து விட்டது.அதனால் அதைப் பற்றி இங்கே விவாதிக்கவில்லை.

கருணை மனுவை பரிசீலிக்கும் ஜனாதிபதியின் மன நிலை எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்தேன். ஒரு உயிர் குறித்து முடிவு எடுப்பது எவ்வளவு கடினமான விஷயம். இது போல் எண்ணற்ற வழக்குகளில் தண்டனை வழங்கும் நீதிபதிகள் ஒவ்வொரு முடிவு எடுக்கும் போதும் எவ்வளவு கஷ்டப் பட வேண்டியிருக்கும்.

சிறு விஷயங்களில் கூட முடிவெடுக்க திணறும் ,"எண்ணித் துணிக கருமம்" என்ற வள்ளுவரின் வாக்கை என்றென்றும் எண்ணி முடிவெடுத்தாலும், பின்னாளில் தவறான முடிவென்று வருந்தும் என்னைப் போன்ற எண்ணற்றவர்களைக் கொண்ட சமுதாயத்தில் இருந்து தான் இத்தகைய நீதிமான்கள் தோன்ற வேண்டியுள்ளது.

குற்றம் புரிந்தவர் யார் என்று சரியாக கண்டு பிடிப்பதும், குற்றத்தின் அளவிற்கேற்ப தண்டனை வழங்குவதும் மிகக் கடிய பணி. அதை தொண்டென புரியும் , நீதி தவறாத , தண்டனை கொடுக்க அஞ்சாத, சரியான முடிவெடுக்கும் ,கடின சித்தம் படைத்த நீதிமான்கள் , மானிட சமுதாயம் சரியான வழியில் என்றும் சென்றிட மிக மிக தேவை.

No comments: