Monday, May 24, 2004

யார் இட்ட சாபம் !

அரை மணி நேர பயணத்திற்கு கூட
அமர்ந்து செல்ல
பேருந்தில் இடம் பிடிக்க
முண்டியடிக்கும் பொதுஜனம்!!


பெற்ற பிள்ளை
கசடற கற்க
கல்வி கூடத்தில் இடம் பிடிக்க
காத்து நிற்கும் பெற்றோர் கூட்டம்!!

கன்னியரின்
காதல் மனதில் இடம் பிடிக்க
கடுந்தவம் செய்யும் காளையர் கூட்டம்!!

தலைவர் படத்தை
முதல் நாள் பார்க்க
திரையரங்கில் இடம் பிடிக்க
மோதிக் கொள்ளும் ரசிகர் கூட்டம்!!


எந்த அரசு வந்தாலும்
அமைச்சரவையில் இடம் பிடிக்க
எதையும் செய்யும் அரசியல் கூட்டம்!!


யார் இட்ட சாபம்
இந்த "இடம் பிடிக்கும்" தண்டனை
மானுட சமுதாயமே அல்லல்படுகிறதே!

2 comments:

PKS said...

Saw my classmate Sivagnanakumar family photo in your album. He told me now that he is your good friend. Glad to know. Regards, PK Sivakumar

Mey said...

Dear PKS , Vary clad to know that Sivagnanakumar is your friend too. The world is small and the internet and blog has made it even smaller.