Tuesday, May 18, 2004

பாரதியும் நானும்...

மூன்று அல்லது நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிறுந்த போது என்று நினைக்கிறேன்.
மழைக்காக பள்ளியில் ( ஒக்கூர் வெள்ளையன் செட்டியார் ஆரம்ப பாட சாலை , மானாமதுரை) ஒதுங்கிய மாலை வேளை!
நான் முதலாம் வகுப்பு படித்த அறையில் ஒரு இளம் பேச்சாளார் மிக ஆவேசமாக , அற்புதமாக பேசிக் கொண்டிறுந்தார்.
பால்ய விதவைகளின் அவலங்களை கண்ட பாரதியின் கோபத்தை , அதை பிரதிபலித்த கதை , கவிதைகளை பற்றி விவரித்தார்.இந்த மாதிரி கொடுமை செய்பவர் இருக்கும் இடத்தில் நில நடுக்கம் வந்து அந்த பச்சிளம் பாலகிகளை தவிர மற்ற அனைவரும் மடிய வேண்டும் என்று சொல்லியதாக ஞாபகம்.என் மூத்த அண்ணன் மறைந்து , அண்ணி விதவையாக அப்பொழுது இருந்ததாலோ என்னமோ தெரியவில்லை, அந்த பேச்சில் மிகவும் கவர்ந்து போனேன்.அன்று பிடிக்க ஆரம்பித்தது பாரதியை...
"சாதிகள் இல்லையடி பாப்பா" என்று பாடத்தில் படித்த போது, என் நெஞ்சில் நீக்க மற நிறைந்தார்.
பின் பாரதியின் பாடல்களை தேடிப் படித்தேன். பெரும்பாலும் எனக்கு பிடித்தவை அவரின் மிகப் பிரபலமான பாடல்களே.. அதனால் அவற்றை இங்கே வரிசை படுத்த வில்லை.

விடலை பருவத்தில் "பாரதி" என்று பெயர் கொண்ட பெண்களின் பின்னால் மையல் கொண்டு அலைந்ததற்கும் , இதற்கும் அறிவுப்பூர்வமாக எந்த சம்பந்தமும் இல்லை.

3 comments:

Boston Bala said...

Can U increase the font size? Thanks :)

Mookku Sundar said...

welcome meyyappan.........

மூக்கன்

Mey said...

1) I changed the font-size from 80% to 100% and hope it looks good now. ( I couldn't see much diff)


2) Sundar- It all started because of you :).