Thursday, May 27, 2004

கஞ்சனும் பட்டினத்தாரும்

நான் ஒரு கஞ்சன் என்பது என்னுடன் கல்லூரியில் படித்து , பின் பெங்களூரில் வேலை பார்க்கும்
போதும் , என்னுடன் ஒரு வருடம் தங்கியிருந்த என் நண்பன் செந்தில்குமாரின் திண்ணமான எண்ணம்.அப்பொழுதெல்லாம் , என்னைப் பார்த்து பின் வரும் பாடலை கூறி என்னை கிண்டல் செய்வான்.

"பாடுபட்டு தேடிப் பணத்தை புதைத்து வைத்த
கேடு கெட்ட மானிடரே கேளுங்கள்
கூடு விட்டு ஆவிதான் போயின பின்
யாருக்கால் உதவும் பாவிக்கால் இந்த பணம்"

இப்பொழுது உலகின் எந்த புறம் இருக்கிறான் என்பதே எனக்கு தெரியவில்லை. இது பட்டினத்தார் பாடல் என்று அவன் சொல்ல கேட்டிருக்கிறேன். இது நிஜமாகவே பட்டினத்தார் பாடல் தான இல்லை அவனது சொந்த சரக்கா அல்லது வேறு யாரேனும் எழுதியதா என்று தெரிந்து கொள்ள ஆசை. இதில் உள்ள தவறுகளை திருத்திக் கொள்ளவும் ஆசை.

நான் தேடிய வரையில் http://www.infitt.org/pmadurai/mp083.html -யில் இது பற்றி குறிப்பிட படவில்லை. இது குறித்து தெரிந்தவர்கள் யாரேனும் இதை நிவர்த்தி செய்தால் நன்று.


4 comments:

PKS said...

I may be wrong. I was thinking it is Avvaiyaar paadal. Ennidam Patinathaar paadalkal book irukirathu. When time permits, I will check and let you know.

சுந்தரவடிவேல் said...

அட! இங்கயும் சித்தா?!:)

சத்யராஜ்குமார் said...

ithu avvaiyaar paadal.

yaarE anubavippaar paavikaaL anthap paNam

- enRu mudiyum.

Mey said...

மிக்க நன்றி.